Tuesday, March 17, 2009

சுகப்பிரசவம் பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்


சுகப்பிரசவம் பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் அந்த கோயிலை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாடல் பெற்றதலமான தஞ்சை மாவட்டம் திருகருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவில் தான் அது.

வசதியானவர்கள் மட்டுமே வழிப்பாடு செய்ய ஏற்ற திருத்தலம் அது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் வந்து கொண்டே இருப்பார்கள்.

எப்படியெல்லாம் காசை வாங்கலாமோ வாங்கிவிட துடிக்கும் நிர்வாகம் ஒருபுறம் காசுக்காகவே வாழும் அர்ச்சகர்கள் வியாபாரிகள் மறுபுறம்.

இதற்கிடையில் நம் பிரார்த்தனை நாம் செலுத்த வேண்டும். எப்படியோ காசை செலுத்தி முண்டியடிக்கும் கூட்டம் ஒன்று பிரார்தனை செலுத்தும்.

பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் அர்ச்சனை சீ்ட்டு பிள்ளைவரம் வேண்டுபவர்கள் வேண்டுதல் செய்ய வேண்டுதல் உபகரணங்களுடன் தனிக்கட்டண சீட்டு என கலர் கலராய்கட்டண சீட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

திருத்தலத்தில் வழிப்பட்டு குழந்தை பெற்றவர்கள் கோவிலுக்கு வந்து வழிப்பட்டு தன் குழந்தையை தங்க தொட்டில் வெள்ளி தொட்டில் வைத்து சவாரி விட பெருந்தொகை வேண்டும். வசதியானவர்களுக்கு உரித்தானது. நடுத்தர மக்கள் சேமிப்பை கரைக்க வேண்டும் அல்லது கடன் கட்டாயம் வாங்கி வர வேண்டும்.

கர்ப்பகிரக்கத்திலிருந்து வெளிவந்த அர்ச்சகர் தீப தட்டுடன்வந்து தீபம் காண்பித்து பணம் வைத்தால் தான் நீங்கள் அங்கே குங்குமம் திருநீறு பூசி கொள்ளலாம் இல்லாவிடில் பணம் படைத்தவர்கள் வாங்கி வைத்திருக்கும் திருநீறு குங்குமத்தை வாங்கி பூசி கொள்ளலாம்.

சைக்கிள் வியாபாரி “ அம்பாளுக்கு அரளி முல்லைவனநாதருக்கு முல்லைப்பூ முழம் பத்து ரூபா” என்று கத்தினார் டாடா -சுமோ விலிருந்து வெளியூரிலிருந்து வந்தவர்கள் இறங்கி கொண்டிருந்தார்கள்.

காசேதான் கடவுளப்பா…

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails