Showing posts with label மனிதன். Show all posts
Showing posts with label மனிதன். Show all posts

Friday, October 23, 2009

அவனுக்கு ஆள் இல்லாமல்

மனமலர்ச்சியை முகம் காட்டதவறியது. முகம் இறுக்கமடைந்து காணப்பட்டது. எந்த விதமான உணர்ச்சியும்பிரதிபலிக்காது ஓர் உயிர்ப்புக்கான இலக்கணம் இல்லாமல் இருந்தான்.

சிடுமூஞ்சி , அவன் பேச சிரிக்ககாசு கேட்பான்டா என்பார்கள். அவனுடைய மன இறுக்கத்துக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த காரணமாக விசயங்கள் இருக்கவே செய்தது. இவர்கள் வாழ்க்கையில் நடந்தது அவனுடைய வாழ்க்கையில் நடக்காதது தான் காரணம். எல்லோர் போலவும் சிரிப்பான் அழுவான் கோபம் கொள்வான் அவனும் உயிர்ப்பு தான்.

அவனுடைய வாழ்க்கையில் நடந்தவைகள் சுற்றமும் உறவுகளும் அவனை நடத்திய விதம் ஏன் நமக்கு மட்டும் இப்படி ? என்ற கேள்வியே அவனை சிரிக்க விடாமல் செய்தது.

வழிநடத்த அவனுக்கு ஆள் இல்லாமல் போனதால் அவனுடைய அறிவுக்கு அவன் விசயங்களை எடுத்து கொண்டவிதம் ஒரு நூறு சதவீதம் உண்மையானதாகவே இருந்தது.

Monday, February 16, 2009

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

குஜராத் வைரத் தொழிற்சாலைகளில் வேலை இழந்த தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மருந்து பரிசோதனைக்காக பயன்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால் மூடப்பட்டு வரும் வைரத் தொழிற்சாலைகளினால் வேலை இழந்து தொழிலாளர்கள் குஜராத்தில் அகமதாபாத் பரோடா மற்றும் சூரத் நகரங்களில் உள்ள மருந்து பரிசோதனைக் கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் பக்க விளைவு ஏதும் ஏற்படுகிறதா என்று சோதித்து பார்க்க காசுக்காக தங்களை இதில் ஈடுபடுத்துகின்றனர்.

சோதனைக்கு உட்படுத்தப்படும் நாட்களை பொறுத்து அவர்களுக்கு 5 ஆயிரம் முதல்15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

ஆயுள் முழுவதும் பக்க விளைவு இருக்கும். இதற்கு அதிகம் பயன்படுவது ஏழைகள்தான் .

மனிதன் தான் இறைவன் படைப்புகளிலே மிகவும் உயர்ந்தவன். சிரிப்பா இருக்குல்ல...

LinkWithin

Related Posts with Thumbnails