Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Tuesday, December 14, 2010

பயணம்



வேகமாக முன்னேறிய  இருசக்கரவாகனம்  எதிர்புறம் சைக்கிள்  மிதிக்கின்ற சிறுவன்   வர ஓரத்தில் கிடக்கின்ற விறகு கட்டினை   தவிர்த்து இருசக்கரவாகனத்தை  கடக்க நினைத்துஇருசக்கரவாகனம்  விறகு கட்டுக்கு இடையில் மாட்ட  இருதலை பாம்பாய் அவன்நிலை  முன்னேறவும் முடியாது  ஒதுங்கவும் முடியாது விறகு கட்டில் சைக்கிளுடன் சாய்ந்து  பயணம் தடைப்பட்டது.

இருசக்கரவாகனம் முன்னேறியதுவளைவில் வந்திருந்த வண்டி வேகமாய் வர  லாரி ஒன்றை கடக்க நினைத்து இருசக்கர வாகனம்வேகமாய் வர வளைவில் வந்த வண்டியும் வேகமாய்வர லாரியும் வேமாய்தான் போய்கொண்டிருந்ததுஇரண்டு வண்டிகளுக்கும் நடுவில் இருசக்கரவாகனம் அடிவயிற்றில் பயம் கிளம்பியதுஇருசக்கரவாகனத்துக்கு  பதட்டதில் மேலும் வேகம் மூன்று ஒன்றாய்  லாரி டிரைவர் சைடு கண்ணாடி வழியாக  பார்த்து வேகம் குறைக்க இருசக்கரவாகனம்  தப்பித்தது.

இருசக்கரவாகனம் முன்னேறியது பதினைந்து நாட்கள் மழையில்  சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட   தார் சாலையின் இருபக்கங்களிலும்   பெரிய குழிகள்  தினசரி செல்பவர்கள்      ஞாபகம் வைத்து  ஆபத்தில்லாது கடக்க  
புதிய வாகன  ஓட்டிகள் விழிப்புண  ர்வுடன் வாகனம் ஓட்டினால் மட்டுமே  பிழைக்கலாம். இரவு நேரம் 7 மணி முதல் 9 மணி வரை   வண்டிகளுக்கு பஞ்சமில்லை   குழிக்குள் இருசக்கர வாகனத்தை விட்டால் கட்டாயம் பின் வரும் வண்டியில் தப்பிக்க முடியாமல் இறக்கநேரிடலாம் அல்லது கால் கை போகும்.

அப்படிதான் இரவு நேர வண்டிபயண  ம் நண்பர்கள்  இருவர் ஜாலியாக பேசியப்படி ஆபத்து இவர்களை நோக்கி வருவது அறியாமல்வேகமாய் செல்ல   ஒரு குழிக்குள் விழுந்து ஏற  பின்னால் உட்கார்ந்திருந்தவர்    தூக்கி எறியப்பட்டு சாலையோர  புதருக்குள் விழ வாகன ஓட்டிக்கு சிராய்ப்புகளுடன்  வலி  வெளிச்சம் இல்லா அந்த இரவில் பின்னால் உட்கார்திருந்த நண்பனை  தேடுகையில் விரக்தியின் உச்சம்.

இருசக்கர வாகனம் முன்னேறியது  30    நாட்களாக குடிக்காமல் அய்யப்பன்   பக்தராக இருந்து மலையேறி திரும்பியவுடன்  மாலையை  கழட்டி விரதம் முடிக்க அப்படா இன்னிக்கு புல்லா அடிக்கனும் நினைத்து கொண்ட டூ  வீலர் மெக்கானிக்  வண்டி களுக்கு  உதரிபாகங்கள் வாங்கி  திரும்புகையில்   வழியில் இருந்த ஒயின்ஷாப்பில்  புல்லாய்  அடித்துவிட்டு    நிதானமாய்  ஓட்டுவதாக நினைத்து அதிக வேகத்துடன் வண்டி ஓட்டி பெரியவாகனத்தை கடக்க நினைக்கியில்  எதிர்வந்த வண்டியில் நேரிடையாக மோத    உயிர் விண்ணுக்கு உடல் மண்ணுக்கு என்றானது.

இருசக்கரவாகனம் முன்னேறியது.

Wednesday, July 22, 2009

தீ விபத்து

தீக்கிரையாகும் போது


தீக்கிரையானப்பின்
பலகார கடையின் புகைப்போக்கி குழாயிலிருந்து நெருப்பு பொறிகள் பறப்பது வழக்கம். அது வெளிவந்தவுடன் உடன் அனைந்து விடும். கரி சேர்ந்து அந்த குழாயினுள் அடைப்பு ஏற்பட்டிருக்கும் அதனால் அடுப்பு எரிக்கும் போது நெருப்பு பொறி வெடித்து கிளம்பியது. பக்கத்தில் உள்ள கடையின் மொட்டைமாடி மீது கீற்று கொட்டகை போட்டிருந்தார்கள் அதில் நெருப்பு பற்றியது அனுமானம் ஒன்று.

அனுமானம் இரண்டு இரண்டாவது பலகார கடையின் கீற்று கொட்டகை சரியில்லை கீற்றுகள் மிகவும் காய்ந்து போயிருந்தன அதனால் அடுப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி மற்ற கடைகளும் நாசமாயின.

அனுமானம் மூன்று கடலை கடையில் கடலை வறுக்கும்போது தீப்பொறிகள் கிளம்பி தீப்பற்றி விட்டது என அன்றைக்கு நடந்த தீ விபத்தை பற்றி வேடிக்கை பார்த்தவர்கள் பேசி கொண்டிருந்தார்கள். தீயைஅனைப்பது ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க
தீயனைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கதொடங்கின . காற்றுகாலம் பற்றிய தீ வஞ்சிக்காமல் பக்கத்தில்
இருந்த அனைத்தையும் நாசம் செய்தது.

கடை வீடுகளுக்கு சொந்தகாரர்கள் தன் வீட்டிற்கு வந்துவிடுமோ என அஞ்சியவர்கள் அஞ்சியவர்களின் உறவினர்கள் நண்பர்கள் பொதுமக்கள் என அனைவரும் தீயணைக்க உழைத்தனர்.

வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் நின்றது. யார் எப்படியாக தீயை அனைக்கிறார்கள் என்பதை பார்க்க(அதில் என்னை சேர்க்கவும்) ..கூட்டத்தில் பதைபதைப்பு காணப்பட்டது. எரிந்ததற்கான மேற்கூறிய அனுமானங்கள் அலசப்பட்டன.

உயிர் சேதம் இல்லா இந்ததீ விபத்து பொருட் சேதத்துடன் முடிவடைய அவ்விடம் புனர்நிர்மானம் செய்துகொள்ள தன்னையே புதுப்பித்து கொண்டது.

LinkWithin

Related Posts with Thumbnails