Friday, May 07, 2010

நீங்க சாமிய பாத்துருகீங்களா.

ஓரே இடத்தில் உழன்று கொண்டிருந்ததால் மனதுக்கு சிறிது மாற்றம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் முடிவு செய்து எங்கள் ஊர் பக்கத்து ஊரில் இருக்கும்  பெரியவர் ஒருவரின் ஜீவசமாதிக்கு சென்றுவருவோம் என்று முடிவு செய்து அந்த ஊருக்கு சென்றோம்.          

முதல்தடவை சென்றபோது அந்தஇடத்தின் அமைதி  மிகுந்த மனநிம்மதியை கொடுக்க அடுத்த பத்துநாட்கள்  கழித்து திரும்பவும் அதே இடத்திற்கு சென்றோம்.

இந்தமுறை முக்தி அடைந்த பெரியவரின்  கதையை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அந்த ஊர்  முதியவர் ஒருவரை
அணுகினோம்.

தம்பி எனக்கு வயசு எண்பத்தஞ்சு…

அய்யா நீங்க  சாமிய பாத்துருகீங்களா.

நல்லா பாத்துருக்கேன் பெப்பர் மி்ட்டாய் இல்ல அப்ப டின்லு தான் வரும்  அத வாங்கிட்டு பாக்கறவங்களுக்கு ஒரு கைப்பிடி கொடுக்கும் தம்பி.

அய்யா இங்க வந்தவரா  பொறந்தவரா

இல்ல தம்பீ பக்கத்து ஊருல மாடு மேய்ச்சுகிட்டு இருந்திச்சு ஒரு நாள் ரொம்ப நேரம் தூக்கிட்டுன்னு
வேலைக்கு வைச்சிருத்தவன் அடிச்சான் .

அந்தநேரம் பாத்து எங்க ஊரு லேந்து போனவங்க  ஏம்பா அடிக்கிறேன்னு கேட்டு அத அழச்சிட்டு வந்துட்டாங்க  அதிலேந்து அது இங்கதான்.

அது தான்  அந்தா இருக்கு பாருங்க அந்த முருகன் கோயில கட்டிச்சு அப்புறம் கிராமத்துல சேந்து பெரிசா கட்டினாங்க.

இங்க ரெண்டு குடும்பம் இருந்தீச்சு  எனக்கு தெரிஞ்சு பத்துவேலி நெலம்   அவுங்களுக்கு சாமிய பாத்து சாமியாவது   பூதமாவுது  ரொம்ப கடுப்பு ஏத்திகிட்டே இருந்தாங்க..

சாமி  போறப்ப  …நீங்க உருப்புடமா போவீங்க சொன்னிச்சு இன்னிக்கு  பத்து மா நெலம் கூட இல்ல தம்பீ.

அப்புறம் எங்கபோச்சு ங்க சாமி..

சாமியா அப்படி சொல்லும் சந்தேகம் எங்களுக்கு ஆனாலும் கேட்கவில்லை.

இந்த ஊரு கொடுத்து வைக்க ல  எங்கேயோ மெட்ராசுக்கு பேறவழியாம் அங்க போயி சமாதி ஆயிடுச்சு.

அது வாழ்ந்தது இங்க சமாதி அங்க தான் தம்பி.

வெளியூர் ஆளுங்க வந்து என்ன என்னம்மோ செய்யுறாங்க தம்பி  எல்லா பெரிய ஆளுங்க..

அத நல்லபடியா கவனிச்சு வைச்சிருந்தா இந்தஊரு  இன்னநேரம் எங்கேயோ தம்பி .

வர்றேங்க என்று விடைபெற்று
நிறைய சந்தேகங்களுடன் அந்த இடம் அகன்றோம்.

Thursday, May 06, 2010

வரதட்சணை



கேட்கையில்
பேசுகையில் போதும்
இடைசொருகலாய்
இன்னொருவரின்
வார்த்தைகளாய்
இன்னும் வேண்டும்
திகைத்த பெண்வீடு
பின்வாங்க
பெண்ணுக்கு
மாப்பிள்ளை தேடுதல்
புதுமுயற்சி

Monday, May 03, 2010

எந்ததுறையிலமவுசு அதிகம்



கணினி துறையில்வேலைப் பார்த்துவரும் நண்பர் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்தோம்.  இன்னொரு நண்பர்  டியூசன் சென்டர் நடத்திவருகிறார்.

அவரிடம் அந்த நண்பர் கேட்டார் இப்ப எல்லாரும்  சாப்ட்வேர்  ..சாப்ட்வேர் அப்படின்னு சொல்லுறாங்க..  இப்ப அதோட மவுசு கம்மி வருங்காலத்துல எந்ததுறையிலமவுசு அதிகம்  அப்படின்னு கேட்டாரு.

இப்ப நான் படிச்சு தெரிஞ்சிகிட்டவரையிலும் சோலார் எனர்ஜி ,   காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம்போன்ற துறைகளில் நல்லதொரு வாய்ப்பு உள்ளது.

நீங்க தான் உங்க மாணவர்களுக்கு   சொல்லனும்.நாங்கசொல்லறதுக்கும் நீங்க சொல்லற வித்தியாசம் நிறைய உண்டு. இன்னொரு கொடுமையான விசயம் என்ன அப்படின்னா ஆசிரியர் பயிற்சி முடிஞ்சு வாத்தியார் ஆன  பெரும்பாலானவர்கள் உலகில் நடக்கும் எந்த மாற்றங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை.  இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சரியான வழியை காட்டிவிடமுடியும்.

நாம தான் ஏதோ நம்மால் ஆன முயற்சி செய்துபார்க்கவேண்டும்  என்று கூற வேலை  ..வேலை என்று வேலை கிடைப்பதற்குமுன் அதற்கு உள்ள முயற்சி வேலை கிடைத்த பிறகு அதற்குண்டான அர்பணிப்பு உணர்வு மிகவும் கம்மியாக உள்ளது.

போலீஸ்காரர்கள் யாரும் வேலை கிடைத்தபிறகு உடற்பயிற்சி செய்வதே கிடையாது வேலை கிடைப்பதற்கு முன்  எப்படியெல்லாம் தன் உடலை வருத்தி கொண்டிருப்பார்கள் தெரியுமா..

மாற்றங்கள் தேவை.  அந்த மாற்றங்களை உங்களை போன்ற ஆசிரியர்கள் தான்   விதைக்க வேண்டும் என்று கூறினார்.

LinkWithin

Related Posts with Thumbnails