Monday, July 27, 2009

எந்தவொரு எண்ணமும் இல்லாமல்


நின்ன நிலையில் ஓங்கி உதைத்தான் அந்த நாயை அது தள்ளிபோய் விழுந்து எழுந்து ஓடியது. கோபம் குறையாமல் நாய் ஓடுவதையே பார்த்து கொண்டிருந்தான்.

வரப்புகளின் நடுவே நடந்து போய் வாய்க்காலில் முகம் கால் கைகள் சுத்தம் செய்ய சென்றான். இவன் வரப்பில் வருவதை பார்த்தவுடன் சாடரென்று தன்னுடைய பாதையை மாற்றி ஓடியது.

நாயை பற்றி எந்தவொரு எண்ணமும் இல்லாமல் வரப்புகளின் வழியே வாய்க்காலை நோக்கி நடந்து சென்றான். வாய்க்காலில் இறங்கி கால் கைகள் சுத்தம் செய்து திரும்புகையில் இவனுக்கு மிக அருகிலேயே வாய்க்காலில் இறங்கி இவனைப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தது.

தூக்கிவாரி போட்டது பயந்து போனான் பயம் கோபமாய் மாறி விட்டான் உதை.

அவன் சுயநிலைமைக்கு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. எப்படி வந்தது என்ற எண்ணத்தோடு நாயை ஓடுவதை பார்த்து கொண்டிருந்தான். நாயும் ஓடுவதும் நின்று பார்ப்பதுமாய் ஓடியது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails