Showing posts with label நியாயம். Show all posts
Showing posts with label நியாயம். Show all posts

Thursday, September 09, 2010

அவர்களது நியாயம்

எடுத்த மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி ஓரமாய் சென்று கொண்டிருந்த சிறுவன்  மீது மோதி அவனது  தொடைகளில் ஏறி இறங்கியது.

மோட்டார் சைக்கிளை   மிதித்து  கிளப்பி  கொண்டிருந்தாள் சமான்யமாக கிளம்ப மறுத்தது.  பல முயற்சிகளுக்கு  அப்பால் கிடைத்த வெற்றியி்ல் கிளப்பியவுடன் சிறுவன் மீது மோதியப்படி நின்றது.

அந்த பெண் நிதானப்படுத்தி நின்றுகொள்ள வண்டி மட்டும் கீழே சாய்ந்தது.

சிறுவனை   நோக்கி திட்டி கொண்டே  பெண் முன்னேற  சம்பவத்தை  பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் ஆத்திரம்.
தவறு முழுக்க இவள் பேரில் அவளை  நெருங்கினார்கள் திட்டினார்கள்  சிறுவனை    ஏற்றி கொண்டு  மருத்துவரிடம்  போய் காட்ட சொன்னார்கள்.

அவள் முகம் மாறியது.  பணம் இல்லையே  என்று அவள் சொல்லியும்   அதெல்லாம் தெரியாது  சிறுவனை   மருத்துவரிடம் காட்ட வேண்டும் எண்ண  செய்ய..

 அப்படியே  நின்று கொண்டிருந்தாள். நல்லவேளையாக சிறுவனுக்கு ஒன்றும் பெரிதாக அடியில்லை. பாத்து போம்மா என்று கடுப்புடன்   பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

சிறுவன் கால் தாங்கியப்படியே நடந்தான். இவள் வண்டி தள்ளி கொண்டே நடந்து சென்றாள்.

சாதாரண   மக்களை  நினைக்கையில் மனது கனமானது. சிறுவனை போல் அத்துனை  வலிகளை  தாங்கி கொண்டு  தன்னுடைய  வாழ்க்கையை  ஓட்ட வேண்டிய   ஓட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு ஊ ர் ஒரு குழு  தொடர்வன்முறைக்கு உள்ளாகையில்  தப்பிக்க முடியா   பூனையின் ஆக்ரோசமாய்  வன்முறைக்கு தயாராகுதல் என்பது தவிர்க்க முடியா நிகழ்வு.

ஆனாலும் அவர்களது நியாயம் .....

நினைத்து முடிக்கையில் எட்ட தூரம் வண்டி தள்ளிசெல்லும் பெண் அடிப்பட்ட சிறுவன்   நடந்து செல்வது கண்களுக்கு தெரிந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails