Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Thursday, July 30, 2009

அரசு சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.


கையிலிருந்த லத்தி உயர்ந்தது வேகமாக வந்த இருசக்கரவாகனகாரர் மெதுவாக நிப்பாட்டினார்.

பேப்பரு எல்லாம் காட்டுங்க லைசென்ஸ் எடுங்க போலீஸ்கார் கேட்டார்.

சார் அது வந்து லைசென்ஸ் இன்னும் எடுக்கல பாக்கியெல்லாம் கரெக்டா இருக்கு சார்.

வண்டிய ஓரங்கட்டி அய்யாவ போயி பாரு..

அந்த போலீஸ்கார் அடுத்தவண்டி புடிக்க ரெடியானார்.

அன்றைக்கு லைசென்ஸ் ஆர்.சி. இன்சூரன்ஸ் என சரிபார்த்த இருசக்கர வாகனங்களில் எல்லா சரியாய் இருந்தது பத்து வண்டிகள் மட்டுமே. நாற்பது ஐம்பது வண்டிகளுக்கு அன்றைக்கு அபராதம் போடப்பட்டது.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இந்த சோதனை செய்யபடபொதுமக்களின் மனதில் மிகப்பெரிய மாறுதல் ஏற்ப்பட்டது.

எல்லாத்தையும் கரெக்டா வச்சுகனும் பெரிய தொந்தரவா இருக்குய்யா போலீசுகாரனோட டெய்லி செக் பண்ணிகி்ட்டே இருக்கானுங்க என்ற பேச்சு.

ஏம்ப்பா உன் வண்டி எங்க ..

யாருங்க போலீசுட்ட மாட்டறது அதான் வண்டிய வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன் என்றார் ஒருவர்.

காவல்துறை போட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட பொதுமக்கள் தயாராக இருக்க இந்த நான்கு நாட்கள் சோதனையே போதுமானதாக இருந்தது.

இப்பொழுதாவது தெரிகிறதா பொதுமக்கள் குற்றவாளிகள் அல்ல அதிகாரம் படைத்த அரசும் அரசில் உள்ளவர்களும் தான் . காவல்துறை செயல்படுத்துவதும் அரசுதானே.
அரசு சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails