Monday, January 11, 2010

தியானமாய் தூக்கம்















போர்வை

இழுத்து மூடியப்படியே

படுத்துறங்கிய

அதிகாலை

விழிப்பு தட்டும்

ஒரு முகமாய்

எண்ணங்களால்

ஏதோ ஒரு

மந்திரம்

தியானம் செய்வதாய்

எண்ணங்கள்

தேய்ந்துதூக்கம்

திடீரென்று

விழித்தெழும்மனது

பதற்றமாய்

தன்னையே நொந்து

தொடர் நிகழ்வு

முயற்சியின்மை

தியானமாய்

தூக்கம்.

Sunday, January 10, 2010

பெற்ற மனம்











நடக்க முடியா

சூம்பிய கால்கள்

சுப்பன் போகிறான்

பூங்காவுக்கு

ராமன் போகிறான்

கோவிலுக்கு

ஏக்கமாய் எங்கள்

மனது

யார் துணை

தேடியும் யாரும்

இல்லை எங்களுக்கு

பெற்ற மனம்

பதற

அய்யோ ..

எம் புள்ளங்களா..

நான் இருக்கேனடா

உங்களுக்கு..

தள்ள என்கைகள்

ஊனம் இல்லை

தள்ளி வருகிறேனடா

நான் உங்களுடைய

கைவண்டியை

நான் பெத்த

மவனே...

Thursday, January 07, 2010

மனம் தான் என்ன?




















மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த பயம்

மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த மகிழ்ச்சி

மனம்

போ என்றவுடன்

போக துணிந்த

கால்கள்

கட்டளைகள்

கிடைத்தவுடன்

செயல்களில்

புலன்களின் ஈடுபாடு

நிற்க துணிந்த

மனம்

சாக துணிந்த

மனம்

மனம் மட்டுமே

வாழ்வாய்

மனம் தான் என்ன?

LinkWithin

Related Posts with Thumbnails