Showing posts with label சிறுவன். Show all posts
Showing posts with label சிறுவன். Show all posts

Monday, August 01, 2011

மகிழ்ச்சியும் நிறைவும்


வயலில் வேலை  செய்யும் தன்னுடைய தாயைப்பார்க்க வந்த பிள்ளைகள்  எனைப்பார்த்தவுடன் 

எங்க... எங்கள போட்டோ எடுங்கிறீங்களா.. என்று ஆவலாய் கேட்க...

சில மதிய ,மாலை வேலைகளில்குளப்பக்கம் உள்ள செடிக்கொடிகளில் பிடித்ததை கேமராவில் பதிவு செய்யும் பொழுது வேடிக்கைப்பார்க்கும் எங்கள் ஊர் பெரிய மனிதர்கள் இவர்கள்.

ஹாய்....


நாங்க தான் பெரிய மனுசங்க..


வெட்கம்


நானும் வர்றேன்


நானும் தான்..


இது எப்படி...



தன் முகத்தை கேமராவில் உள்ள திரையில் பார்த்தவுடன்அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிபசித்த நேரத்தில் கிடைத்த நல்லஉண  வினால் வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் திருப்தியைப் போல....

Wednesday, August 18, 2010

ஐந்தாம் வகுப்பு சிறுவனுடன் நேர்காணல்

தம்பி அந்த  கோயில்ல  உக்காந்து இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க என்று தன் நண்பனிடம் சொல்லிவிடைப்பெற்று அங்கிருக்கும் கோவில் கட்டையில் அமர்ந்தான்.

நண்பன் வரும் வரை பொழுது போக வேண்டுமே  என்று கைப்பேசியை  வைத்து நோண்ட ஆரம்பித்தான். இதை கவனித்து கொண்டிருந்த  மாடுமேய்த்து கொண்டிருந்த  சிறுவன் கொஞ்ச  கொஞ்சமாய் அவனை   நோக்கி முன்னேறினான்.

அவன்   சிறுவனை  நோக்கி  திரும்புகையில்   வாயெல்லாம் பல்லாக புன்னகை செய்தான்.

கைப்பேசியில்உள்ள  நிழற்படகருவியினால்  அவனை படம் பிடிக்க வெட்கமாய் சிரித்தான்.

அவன்   சிறுவனுடன் நேர்காணல் நடத்த ஆரம்பித்தான்.

எத்னாவது படிக்கிற…?

அஞ்சாவது.

எங்க ?

அதே அங்க  என்று பக்கத்திலிருக்கும் பள்ளியை காண்பித்தான்.

உம் பேரு ?

பிரவீன்.




டீச்சரா.. சாரா உனக்கு…

டீச்சரு..

எத்தன டீச்சரு  உம்பள்ளிகூடத்துல..

ஆங்..எங்க டீச்சரு பேரு லித்திகா.. இன்னொரு டீச்சரு..

இன்னொரு டீச்சரு பேரு..

தெரியாது.

100 ல்ல  99  போச்சுன்னா எவ்வளப்பா..

சில   நிமிடங்கள் மௌன    ம்.

என்னப்பா எவ்வளவு..

98            .. இது சிறுவன்.

என்னது 98 ....?  அப்ப 50 ல்ல 29  போச்சுன்னா..

 வினாடியும் தாமதிக்காது தெரியல  என்றான்.

சினிமா பாப்பியா ?

பாக்கமாட்டேன்.

எந்த நடிகர புடிக்கும்?

அர்சுன்.

நடிக ?

நடிகன்னா...

அதான் நடிகரோட  சேந்து ஆடுவாங்களே

சே..அதெல்லாம் புடிக்காது.

சாப்பாடு கட்டிட்டு போயிடுவியா...

பள்ளிகூடத்துல போடுவாங்க...

உனக்கு பத்துமா...

நான் நிறைய வாங்கிப்பேன்.

பள்ளிகூடத்துல    யூனிபார்ம்  உண்டா..

உண்டு நான் இன்னும் எடுக்கல..

ஏன்?

அப்பா வேல பாத்த  எடத்துல  காசு வல்லேன்னு சொன்னாங்க..

லீவு நாள்ல என்ன வௌ  டுவ..

கபடி..

யோவ் வாய்யா   என்று நண்பன்  கூப்பிட்டவுன்  சிறுவனிடம் விடைப்பெற்று பறந்தான்.

Wednesday, February 17, 2010

அவன் உலகு





















அரை நிர்வாணம் தான் அவன் அரைக்கால் சட்டை கிடையாது. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒன்றரை வயது இருக்கும் அந்த சிறுவனுக்கு விளையாட தேவை ஒரு பிளாஸ்டிக் சேர் மட்டும் தான். அடுக்கியிருந்த மூன்றில் ஒன்றை எடுப்பதற்கு அதனுடன் போராட்டம் நடத்தி கொண்டிருந்தான்.

நகர்த்தினான் மூன்றும் சேர்ந்து நகர்ந்தது. அவனுக்கு எட்டும் தூரம் ஒரு சேரை தூக்கினான் சிறிது மேல் எழும்பியது. அதற்கு மேல் தூக்க உயரம் இடையூறாக இருக்க அப்படியே திரும்பவும் வைத்தான்.

சிறிதுநேரம் மௌனமாய் நின்றான். பலம் கொண்டு கிழே தள்ளினான். தள்ளப்பட்ட சேரில் ஒன்றை உருவினான்.

அதன் பிறகு அந்த சேர் அவனுடைய வாகனமாக மாறியது. தள்ளி கொண்டே அவன் வீட்டு வாசலிருந்து குறிப்பிட்ட தூரம் போய் திரும்புவதுமாக இருந்தான்.

தள்ளி கொண்டே சென்றவன் திடீரென நின்றான் . சேரை அப்படியே விட்டு விட்டு வீட்டு வாசலுக்கு ஓட்டம் பிடித்தான். வேகத்துடன் அவனது சேரை ஆட்டோ ஒன்று கடந்து சென்றது.

எனக்கு ஆட்டோ அவன் எப்படி அதனை உருவகப்படுத்தி வைத்திருந்தான் என்று தெரியவில்லை. சைக்கிள் இரு சக்கர வாகனங்களை அவன் மதிக்கவேயில்லை. அதைப்பற்றி அவன் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனாலும் அதைப்பற்றிய கவலை இல்லாமல் அவனுடைய விளையாட்டு தொடர்ந்தபடி இருக்க அவனுடைய உலகமும் சமுதாயத்தின் போக்கும் வெவ்வேறாக இருந்தது.

அவன் உலகில் அவன்தான் எல்லாமுமாக இருந்தான்.

இப்பொழுது சிறுவன் முழுநிர்வாணமாகி இருந்தான். சேர் அவனிடமிருந்து காணாமல் போயிருந்தது. வெற்றுடம்புடன் ஓடுவதும் திரும்பவும் ஒடியாரதுமாக இருந்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails