Showing posts with label தாய்பால். Show all posts
Showing posts with label தாய்பால். Show all posts

Wednesday, November 25, 2009

நம்பியும் நம்பாமலும்


பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை செய்து குழந்தை பிரசவிக்கபட்டது. பிறந்த குழந்தை பசி தாய்பாலுக்கு அழுதது.

தாய்க்கு தெரியவில்லை. வீறி்ட்டு அழுதப்படியே இருந்தது சிசு. சில மணி நேரங்கள் ஆனது எதற்காக அழுதது என்று கண்டுபிடிக்க அதற்குள் நிலைமை அபாயத்தை தொட்டிருந்தது.

தொடர்ந்து அழுததால் பிள்ளை தொண்டை கட்டி போயிருந்தது. சுவாசம் சரியி்ல்லாமல் போய் காலையில் பிறந்த குழந்தை மாலை இறந்தது.

உடனே தாய்பால் கொடுக்க வேண்டியது தானே என்று தாயிடம் கேட்டால் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை அதனால் கொடுக்கவி்ல்லை என்று காரணம் சொல்லப்பட்டது.

ஆனால் தன்னுடைய அழகு கெட்டு போய்விட கூடாது என்பதற்காக அவள் தாய்பால் கொடுக்கவி்ல்லை என்று வெளியில் பேசப்பட்ட காரணமாக இருந்தது.

சிசு இறந்தது உண்மை ஆனால் காரணம்….

LinkWithin

Related Posts with Thumbnails