Sunday, May 31, 2009

இன வாதமும் இப்படிதான்.

அவன் மட்டும் தனியாக சென்றுக் கொண்டிருந்தான் அவன் நடந்தது அவன் வசிக்கும் பகுதியல்ல அவன் பகுதியிலிருந்து வெகுதொலைவு அங்குள்ளவர்களை அவனுக்கு நன்றாய் தெரியும் அடக்கமாய் நடந்து சென்றான்.

இவன் வயது ஒத்தவர்கள் நான்கைந்து பேர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்கிண்டலடித்தார்கள் கண்டும் காணாதது காதில் வாங்காதது போல் விரைவாக நடந்து அந்த பகுதியை விட்டுவெளியேறினான்.

இன்னொரு சமயம் நான்கைந்து பேருடன் சென்றான் அந்தபகுதியில் பார்வைகளை படரவிட்டவாறே சாதாரணமாய் பார்த்தவர்களை கூட பயமுறுத்தும் பார்வையால் பார்த்தான்.

இங்கு இவனது பலம் அதிகமாய் இருந்தது. இன வாதமும் இப்படிதான் . இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.
பலம் என்பதற்கு கீழ்தான் பலவீனம். மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்கும் மிக சரியான முடிவே வெளியில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற வழிப்பிறக்கும்.

Saturday, May 30, 2009

ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டலஞ்சம் .

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்காது வாழ்விக்க வழிசெய். இரக்கம் காட்டாது உதவி செய். அவர்கள் வாழ்வில் எத்தனையோ உதவிகளை ஒருவருக்கு ஒருவர் செய்திருக்கலாம்நேற்று வாழ்ந்தவர்கள் இன்று பிறர் மனதை கைகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம்.

ஏனென்றால் அவர்கள் தன் உரிமைக்காக போராடி தோற்றவர்கள். காயங்களுக்கு மருந்துதான் தேவை ஆறுதல் அல்ல. புள்ளி விபரங்கள் சொல்லலாம் கஷ்டப்படவில்லை என்று அங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் தான் பட்டது என்னவென்று. எத்தனை போராட்டங்கள் எத்தனை துன்பங்கள். நிதம் செத்துமடிவதை விட போராடி தோற்று போ.

வஞ்சகர் வலை பின்னல் ஒரு இனத்துக்கு எதிராகஉலக நாடுகள் திரளும் அவலம் வேதனை. ஒன்றினைய அவர்களின் வஞ்சக கணக்கு சில பல லட்ச உயிர்கள் அவர்களின் தேவை. ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் .

வரலாறு மாறும் நிச்சயம் மாறும் அடக்கபட்ட ஒன்று சக்தி பெற்றே தீரும் .

Friday, May 29, 2009

ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கி..

ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழினமும் மூன்று தளங்களில் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

முதலாதவதாக மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சி. முகாம்களில் சிக்கியுள்ளோரை விடுவிப்பதோடு மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தையும் ஈழத் தமிழினம் செலுத்த வேண்டும்.

இரண்டாவதாக நல்லெண்ண நடவடிக்கைகள் ஒருபுறம் வளர்ச்சியை முன்னெடுக்கும் அதே நேரத்தில் மறுபுறம் நல்லெண்ணச் செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.தமிழர்-சிங்களர் இடையேயான இனவெறிப் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடு்க்க வேண்டும். அதிகாரமும் உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு இன அடிப்படைவாதத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக உருவாக்கப்படும் தடைகளைத் தகர்க்க இது முக்கியமானது.

மூன்றாவதாக சகலதளங்களிலும் தமிழர்களுக்கு சம உரிமைகள் அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச அளவில் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

-தினமணி-

LinkWithin

Related Posts with Thumbnails