Wednesday, December 19, 2012

மாயன் காலண்டரும் மனித வக்கிரமும்


நேற்று சொந்த வேலையின் காரணமாக தஞ்சை சென்றேன். அதில் ஒரு வேலை பேண்டின் அளவை கூட்ட குறைக்க தெருவோர தையல்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு தையல்காரரை அணுகி என்னுடைய வேலையை முடிக்க கொடுத்து காத்திருந்தேன்.

சாப்பாட்டு நேரம் ஆகையால் பக்கத்து கடை தையல்காரர் தன்னுடைய வீட்டிற்கு மிதிவண்டியை ஏறி மிதிக்க எத்தனிக்கையில் எதிர்புறமாக தன்னுடைய தாய் தந்தையுடன் ஓர் இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்.

மிதிவண்டியில் அமர்ந்திருந்த தையல்காரர் தைத்துகொண்டிருந்த தையல்காரரிடம்
என்னப்பா வர்ற 21ம் தேதி உலகம் அழியப்போகுதாமே அதுக்குள்ள அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுருப்பா..

என்ன சொல்றே நீ...என்று கேட்க

அந்தா வர்ற பொண்ண புடிச்சு.........(மோசமான உடலறவு) வர்ணித்து சொல்ல ..

அடுத்த அடுத்த செய்திகளால் அந்த பகுதி தடம்மாறிப்போனது.

இப்படியும் மனிதர்கள்.

Friday, October 26, 2012

நாட்கள் மாதங்கள் கடந்து.....

நாட்கள் மாதங்கள் கடந்து  திரும்பவும் வலைப்பதிவின் பக்கம் நடைமுறை வாழ்க்கை நிகழ்வுகளில் காணாமல்  போன சுய நடவடிக்கைகள்   ஒருபுறம் நல்லநட்புகளின்  பதிவுகளை படிக்காமல் இருந்தது என நீண்ட........  பிறகு



Friday, May 11, 2012

பாவம் இந்து மதம்…!!!??



இந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.  பாவம் இந்து மதம்…!!!??

கதவை திறந்து வைத்ததில் மதுரை  ஆதீனமாக மாறிவிட்டார்.

கௌ   ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர் நடத்திகொண்டுள்ளார்கள்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால்  இப்பிரச்சனை பேசப்படுவது  எங்கே போய் சொல்ல....



LinkWithin

Related Posts with Thumbnails