Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Saturday, January 30, 2016

தினம் ஒரு வீரமொழி - சுவாமி விவேகானந்தா்


நான் உங்கள் அனைவரையும் இதயபூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.
தேவி பேராற்றல் வடிவில் உங்கள் நெஞ்சில் எழுந்தருள்வாளாக,
பயமின்மையின் இருப்பிடம் அவள், உங்களைப் பயமில்லாதவர்கள் ஆக்குவாளாக..

Wednesday, December 23, 2015

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு வார்தைகள்



இந்த உலகத்தில் கடினமான விசயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.

இந்த உலகத்தில் பெரிய விசயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறிய மண் குவியலிலிருந்து எழும்புகிறது.

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது.

எனவே  பெரிய விசயங்களை
ஞாநி  ஒருபோதும் செய்யமுயல்வதில்லை

அதனாலேயே,  பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails