
மனமலர்ச்சியை முகம் காட்டதவறியது. முகம் இறுக்கமடைந்து காணப்பட்டது. எந்த விதமான உணர்ச்சியும்பிரதிபலிக்காது ஓர் உயிர்ப்புக்கான இலக்கணம் இல்லாமல் இருந்தான்.
சிடுமூஞ்சி , அவன் பேச சிரிக்ககாசு கேட்பான்டா என்பார்கள். அவனுடைய மன இறுக்கத்துக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த காரணமாக விசயங்கள் இருக்கவே செய்தது. இவர்கள் வாழ்க்கையில் நடந்தது அவனுடைய வாழ்க்கையில் நடக்காதது தான் காரணம். எல்லோர் போலவும் சிரிப்பான் அழுவான் கோபம் கொள்வான் அவனும் உயிர்ப்பு தான்.
அவனுடைய வாழ்க்கையில் நடந்தவைகள் சுற்றமும் உறவுகளும் அவனை நடத்திய விதம் ஏன் நமக்கு மட்டும் இப்படி ? என்ற கேள்வியே அவனை சிரிக்க விடாமல் செய்தது.
வழிநடத்த அவனுக்கு ஆள் இல்லாமல் போனதால் அவனுடைய அறிவுக்கு அவன் விசயங்களை எடுத்து கொண்டவிதம் ஒரு நூறு சதவீதம் உண்மையானதாகவே இருந்தது.
No comments:
Post a Comment