அவனுக்கு அது போதாத காலம் எது எடுத்தாலும் அவனுடைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப செயல் அமைந்ததே கிடையாது.
அவனுக்கு பெண் பார்த்தார்கள் அவனுடைய குடும்பத்தில் ஜாதகம் முக்கியம். அவருடைய ஜாதகத்தில் அப்பா அம்மா இல்லாத பெண் தான் முடிய வேண்டும். அப்பா அம்மா இருந்தால் சரியாக வராது என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொல்ல தேடினார்கள் நீண்ட தேடுதல்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணை ப்பார்த்தார்கள் மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை அந்த சம்மந்தம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்.
அடுத்த ஒரு நீண்ட தேடல்மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்திருக்க நாங்களும் ஒரு தடவை ஜாதகம் பொருத்தம் பார்த்து விட்டு மேற்கொண்டு சொல்கிறோம் என்று மாப்பிளையின் ஜாதகத்தை வாங்கி சென்று அவர்களுடைய குடும்ப ஜாதகம் பார்ப்பவரி டம ் பார்க்க அவர் கொஞ்சம் பொறுத்து செய்யலாம் என்று சொல்ல மாப்பிள்ளை வேண்டாம் என நிராகரித்தார்கள்.
மாப்பிள்ளை படு அப்செட் இவர்கள் ஜாதகம் பார்த்த இடத்தில் செய்யலாம் என்று சொல்ல அவர்கள் பார்த்த இடத்தில் வேண்டாம் என்று சொல்ல இவர் நிம்மதியை தேடி கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டில் பெண் தேடி கொண்டு இருக்கிறார்கள்.
நம்முடைய நிம்மதி கெட நாம மட்டுமே காரணம் கெடையாதுங்க..
Friday, February 27, 2009
என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…
படித்தவளாக இருக்கவேண்டும். அன்புடன் அனுசரிப்பவளாக குடும்பத்துடன் ஒத்து போககூடியவளாக இருக்கவேண்டும்.
ஆடம்பரம் கூடாது. அடக்கம் வேண்டும். ஆஹா..ஓஹோ…….என்று இல்லாமல் அழகு வேண்டும்.
கோபம் செய்யுமிடத்து கோபம் வேண்டும். இன்று வாழ்வில் இணைந்ததற்காக என் பிறந்த நாளிலிருந்து தொடர்புடையவர்களை பிரிக்காத குணம் வேண்டும்.
வசதி வேண்டாம் கஷ்டம் தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும். என் வருமனத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் ஆசை படுவளாக இருக்கவேண்டும்.
பேசும் நேரமறிந்து பேச வேண்டும். வளர்ந்த சூழல் எவ்வாறு இருந்தாலும் புதிய சூழலில் தன்னை விரைவாக மாற்றிகொள்ளும் பக்குவம் வேண்டும்.
என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…
ஆடம்பரம் கூடாது. அடக்கம் வேண்டும். ஆஹா..ஓஹோ…….என்று இல்லாமல் அழகு வேண்டும்.
கோபம் செய்யுமிடத்து கோபம் வேண்டும். இன்று வாழ்வில் இணைந்ததற்காக என் பிறந்த நாளிலிருந்து தொடர்புடையவர்களை பிரிக்காத குணம் வேண்டும்.
வசதி வேண்டாம் கஷ்டம் தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும். என் வருமனத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் ஆசை படுவளாக இருக்கவேண்டும்.
பேசும் நேரமறிந்து பேச வேண்டும். வளர்ந்த சூழல் எவ்வாறு இருந்தாலும் புதிய சூழலில் தன்னை விரைவாக மாற்றிகொள்ளும் பக்குவம் வேண்டும்.
என் பொண்டாட்டி என்பவள் இப்படியாக…
Tuesday, February 24, 2009
விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.
