25,26.11.2008 கிழமைகளில் எங்கள் ஊர் பகுதிகளில் (தஞ்சை மாவட்டம்) அறிவிக்கபடாத ஊடரங்கு உத்தரவு. காரணம் மழை யும் ,மழையுடன் கூடிய அதிவேக காற்றும்.
நீங்கமற நிறைந்திருந்த தண்ணீர் , மின்சாரம் இல்லை மின்சாரம் சார்ந்த அத்தனையும் பயன் இல்லாமல் போனது.
இந்த மூன்று நாட்களிலும் நண்பர்களுடன் நான் நாடோடியாய்
பொழிந்து போன தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய வளர்ப்பு மீன்கள். வளர்த்தவர்களை மறந்து
மற்றவர்களிடம் பிடிபட்டும். பிடிபடாத மீன்கள் வேறு இடம் நோக்கி விரைந்தது.
இரை தேடி வெளிவந்த உயிரினங்கள்தார் ரோடுகளில் சென்ற ஒரு சில வாகனங்களில் அடிப்பட்டு உடலை விட்டு உயிரை இடம் மாற்றி கொண்டது.
ரோடுகளில் சென்ற மனிதர்கள் இனம் கண்டுக்கொள்ள வைத்த
உயிரினப்பெயர்களை
“பாம்பு செத்து கிடக்கிறது, தவளை செத்து கிடக்கிறது” என திரும்பவும் ஞாபகப்படுத்தி கொண்டார்கள்.
தன்பணி முடித்த மரங்கள் நிம்மதியாய் தலை சாய்த்து படுக்கையில் வீழ்ந்தது.
ஒன்று இரண்டு கடைகள் வியாபாரிகள் திறந்து வைக்க எல்லாவற்றிலும் அவசரப்பட்ட மனிதர்கள் இதிலும் முன்டியடித்து பொருட்கள் வாங்கி தானும் தன்னைச்சார்ந்தவர்களையும் காப்பாற்றினார்கள்.
நாடோடியாய் நான் திரிஞ்சாலும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டேன். எனக்கு சாப்பாடு போட மற்றவர்கள் இல்லாததால் எனது வீடு நோக்கி நான் போக வேண்டிய அவசியம்.
No comments:
Post a Comment