Saturday, March 31, 2012

பெற்றோரின் கண்ணீரில்




மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில்வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உணக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும்தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவைநீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும் போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும் !

(படித்தது)

Wednesday, March 21, 2012

ஜனத் தலைவர் யார்?


இது பாரதி சொன்னது... யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ  ,

யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே  என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ

யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ

யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ  ..

அவன் ஒருவனே ஜனத் தலைவன்.



இன்று….

தன் மானத்திற்காக தொண்டனி்ன் உயிரை ப்பறிப்பவன்.

தன் குடும்ப வாரிசுகாக  தன் கட்சியினரையே  கட்சியை விட்டு நீக்குப்பவன்.

சுவிஸ் வங்கியோ இன்னும் வேறு ஏதேனும் வங்கியிலோ கணக்கு வைத்திருப்பவன்.

நிலம் பறி்ப்பவன்

ஆட்கடத்தல் அடித்தடி கொலை  செய்பவன்.

இவர்களே இன்று ஜனத்தலைவர்கள்.

இது இந்தியா…..

Tuesday, January 24, 2012

முதுமை




காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.

LinkWithin

Related Posts with Thumbnails