தென்கிழக்காக வீசியது காற்று . காற்றின் போக்கில் பரவிய துர்நாற்றம் யாருடைய மனதிற்குள்ளும் எங்கிருந்து வீசுகிறது? என்ற வினாவினை எழுப்பாமல் இல்லை.
குளக்கரையின் ஓரத்தில் நின்றிருந்த அரச மரம் ஆழ மரத்தின் கிளைகளில் சின்னதும் பெரியதுமான பைகள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு பையிலிருந்து திரவம் வடிந்து கொண்டிருந்தது. மற்றொரு பை காய்ந்து சருகாய் போயிருந்தது.இது போன்று பல பைகள் கட்டப்பட்டிருந்தன.
மரம் உள்ள பகுதியினை கடக்கும் மனிதர்கள் தன்னுடைய விரல்களின் உதவியால்மூக்கை இழுத்துபிடித்தவாறு சுவாசிக்காது விரைந்து கடந்து விடுவார்கள்.
கடந்து போய் விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.
நிம்மதியாய் மூச்சை இழுத்து விடுவார்கள்.
அன்றைக்கு கட்டபட்ட பை புதிததாக இருக்கும் . திரவம் வெளியேறி கொண்டிருக்கும் பை நான்கைந்து நாட்கள் முன்பு கட்ட பட்டதாக இருக்கும். பத்து பதினைந்து நாட்கள் என்றால் திரவம் வெளிவந்து பை காய்ந்து போயிருக்கும் .
மரத்தின் அருகில் சென்று பைகளின் எண்ணிக்கையை அறிந்தால் அந்த ஊரில் குறிப்பாக அந்த மரகளுக்கு மிக அருகில் தெருவில் எத்தனை பசு மாடு கன்று ஈன்று உள்ளது என்பதை அறியலாம்.
பசு மாடு கன்று ஈன்ற பிறகு போடும் கருப்பையில் திரவம் தொப்புள் கொடி அடங்கிய பை கள் . நாய்களுக்கு பயந்து அதை கொண்டு வந்து மர கிளைகளில் கட்டுவார்கள்.
குளக்கரையின் ஓரத்தில் நின்றிருந்த அரச மரம் ஆழ மரத்தின் கிளைகளில் சின்னதும் பெரியதுமான பைகள் தொங்க விடப்பட்டிருந்தன.ஒரு பையிலிருந்து திரவம் வடிந்து கொண்டிருந்தது. மற்றொரு பை காய்ந்து சருகாய் போயிருந்தது.இது போன்று பல பைகள் கட்டப்பட்டிருந்தன.
மரம் உள்ள பகுதியினை கடக்கும் மனிதர்கள் தன்னுடைய விரல்களின் உதவியால்மூக்கை இழுத்துபிடித்தவாறு சுவாசிக்காது விரைந்து கடந்து விடுவார்கள்.
கடந்து போய் விரல்களை எடுத்து காற்றை குடிப்பார்கள்.
நிம்மதியாய் மூச்சை இழுத்து விடுவார்கள்.
அன்றைக்கு கட்டபட்ட பை புதிததாக இருக்கும் . திரவம் வெளியேறி கொண்டிருக்கும் பை நான்கைந்து நாட்கள் முன்பு கட்ட பட்டதாக இருக்கும். பத்து பதினைந்து நாட்கள் என்றால் திரவம் வெளிவந்து பை காய்ந்து போயிருக்கும் .
மரத்தின் அருகில் சென்று பைகளின் எண்ணிக்கையை அறிந்தால் அந்த ஊரில் குறிப்பாக அந்த மரகளுக்கு மிக அருகில் தெருவில் எத்தனை பசு மாடு கன்று ஈன்று உள்ளது என்பதை அறியலாம்.
பசு மாடு கன்று ஈன்ற பிறகு போடும் கருப்பையில் திரவம் தொப்புள் கொடி அடங்கிய பை கள் . நாய்களுக்கு பயந்து அதை கொண்டு வந்து மர கிளைகளில் கட்டுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)