Monday, March 09, 2009

மது அருந்துமிடம்.

கிராமம் நகரமும் சார்ந்த இடத்தில் அமைந்த மது அருந்துமிடம். மாலை ஆறு மணி குடிப்பவர்கள் வருவதும் போவதுமாய் ஆரவாரமாய் இருந்தது.

உள் நுழைந்தவர்களை ஏறிட்டு பார்த்த கண்கள் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறுஅவர்களை வடிவமைத்து கொண்டார்கள்.

எல்லா மேசைகளிலும் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. பீர் பாட்டில்களுக்கு இரண்டாவது இடம். மேசைகளில் இருந்த தட்டுகளில் வருகடலை சுண்டல் மேசையில் பாதியும் தட்டுகளில் பாதியும் இரைந்து கிடந்தன.

பாட்டில் மூடிகள் சிகரெட் துண்டுகளும் தரையை ஆக்கரமித்தன.

இருவர் மூவர் நால்வராய் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்கள்.

எலா..பு…மவனே ..நான் சொல்லறத கேளுடா..நீ இன்னம அவன்கிட்ட போவாத..

என்னடா நான் சொல்றது ரைட்டா ..தப்பா…

என அன்றைய வேளையில் ஏற்ப்பட்ட கஷ்டங்கள் ஏமாற்றங்கள் சந்தோசங்களில் விவாதம் தொடங்கி இறந்தகாலம் எதிர்காலம் என நீண்டது.

யேவ்..இங்க வா..

எண்ணண்ண.. சரக்கு சோடா வாங்கி குடுப்பவர்

கணக்குடு..

இந்தாங்க எல்லா போவ பாக்கி அம்பது இருக்கு என நீட்டினார்.

இந்தா பத்த ரூவா..

யாருங்க இந்த மேசக்கு..

இந்தா வர்றேண்ண என்றபடி நகர்ந்தார் சரக்கு வாங்கி தருபவர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails