“ டமார்” என்று வேகமாக கதவு அடித்து சாத்தப்பட்டது. யார் மீதோ வெளிப்படுத்தா முடியா கோபம் கதவில் வெளிபடுத்த முடிந்தது. எல்லோரும் மௌனம் காத்தார்கள்.
கதவு யார் மீது வெளிப்படுத்த முடியும் கதவில் பொருத்தபட்டிருந்த நாதாங்கி மெதுவாய் ஆடி நின்றது.
நிசப்தம் நிலவியது. கதவை ஓங்கி அடித்து சாத்தியவர் மீது கோப பட முடியா சூழல் நிசப்தம்.
“ டமார் ” அடித்து சாத்தப்பட்டது கதவு. கதவை சாத்தியவன் சிறுவன் அம்மா கேட்டாள் எதிர்பார்தது கிடைக்கவில்லை கோபம் . வெளிப்படுத்த முடியாமல் சிறுவன் வெளிப்படுத்திய இடம் கதவு. உணர்வுகளின் விளைவுகளை உள்வாங்கி கொண்டது.
அம்மா கேட்டாள் சிறுவன் மௌனமாக நின்றான். வீட்டு கதவு உடைஞ்சு போச்சுன்னா என்ன செய்ய என்று கேட்டவாறு சிறுவனை அடித்தாள். அழுதவாறே அவ்விடம் அகன்றான்.
ஊர் திருவிழா சாமி புறப்பாடு வெடிகள் வெடிக்கப்பட்டது. டமார்..டமார் என்ற சத்தம் இருகைகளால் காதுகளைஅழுத்தி பொத்தியப்படி கண்கள் மூடியப் படி இருக்க அப்படியே நின்றாள் இளம் பெண்.
வெடி வெடித்து முடிந்த பிறகும் அப்படியே நின்றாள்.
அருகில் நின்றிருந்த தோழி தட்டி எடீ ..கைய எடு..எடுத்தாள். சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை கண்களை கசக்கியவாறே தோழிகளுடன் நடந்தாள்.
நிறைந்த பயணிகளுடன் பேருந்து ஊர்ந்தது அடுத்த பேருந்து நிலையத்தை தொ ட தூரம் இருக்கையில் டீயூப் வெடிக்க டயர் டமார் என்ற சத்தத்துடன்வெடித்தது. மிகுந்த சிரமப்பட்டு பேருந்தை ஓரங்கட்டினார் ஓட்டுனர்.
எல்லோரும் கீழிறிங்கினர் பாதி தன் அலுவலின் அவசரம் தன்னையே நெந்தார்கள். அடுத்த பேருந்தை எதிர்நோக்கி எல்லோர் கண்களும் உற்றுநோக்கின. வரும் பேருந்து முக்கியம் பெற்றது. அதுவும் நிறைந்து வந்தது முடிந்தவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். பாதி பேர் நின்றார்கள் நடந்தார்கள் பரிச்சயமில்லாதவர்கள் கூட பழகியவர்கள் போல் பேசிக்கொண்டார்கள் அவர் அவர்களின் எண்ண ஓட்டங்கள் பரிமாற கொள்ளப்பட்டன.
Tuesday, June 30, 2009
Monday, June 29, 2009
ஞாயிறு காலையிலே சங்கமம்
வசந்த காலத்தின் வருகையை சாலையில் நிறைந்திருந்த அந்த புளியமரங்கள் அறிவித்தன. இளதளிர்கள் பூக்களால் நிறைந்திருந்தது மரம்.
அமைதியான சூழலில் எழுந்தது காற்றின் சப்தம். கண்களால் உடன் பார்க்கமுடியாப்படி கிளைகளின் ஊடே உட்கார்ந்திருந்த சிறுபறவைகளின் குரலோசை ஒரு மரம்
மரத்தின் கீழ் சிறுவர்கள் ஐந்து பேர்.
அன்று ஞாயிறு காலையிலே சங்கமம் ஆனார்கள்.
