Showing posts with label மௌனம். Show all posts
Showing posts with label மௌனம். Show all posts

Saturday, April 17, 2010

மௌனமா…இல்லை



சொல்ல ஒன்றுமில்லை
பேச ஒன்றுமில்லை
மௌனமா…இல்லை

பேசமுடியா நிலை
உதடுகள் மூடிய
வாழ்க்கை பயணத்தின்

உணர்வுகளின் தலைகாட்டல்
அமிழ்ந்து போயின
மன குளத்தினுள்ளே..

Friday, September 11, 2009

முடிந்தவனுக்கு ஆயுதம் முடியாதவனுக்கு மௌனம்.

எலே உன் செருப்பால அடிச்சுடுவேன்.

உன்ன இந்த பக்கம் மாடு ஓட்டிட்டு வரவேணாம் சொல்லியும் ஓட்டிட்டு வந்துட்டே இருக்க பாத்துக்க..

அப்படியே நின்றான் அந்த சிறுவன்.

வெயில் தகிப்பு கண்கள் கூசியது. கண்களை இடுக்கி பார்த்த படி மௌனமாய் நின்றான்.

யாரையோ திட்டி இவன் வேடிக்கை பார்ப்பது போல..

திட்டியவனுக்கு இவனின் மௌனம் எரிச்சலை மூட்டியது.

உன்ன பாரு என்ன செய்யப்போறேன் என்னடா அப்படி பாக்குற..

மௌனமாய் நின்றான் சிறுவன்.

ஏன்டா ஊம கம்மனாட்டி பேசுடா ஏதாவது...

முகத்தில் எந்த சலனம் இல்லாமல் பார்த்தான்.

இங்கிருந்து முதல்ல போடா என்று கத்தினான்.

மௌனமாய் நகர்ந்தான்.

திட்டியவனுக்கு கோபம் தீராது இரண்டு வயல்களுக்கு அப்பால் பம்பு செட்டில் தண்ணீர் குடித்தான்.

அதற்குள் இவன் வேறு இடம்நகர்ந்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails