காலை சூரியன் கதிர்களை பரப்பியது. எட்டி பார்க்கையில் ஜொலித்த பசும் இழைகள். பறவைகள் பறந்து கொண்டிருந்தது.சைக்கிள் முன்னேறியது.காலை பயணம் பல்வேறு எண்ணங்களை விதைத்து இயற்கை ரசிப்பில் சைக்கிள் என்.ஹெச்.67 தொட்டு திரும்பியது.
பயணம் தொடர்ந்தது அப்பொழுது தான் வாகனத்தில் அடிப்பட்ட இறந்த காட்டுபூனையின் குடல் வெளிவந்து கிடக்க காக்கைகள் கொத்தி இழுத்தன.
சைக்கிள் முன்னேறியது பல அடிகள் பயணித்த பிறகு நீர் பாம்பு ஒன்று நசுங்கி சக்கையாய் கிடந்த இடத்தை கடந்தது. உணவு தேடலுக்காய் சாலையை கடக்க அதன் பயணம் வாகன ஓட்டிகளால் பாதியில் முடிந்தது.
சைக்கிள் முன்னேறியது ..ச்சே..என்ன வாழ்க்கை இது...
சில அடிகள் கடந்திருக்கும் சைக்கிள்
நீர் ஆமை இடம் மாறும் பயணத்தில் தன் உயிரை வாகனங்களின் சக்கரத்திற்கு இரையாக்கி ரத்தமும் சதையுமாய் ஓட்டின் எல்லாபக்கமும் சிதறி உயிரை இழந்திருந்தது.
மெதுவாக முன்னேறிய சைக்கிள் முன்னே லாரி வந்து கொண்டிருக்க பின் தொடர்ந்து ஒலி எழுப்பிய படி பேருந்து வர சைக்கிள் மெல்ல ஓரத்தில் நின்று பயணம் தொடர்ந்தது.
பயணம் தொடர்ந்தது அப்பொழுது தான் வாகனத்தில் அடிப்பட்ட இறந்த காட்டுபூனையின் குடல் வெளிவந்து கிடக்க காக்கைகள் கொத்தி இழுத்தன.
சைக்கிள் முன்னேறியது பல அடிகள் பயணித்த பிறகு நீர் பாம்பு ஒன்று நசுங்கி சக்கையாய் கிடந்த இடத்தை கடந்தது. உணவு தேடலுக்காய் சாலையை கடக்க அதன் பயணம் வாகன ஓட்டிகளால் பாதியில் முடிந்தது.
சைக்கிள் முன்னேறியது ..ச்சே..என்ன வாழ்க்கை இது...
சில அடிகள் கடந்திருக்கும் சைக்கிள்
நீர் ஆமை இடம் மாறும் பயணத்தில் தன் உயிரை வாகனங்களின் சக்கரத்திற்கு இரையாக்கி ரத்தமும் சதையுமாய் ஓட்டின் எல்லாபக்கமும் சிதறி உயிரை இழந்திருந்தது.
மெதுவாக முன்னேறிய சைக்கிள் முன்னே லாரி வந்து கொண்டிருக்க பின் தொடர்ந்து ஒலி எழுப்பிய படி பேருந்து வர சைக்கிள் மெல்ல ஓரத்தில் நின்று பயணம் தொடர்ந்தது.
No comments:
Post a Comment