சென்னை வாசி அவர் புதுக்கோட்டை
காரைக்குடி சொந்தஊ ர்.சில நாட்கள் சொந்த அலுவலின் காரணமாக தன் ஊ ர் வந்து தங்கினார்.
ஒரு நாள் காலை நடைப்பயில வீட்டை விட்டிறங்கி கொஞ்சதூரம்
சென்றிருப்பார் பின்னால் திடீரென்றுவந்து
ஒரு நாய் கெண்டைக்காலை கடித்துவிட்டு
ஓடத் தொடங்கியது.
அவருக்கு தெரிந்த ஒருவர் அது
வெறிநாய் உங்களையும் கடிச்சிடுச்சா…இப்பதான் அங்க ஒருத்தர கடிச்சிது.
போங்க..போங்க…சீக்கரம் போயி டாக்டர
பாருங்க என்றார்.
அங்குள்ள லோக்கல் டாக்டரிடம்
காண்பிக்க அவரிடம் வெறிநாய் கடி
என்றதுமே..
நீங்க போயி திருச்சியில காண்பித்து
விடுங்கள் என்று சொல்லி அவரும் அனுப்பிவிட…
திருச்சி வந்துஊசி போட்டு கொண்டு
சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
நண்பர் இணை ய
த்தின் வாயிலாக தேடி அதனுடைய தீவிரத்தை அறிந்தவுடன் பயப்பட ஆ
ரம்பித்துவிட்டார்.
தன்னுடைய எதிர்காலம்
தன்பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும கவலைப்பட்டு நண்பர் ஒருவரிடம் கொட்டி
தீர்த்துவிட்டார்.
நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது?
என்னுடைய பிள்ளை ஜாதகம் என்ன
சொல்கிறது? நான் இல்லாட்டியும் எதிர்காலத்தில்அவன் நன்றாக இருப்பானா ???
எனக்குஏதோ ஆகப்போகிறது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்
ஒருவரிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
அவருடைய நண்பர் ஆறுதல் கூறியும் டேய்..வெப்சைட்ல ரொம்ப ரிஸ்கா போட்டிருக்காண்டா..
என்ன செய்யுறுதுன்னே தெரியல என்று
சொல்ல..
அவருடைய பயத்தை தீர்ப்பவர் யார்???
வெறிநாய் கடிப்பற்றி இச்சுட்டியில் காண்க…
