Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Friday, October 02, 2009

படைத்தவனா… ? படைப்புகளா…?


படைப்பவன் யாராயிருந்தால் என்ன? படைப்புகள் எதுவாயிருந்தால் என்ன? சராசரி மனிதன் உருவாக்கிய படைப்புகளாகட்டும் அல்லது கடவுள் ஆகட்டும் (இது அவர் அவர்களின் நிலைப்பாட்டுக்குட்பட்டது) வெளிவரும் அல்லது உருவாக்கப்படும் படைப்புகளுக்கு உண்டான மரியாதை என்பது அதை போற்றி பாதுகாக்கும்பொழுதேபடைத்தவனை நினைக்கிறோம்.

எடுத்துகாட்டாக மகாகவியின் படைப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்தான் மகாகவி பாரதி இன்னமும் நாம் நினைவுப்படுத்தி கொள்கிறோம்.

அதுபோல் கடவுள் படைத்த படைப்பு எதுவாக இருந்தாலும் அதன் விதிகளுக்குட்பட்டு அதை பாதுகாக்கும்பொழுதே கடவுளை வணங்குவதற்குரிய தகுதியை நாம் பெறுகிறோம்.

படைத்தவனா… ? படைப்புகளா…?

Thursday, October 01, 2009

“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….”


“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….” படித்த வாசகம். இது எந்தளவிற்கு உண்மை மிகவும் முரணான வாக்கியமாக தென்பட்டது.

படைப்புகளை வணங்கதாவர்கள் படைத்தவனை வணங்க முடியுமா. படைப்புகளின் முக்கியதுவம் உணர்ந்து போற்றுபவர்கள் படைத்தவர்களை வணங்க முடியும் அவர்களின் படைப்புகளை பாதுகாக்கும் தகுதியும் அப்பொழுது தான் உருவாகும்.

படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் அந்தநேரம் அவர்களை பாராட்டலாம் எந்த காலமும் அவர்களின் படைப்புகளை பாதுகாப்பவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இந்த வாக்கியத்தையே “ படைப்புகளை ஆராய்ந்து அறி படைத்தவர்களை நினை ..” மாற்றி அமைத்து கொள்ளலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails