Monday, June 28, 2010

ஆத்ம சோதனை

ஆபீஸ் பணத்தை விரயம் செய்தால் சொந்தப்பணத்தை அது விரயம் செய்யும்.

துரோகம் பலன் கொடுத்தால் பிறகு பிறரை நாம் நமக்குத் துரோகம் செய்ய அழைக்க வேண்டியிருக்கும்.

குறுக்கு வழியில் பலன் பெற நினைத்தால் பலன் ஒதுங்கும்  அவமானம் வரும்.

அகங்காரம் அடிப்படையை அழிக்கும்.

உற்ற நண்பனுக்கு விரும்பிச் செய்யும் துரோகம்  நம் வாழ்வை துரோகத்தின் உற்பத்தி ஸ்தானமாக்கும்.

நல்லவனுக்கு வீம்பு சவால் விட்டால் பொல்லதாவன் அதை நிறைவேற்றுவான்.

உதவாக்கரை வாழநினைத்தால் மாறிய மனம்  மாற்றமான  பலன் தரும்.

உதவுபவர் காரியத்தைத் தள்ளிப்போட்டால் முக்கியமான காரியம் தள்ளிபோகும்.

ஆத்மசோதனை  முற்றும்.

கர்மயோகி

Saturday, June 26, 2010

எல்லைகள் தெரியா எனது பயணம்




தூர கேட்கும் இடிமுழக்கம்
வினாடியில்
தோன்றி மறையும் மின்னல்

இதயம் சுமையாகிறது
ஊமையாய் அழுகிறேன்
இன்ப முழக்கம்
தூர கேட்கையில்
என்னுள் உந்தன்
வெளிச்சகீற்று

தேடுகிறேன்
மறைந்து விடுகிறாய்
எதிர்பார்க்கவில்லை
வந்து செல்கிறாய்

ஆழ்கடல் அற்புதம் காண
அடிகடல்  செல்ல
சோதனையால்  சோதனையாகி
தொடமுடியா தூரமாய்
என்னுள்ளே

துயரமாய்
எனது பயணம்
எல்லைகள் தெரியா
பாலைவனத்தின் இடையே
திரும்பவும்
உனை நோக்கி...

Friday, June 25, 2010

ஆத்ம சோதனை

செய்தது வீண் போகாது.

நல்லது நல்லது செய்யும்.

அவசரம் காரியத்தை கெடுக்கும்.

சுயநலம் நஷ்டத்தை கொடுக்கும்.

வாலிபத்தின் ருசி பின்னால் மனவேதனை தரும்.

உடலால் செய்த  பாவம் மனதில் புண்ணை  ஏற்படுத்தும்.

கர்வம் மரியாதையைப் போக்கும்.

மரியாதையை நாடுவதற்கு கர்வம் உதவாது.

நாம் செய்யும்  காரியம் நல்லது கெட்டது என்பதை ஒதுக்கிவிட்டு மீண்டும் தன்னை திரும்ப செய்யும்படி  தூண்டும்.பல சமயம் அது நல்லதாக இருக்கும் பலசமயம் அது கெட்டதாக  இருக்கும். ஆனால் செய்தது  மீண்டும் வரும்.

உணர்ச்சிக்குரிய கடமையை தவறினால் பின்னால்  அது உயிரை எடுக்கும் .

தவறான வழி பலன் தந்தால் பலனை பிறகு அனுபவிக்க வேண்டியவர்களஅழிவார்கள்.

இல்லாததை இருப்பதாக பேசினால் இருப்பதும் போய்விடும்.

சொந்த மகன் ஆனாலும் அவன் தவற்றை ஆதாரித்தால் அவனே  உனக்கு பெரிய  தவற்றை செய்வான்.

இலட்சியம் பெரியதானாலும் மனப்போக்கு சிறியதானால் பெரும் பலன் விலகும்.

(ஆத்ம சோதனை  தொடரும்)

LinkWithin

Related Posts with Thumbnails