
உன்னுடைய இடத்திற்கு ஆரம்பம் முதலே இனம் புரியாமல் வந்து போனேன்.
வந்தவனை இன்முகத்துடன் வரவேற்றாய். உனை நண்பாக பாவிக்க கற்றுகொடுக்கும் முன்பே நான் வருவதும் போவதுமாக ஆனால் புன்னகை மாற உன் முகம் நீ மௌனமாய்.
உனை பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் நானும் உன் இருப்பிடம் நோக்கிய என்னுடைய நகருதல்.
உன் இன்முகம் வரவேற்கும் நான் உன் நண்பனா என்னால் அறியமுடியவில்லை.
ஆனால் என் மனதில் நம் நட்பு வளர்ந்தது.
மற்றவர்களோ வந்தார்கள் பூஜை செய்தார்கள் விழுந்து புரண்டார்கள் அப்பவும் நீ இன்முகத்துடன்…
அதிலும் உண்மைகள் போலிகள் இருந்தன.
உண்மை ஆரவாரம் செய்யவில்லை
போலி ஆரவாரம் செய்தது.
எல்லாம் கடந்து இன்முகத்துடனே நீ.
No comments:
Post a Comment