இந்தா போட்டுருக்கு பாருடி ..
டோக்கன் இலவசம் போர்டு..
வாடி.. வாடி .. இந்த வழியாதான் போவணும்.
சீக்கரம் வாடி..
இலவச டோக்கன் வாங்க விரைவாய் நடந்த பெண்கள்.
சார் .. டோக்கன் வேணுமா.. டோக்கன்..
மடிப்பு களையா உடையுடன்தம்பதி எவ்வளவு?
எதாச்சும் செலவுக்கு கொடுத்துட்டு போ சார்..
கைமாறும் பணமும் டோக்கனும்.
இந்தம்மா .. நான் கோயிலு ஸ்டாபு.. இவங்க தெரிஞ்சவங்க..பத்து விளக்கு ஏத்தணும்.
இல்ல சார் .. மூனு விளக்குதான் அலவுடு சார்.
நான் கோயில் ஸ்டாப் சொல்லேறேன்..அஞ்சு விளக்காவது ஏத்தணும் இவங்க..
சார் அதட்டாத.. நானும் கோயிலு ஸ்டாபுதான்.. இப்படி அதட்டற..
சரி..சரி ஏத்தவிடு இவங்கள..
போம்மா..போம்மா .. நிக்காத ..நிக்காத
போ..போயிட்டே இரு.. பிரசாதம் வாங்கிட்டு சாமி பாத்தவங்க போங்க..
இந்த சாமி. .
கைமாறும் இருபது ரூபா நோட்டு..
இந்தாங்கோ …விபூதி பொட்டலம் பூ ஒரு எலுமிச்சை பழம்.
வர்றேன் சாமி.. வாங்க..
என்னங்க விசேசம் கோயில்ல..
என்னமோ லட்ச தீபம் ஏத்துறாங்க..
எதுக்குங்க...
தெரியலிங்க..நீங்க எதுக்கு வந்தீங்க..
எல்லா வந்தாங்க ..நானும் வந்தேங்க..
அப்ப சரிங்க.
Saturday, January 03, 2009
Thursday, January 01, 2009
பணம் இல்ல என்ன செய்ய..
பத்து லட்சம் பணம் சிங்கையில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வீட்டுக்கு அனுப்புனாருங்க அண்ணன். தம்பிக்கு கொஞ்சம் கதயும் கவிதயும் தெரியுமுங்க
அதனாலயே இவரோட நண்பரு வட்டதுல இவரு கவித நல்ல எழுதுவாரு கதயும் எழுதுவாரு பேரு.
தம்பிகாருக்கு மனசுல கனவெல்லாம் வர ஆரம்பிச்சாச்சு தன்ன நம்பலங்க தன்னோட எழுத்த நம்பினாரு .
நம்புனவருக்கு பட்டு கம்பள விரிச்சி வரவேற்பு நடத்துனுச்சு சினிமா.
அண்ணன் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கட் பண்ணி நம்பிக்கையோட பணம் அனுப்புனாரு சிங்கையிலிருந்து பணம் வரவர தம்பிகாரு இந்த பணத்த ஜீட் விட்டார்.
அவரும் செட்டில் ஆகலங்க.
அண்ணன் வந்தாரு கதயெல்லாம் தெரிஞ்சுது. சரிபட்டு வராதுன்னுட்டு கல்யாணம் பண்ணிகிட்டு லோக்கல் போய் வேலக்கு சேந்தாரு.
தம்பிகாருக்கு பணம் இல்ல என்ன செய்ய.. பிரிடா சொத்தன்னு பிரிஞ்சாங்க.
அப்பிடியும் தம்பிகாரு சுதாரிக்காம தன்னோட பங்க காலி பண்ணிட்டார்.
பத்தல பசி ..அண்ணன் பங்க வெல பேசினார்.
எதையும் முறையா பதியல ..கிராமத்துல எல்லா வாக்கு தாங்க என்ன செய்ய..
அண்ணன் வந்து சண்ட போட்டாரு ..
பேசுனவங்க எதாச்சும் குடுத்துட்டு போப்பான்னு சொல்ல..
சண்டயோட ஊ ருக்கு போய் கல்யாணம் பண்ண பொண்டாட்டி சின்ன புள்ளங்கள விட்டுட்டு தூக்கு மாட்டிட்டாரு.
சாதாரணமா எழுதிட்ட இந்த வாழ்க்கையில் அண்ணனுடைய மனப்போராட்டம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியா மிகப்பெரிய சோகங்கள்.
அதனாலயே இவரோட நண்பரு வட்டதுல இவரு கவித நல்ல எழுதுவாரு கதயும் எழுதுவாரு பேரு.
தம்பிகாருக்கு மனசுல கனவெல்லாம் வர ஆரம்பிச்சாச்சு தன்ன நம்பலங்க தன்னோட எழுத்த நம்பினாரு .
நம்புனவருக்கு பட்டு கம்பள விரிச்சி வரவேற்பு நடத்துனுச்சு சினிமா.
அண்ணன் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கட் பண்ணி நம்பிக்கையோட பணம் அனுப்புனாரு சிங்கையிலிருந்து பணம் வரவர தம்பிகாரு இந்த பணத்த ஜீட் விட்டார்.
அவரும் செட்டில் ஆகலங்க.
அண்ணன் வந்தாரு கதயெல்லாம் தெரிஞ்சுது. சரிபட்டு வராதுன்னுட்டு கல்யாணம் பண்ணிகிட்டு லோக்கல் போய் வேலக்கு சேந்தாரு.
தம்பிகாருக்கு பணம் இல்ல என்ன செய்ய.. பிரிடா சொத்தன்னு பிரிஞ்சாங்க.
அப்பிடியும் தம்பிகாரு சுதாரிக்காம தன்னோட பங்க காலி பண்ணிட்டார்.
பத்தல பசி ..அண்ணன் பங்க வெல பேசினார்.
எதையும் முறையா பதியல ..கிராமத்துல எல்லா வாக்கு தாங்க என்ன செய்ய..
அண்ணன் வந்து சண்ட போட்டாரு ..
பேசுனவங்க எதாச்சும் குடுத்துட்டு போப்பான்னு சொல்ல..
சண்டயோட ஊ ருக்கு போய் கல்யாணம் பண்ண பொண்டாட்டி சின்ன புள்ளங்கள விட்டுட்டு தூக்கு மாட்டிட்டாரு.
சாதாரணமா எழுதிட்ட இந்த வாழ்க்கையில் அண்ணனுடைய மனப்போராட்டம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியா மிகப்பெரிய சோகங்கள்.
பசிதிருந்த நாய் தப்பிய புறா
சிறகுகள் முழுவதுமாய் வளர்ச்சியடைந்து பறக்க கற்றுக்கொண்டிருந்த புறா. கொஞ்சம் பறப்பது மரக்கிளையில் அமர்வது பறப்பதுமாக இருந்தது.
அண்டங்காக்கை ஒன்று இந்த புறாவை பார்த்தப்படி அமர்ந்து இருந்தது. புறாவின் பலவீனம் தெரிந்து துரத்தியது அண்டங்காக்கை அதனிடமிருந்து தப்பித்து வேறொரு மரக்கிளையில் அமர்ந்தது. முழுமையாக பறக்க கற்றுக்கொள்ளததால் திரும்பவும் அண்டங்காக்கையின் இலக்கானது.
இம்முறை புறா மரக்கிளையில்அமராமல் தரையில் பறந்து இறங்கியது.
இன்னொரு சோதனை தாயாராக இருந்தது. கற்றுக்கொள்ளும் வரையில் சோதனைதான் போலும் தரையில் அமர்ந்து உடனேயே ஒரு மூன்று கால் நாயின் இலக்கானது புறா. ஒரு கால் ஊனம் அந்த நாய்க்கு, அதனால் வெளியில் அதிகம் செல்லாமல் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது.
புறா எங்கு அமர்ந்ததோ அதற்கு மிக அருகில் தான் நாயின் இருப்பிடம் குபீர் என்று ஒரு பாய்ச்சல்….
பட..பட வென்று சிறகுகளை அசைத்தப்படி கண்இமைக்கும் நேரத்தில் தப்பித்து உயரே பறந்ததுபுறா.
நாய் பசிதிருந்தது
இந்நிலப்பரப்பில வாழ விருப்பட்டால் சோதனை களை சந்தித்தால்தான் வாழமுடியும்
அண்டங்காக்கை ஒன்று இந்த புறாவை பார்த்தப்படி அமர்ந்து இருந்தது. புறாவின் பலவீனம் தெரிந்து துரத்தியது அண்டங்காக்கை அதனிடமிருந்து தப்பித்து வேறொரு மரக்கிளையில் அமர்ந்தது. முழுமையாக பறக்க கற்றுக்கொள்ளததால் திரும்பவும் அண்டங்காக்கையின் இலக்கானது.
இம்முறை புறா மரக்கிளையில்அமராமல் தரையில் பறந்து இறங்கியது.
இன்னொரு சோதனை தாயாராக இருந்தது. கற்றுக்கொள்ளும் வரையில் சோதனைதான் போலும் தரையில் அமர்ந்து உடனேயே ஒரு மூன்று கால் நாயின் இலக்கானது புறா. ஒரு கால் ஊனம் அந்த நாய்க்கு, அதனால் வெளியில் அதிகம் செல்லாமல் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது.
புறா எங்கு அமர்ந்ததோ அதற்கு மிக அருகில் தான் நாயின் இருப்பிடம் குபீர் என்று ஒரு பாய்ச்சல்….
பட..பட வென்று சிறகுகளை அசைத்தப்படி கண்இமைக்கும் நேரத்தில் தப்பித்து உயரே பறந்ததுபுறா.
நாய் பசிதிருந்தது
இந்நிலப்பரப்பில வாழ விருப்பட்டால் சோதனை களை சந்தித்தால்தான் வாழமுடியும்
Subscribe to:
Posts (Atom)