டேய்..நாம எல்லாரும் போயி ..இன்னும் அரமணி நேரத்துல வந்துடுவோம். இன்னிக்கு புளியம்பூ தொக்கு செய்வோம்.
தலைவனாக கருதப்பட்டவனின் வார்த்தைகள்.
அய்யா..நான் சீக்கரம் வந்துடுவேன்.
டேய் நீ வறப்ப உப்பு எடுத்துட்டு வாடா..
டேய் நீ என்னடா எடுத்துட்டு வர்ற
நான் மொளவா எடுத்துட்டு வர்றேன்.
சரி..டேய் ரொம்ப எடுத்துட்டு வந்துடுடாத பாத்துக்க...
நான் கொட்டாங்குச்சி...
பெரிசாடா ரெண்டு வேணும்.
சரி எல்லாரும் சாப்பிட போவலாம்.
முன்னடி வர்றவங்க புளியம்பூ பறிங்க நிறைய வேணும்.
கலைந்தது சிறார்கள் கூட்டம்.
காற்றின் சப்தம் சிறுபறவைகளின் குரலோசை கேட்டு கொண்டிருந்தது.
அமைதியான சூழலில் எழுந்தது காற்றின் சப்தம். கண்களால் உடன் பார்க்கமுடியாப்படி கிளைகளின் ஊடே உட்கார்ந்திருந்த சிறுபறவைகளின் குரலோசை ஒரு மரம்
மரத்தின் கீழ் சிறுவர்கள் ஐந்து பேர்.
அன்று ஞாயிறு காலையிலே சங்கமம் ஆனார்கள்.
டேய்..நாம எல்லாரும் போயி ..இன்னும் அரமணி நேரத்துல வந்துடுவோம். இன்னிக்கு புளியம்பூ தொக்கு செய்வோம்.
தலைவனாக கருதப்பட்டவனின் வார்த்தைகள்.
அய்யா..நான் சீக்கரம் வந்துடுவேன்.
டேய் நீ வறப்ப உப்பு எடுத்துட்டு வாடா..
டேய் நீ என்னடா எடுத்துட்டு வர்ற
நான் மொளவா எடுத்துட்டு வர்றேன்.
சரி..டேய் ரொம்ப எடுத்துட்டு வந்துடுடாத பாத்துக்க...
நான் கொட்டாங்குச்சி...
பெரிசாடா ரெண்டு வேணும்.
சரி எல்லாரும் சாப்பிட போவலாம்.
முன்னடி வர்றவங்க புளியம்பூ பறிங்க நிறைய வேணும்.
கலைந்தது சிறார்கள் கூட்டம்.
காற்றின் சப்தம் சிறுபறவைகளின் குரலோசை கேட்டு கொண்டிருந்தது.
Saturday, June 27, 2009
ஒன்று இருக்கஒன்று இருக்கும்.
சுவாசம் இருக்க
செயல் இருந்தது
உணர்வுகள் இருக்க
விளைவுகள் இருந்தது
தேவை இருக்க
ஆசை இருந்தது
கோபம் இருக்க
மௌனம் இருந்தது
வேதனை இருக்க
இன்பம் இருந்தது
முயலாமை இருக்க
முயற்சி இருந்தது
தோல்வி இருக்க
வெற்றி இருந்தது
எல்லாம்
கால சுழற்சிக்கு
உட்பட
ஒன்று இருக்க
ஒன்று இருக்கும்.
செயல் இருந்தது
உணர்வுகள் இருக்க
விளைவுகள் இருந்தது
தேவை இருக்க
ஆசை இருந்தது
கோபம் இருக்க
மௌனம் இருந்தது
வேதனை இருக்க
இன்பம் இருந்தது
முயலாமை இருக்க
முயற்சி இருந்தது
தோல்வி இருக்க
வெற்றி இருந்தது
எல்லாம்
கால சுழற்சிக்கு
உட்பட
ஒன்று இருக்க
ஒன்று இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)