Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

Tuesday, January 24, 2012

.ஒரு சொல் முடிந்த அத்தியாயம்


சமீபத்தில் எங்கள்பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழக முதல்வரின் தோழியின் விரட்டியடிப்பு தான்.



எங்கள் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க வின் உடன் பிறப்புகள் அகம் மகிழ்ந்து கிடப்பது தான் உண்மை.

ஒழிந்தது சனியன்….

பார்க்கதான் பட்டை போட்ட நல்லவர் திவாகரன் மிக மோசமான ….பொறுக்கி  அ.தி.மு.வி னாராலே பேசப்படும் அவலம்.

இவ்வளவு  அவமானங்களையும் பொறுத்து கொண்டதன் பின்னனி தமிழக முதல்வரின் உயிர்தோழி  , தோழியின் உறவினர்கள் அரசில் எதையும் சாதிக்கவல்லவர்களாய்  இவர்கள் இருந்தது தான்.

இவர்களின்  விரட்டலில் யாரும் கவலைப்பட்டவர்கள் என்பது கிடையாது.

இவர்கள் செய்தது நம்பிக்கை துரோகம் இவர்களை விட்டு வைக்ககூடாது என்பதே இப்பகுதி மக்களின் ஆவலாய் உள்ளது.

இன்னமும் சூடு குறையாமல் அவர்களைப்பற்றிய செய்திகள் வாசிக்கப்படுகின்றன.


இருக்கும் இடம் அறிந்து தன் எல்லைகளை  அறியாததால் வந்த வினை  அதிகார மையத்தின் ஒரே சொல்  இவர்களை புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகிவிட்டது.

பலமணிகள் காத்து கிடக்க தரிசனம் தருவார்கள் .
ஆனால் இன்றைய  நிலைமை தன் இடம் தெரிந்தால்  தனக்கு ஆபத்து. 

பாவம் இவர்கள்…..

LinkWithin

Related Posts with Thumbnails