Showing posts with label வாழ்வு. Show all posts
Showing posts with label வாழ்வு. Show all posts

Monday, December 03, 2018

தலை வலிக்கிறது

நமக்கு மன்னிக்கவும் எனக்கு வரும்  தலைவலி பசியினால் வருவது.

நல்லா பசிக்கும்பொழுது சாப்பிடாமல் இருந்தால் மெல்லிய வலியாக ஆரம்பித்து  சாப்பிட்டு பசி தீா்த்தால் கூட  குறிப்பிட்ட மணிநேரங்கள் தீரா துன்பம்.

ஆனால் இந்த தலைவலி...

பணதட்டுபாடு

செய்தே ஆகவேண்டிய செலவினங்களுக்கு பணம் இல்லா சூழலில் நடைபெறும் இடையறா சிந்தனை ...

கடன் கேட்க துணிவில்லாமல் மாற்றுவழிகளில்  பணதட்டுபாட்டிற்கு வழிகள் தேடி ..

ஏதும் அற்ற சூழல் காரணம் தலைவலி.

என்ன செய்ய...

வரும் வழி ஒன்று போகும் வழி பல..பல..

இடையறா சிந்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்க தலைவலி தொடர்கிறது.

தலைவலிக்கிறது.

Friday, January 23, 2015

அறியாமையும் மரணமும்

காரணம் தெரியவில்லை நண்பர்  தற்கொலை செய்து கொண்டார். சில வருடங்களாய் தொடர்பில் இல்லை தான். அவரது மரணம் சிந்திக்க வைத்தது.

அவரது பெண் பேப்பர் படித்தது. அவரது ஆண்பிள்ளை பிள்ளைகளுடன் சிரித்து விளையாடி கொண்டிருந்தான். மரணம் பற்றி தெரியாத பிள்ளைகள்.
பிள்ளைகளை பொருத்தவரையில் நண்பர் தூங்கி கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளின் தாய் சவப்பெட்டியோரம் உடைந்து தேம்பினார்.

வாழத்தெரியாத கோழை மனிதனின் மரணம் தான் தற்கொலை என்று கருத்து சொன்னார்கள்.

இந்த பூமியில் அவரது வேலை முடிந்துவிட்டது உடம்பைவிட இது ஒரு வழி என்ற தத்துவம் சொல்லப்பட்டது.

எதிர்பார்ப்பில் விழுந்த அடி மனைவியை பதறவைத்தது.

எதிர்பார்ப்பு இல்லா குழந்தைகள் விளையாடியது.

அம்மா இருக்கிறார் அப்பா தூங்குகிறார்.

அறவாழி என்ற நணபர் தூங்குகிறார்.



Wednesday, September 18, 2013

இரண்டாவது நாளும் வாய்ப்பும்

வாழ்க்கையில ஜெயிக்க ஒரு குறிகோள குறிப்பேட்டுல எழுத சொன்னாங்க.

சரின்னு எழுதி வைச்சாச்சு…. நாம குறிகோள  சென்றடைய உள்ள வாய்ப்புகள் என்னென்னு பாக்க சொன்னாங்க…




ஆனா  அவனுக்கு அன்றைக்கு  கண் முன்னாடி இருந்த வேலை முக்கியமா பட்டுது.

சரி அவனோட   தனிமையில யோசிச்சா நிகழ்கால பிரச்சனைகள் பெரிசா தெரிய அதற்கான தீர்வு கள் எவை பாக்கதான் நேரம் சரியா இருந்திச்சு.

எதிர்கால குறிகோள் அதற்கான வாய்ப்புகள் பற்றி நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து விடுப்பட்டு யோசிக்க முடியல.

ஆனாலும் தன்னோட குறிகோளுக்கான வாய்ப்புகளை கிடைக்கும் வரை தேடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க்கையில நடந்து கொண்டேயிருந்ததான் சுவாராசியமா இருக்குமுன்னு சொன்னாங்க..

வாங்க நடப்போம்.


தொடரும்..


Monday, September 16, 2013

முதல் பயிற்சியும் நோட்டு புத்தகமும்

முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது.



நோட்டு புத்தகம் அல்லது சின்ன குறிப்பேடு கையில் எடுக்க சொன்னார்கள்.

உண்மையாய் நீங்க என்னவா  ஆகப்போறீங்கன்னு ஒளிமறைவின்றி எழுதுங்கப்பான்னு  சொன்னாங்க...

நான் ஒரு நல்ல எழுத்தாளன் ஆகனும்.

நான் ஒரு நல்ல  சமூக சிந்தனையாளர் ஆக வேண்டும்.

நான் ஒரு நல்ல  விளையாட்டு வீரன்

நான் ஒரு நல்ல பாடகன்

நான்  ஒரு நல்ல கவிஞன்

நான் ஒரு நல்ல இசைஞன்

நான் ஒரு நல்ல கணித அறிஞர் ஆக வேண்டும்   என அந்த பயிற்சியில்  குறிப்பேட்டை  எழுதியவர்கள் ஒவ்வொரு ஒவ்வொரு குறிகோளாய் எழுதினார்கள்.

ஆனால் அவன் தடுமாறினான் எழுத தயங்கினான்.

எழுத தயங்கிய காரணம் நிகழ்கால வாழ்வின்  வலிகளால்  எதிர்காலத்தில் தான் யார் என்பதை நிர்மாணிக்கும் திரணியற்று.

ஆனாலும் அவனது ஆசை  

சமூக வாழ்வில்  நிலையான வாழ்வை அமைத்துகொண்டு உலகம் தழுவிய சமூக தொண்டுகள் செய்யவேண்டும்  என்று தன்னுடைய குறிப்பேட்டில் எழுதி வைத்தான்.

தொடரும்...

Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.



சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.



நிறையவே அறிய ஆவலாய்.....

Friday, December 09, 2011

சுயமே சொர்க்கமாகி



நீர் நிரம்பி உடைந்து போன  என் வயல்வரப்புகளை  சரிசெய்யவே   நேரம் சரியாய் போனது.

பெரியாறு  அணை   ப்பற்றி  அறியமுடிந்தது.  அதனைப்பற்றிய செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே   வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.

ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர் வாங்கிய சொத்துகளில்  தன்னை தற்காத்து வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.

நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக போய்விட்டது.

வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.

சுயமே சொர்க்கமாகிப் போக    நாம் என்பதே  தேடக்கூடிய   ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித சுதந்திரம் எப்பொழுது...????

Monday, November 21, 2011

ஓடியப்படியே தான்



சொல்ல தெரியாதகாரணங்கள் செயல்கள் நடைப்பெறுகின்றன. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கான ஓட்டத்தில் அடிக்கடி நடைப்பெறும் நிகழ்வுகள் நினைவிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

அன்றாட நிகழ்வுகளில் நிறைய போராட்டங்கள் நிறைய உழைப்பு நான் வாழும் சமுதாயத்தில் என்னை  அப்பொழுது தான் ஒட்டவைத்து கொள்ளமுடிகிறது.

ஓடியப்படியே தான் வாழ்க்கையும் ஒடுகிறது.

Tuesday, July 05, 2011

வாழ்க்கை ஓடி கொண்டுதான்...



மனதளவில் நொறுங்கி போயிருந்த அவன் மனதை  சரிசெய்யவது என்பது கடினமாகத்தான் இருந்தது. அவனுடைய   பார்வையில் அவன் உலகத்தில் அவன் ராஜாவாய் இருந்ததால்  முழுமையாக
தன்னுடைய வழி சரியென்று பொருந்திப்போனான்.

தன்னம்பிக்கை புத்தகங்களின் மேற்கோள்கள் நண்பர்களின் கவுன்சிலிங் என அவனுடைய  பிரச்சனைக்களுக்கு தீர்வு காண  ப்பட்டாலும் அவன் பிரச்சனை தீர்ந்துபோய் விடவில்லை.

கேட்கும் நேரங்களில் கவனமாய் கேட்பான் . செயல் படும் விதம் என்னவோ அவன் மனஇயல்பு படி தான் செய்துமுடிப்பான்.

வாழ்க்கை ஓடிகொண்டுதான் உள்ளது.

நீ இதை செய்தால் என்னுடைய சக்திக்கு தகுந்த மாதிரி நானும் அதை உனக்கு  செய்வேன்.

அவசியம் கருதி அவர்களிடம் சொல்லாமல்  ஒரு செயல் இவன் நிகழ்த்திவிட்டால் பதிலுக்கு பதில் செயல்களின் திட்டங்கள் போடப்படும். பதில் செயல்கள் செய்யும் காலங்கள் எதிர்நோக்கப்படும்.  பதிலுக்கு செய்து முடித்தால்  தான் நிம்மதி.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

எதிராளி அவர்களுக்கு செய்யவேண்டும் ஆனால் எதிராளிக்கு அவர்களைப்  பற்றி எந்தகவலையும் கிடையாது. தன்னுடைய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாய்…

எதிராளி யின்  பயன் தரும் செயல் பாதிக்கப்பட்
டால் எத்தனைவருடம் பக்கதில் இருந்தும்  தூசி  தான் அவர்கள்.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

செயல்களுக்காய் முகம்  பூத்து கிடக்கும் செயல்கள் முடிந்தவுடன் ரயில் பயணத்து நட்புகளாய் உறவுகளும் நட்புகளும் …

வாழ்க்கை ஓடி கொண்டு தான் உள்ளது.

வாழ்வின் நகருதல்கள்  இதுபோல் பல்வேறு கரைகள் தொட்டே ஓடி  கொண்டு தான் உள்ளது.


Monday, June 20, 2011

மரணம்


மரணங்கள் எவ்வளவு விரைவாய் சம்பவித்து விடுகிறது.
இறக்கும் முதல் நாள் வரை   தன் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்பி பிள்ளைகள் சென்று மறையும் வரை வாசலில் நின்று தன்னை  வீட்டிற்குள் மறைத்து கொள்வது. மறுநாள் இறக்கபோகிறோம் என்பது தெரியுமா???

நம்முடைய உள்உணர்வுகள் நமக்கு காட்டும்  என்பது ஒரு சிலரின் கருத்து. நாம் நம்மை   உள்நோக்கினால் நம்முடைய எதிர்காலத்தை  கோடிட்டு காட்டும் என்பது அவர்களின் வாதமாய் உள்ளது.

நம்பிக்கையுடன் வாழ பல  காரணங்கள் இருந்தாலும் மரணம் நிகழ ஏதோ  ஒன்று வலுவான காரணமாய் அமைந்துவிடுகிறது.தன் எதிர்பார்ப்பு நிறைவேறா சூழலில்  தற்கொலையும் பிறர் எதிர்பார்ப்புகள் நிறைவேறா சூழலில் கொலையும் நிகழ்ந்துவிடுகிறது.

ஓடுகின்ற உடல் இயந்திர உறுப்புகள் ஓய்வெடுத்து கொள்ள அல்லது பழுது பட்டு  போதலில் தான் இயற்கை மரணம் நிகழும் போல் உள்ளது.

எதிர்பாராத திடீர் விபத்து அல்லது நோயினால் ஏற்படும் இறப்பு துர்மரணமாய் வாழ்வின் போக்கை மாற்றிவிடும் .

குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் இருக்கும் நபரது மரணம்  பெரிய அளவிலான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

பெரிய அள வு சோகத்தை உண்டுபண்ணுவது இளம்வயதினர் மரண ம் தான்.

இன்னொருவரை சார்ந்து வாழ்வு வரும்போது இருந்து கஷ் டப் படுத்துவதை விட போய் சேர்ந்தால் நலம் என்று நினைப்பவர்களும் உண்டு.

மரணம் நம்முடைய எதிர்பார்த்தலில் நிகழுமா?  எதிர்பார்க்காத மரணங்கள் அதிகம் …எதிர்பார்த்த மரணங்களும் உண்டு.

Monday, February 28, 2011

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா


முகம் மலர்ந்து இருந்தது.

சிரித்தப்படியே  பேசிகொ ண்டிருந்தான்.நேரம் ஆ கியும்
கிளாம்பாது நிற்க..

இவ னது நேரம் தெரிந்த நண்பன்  நீ கிளம்பல.. என்று கேட்க

கட்டிங் போ ட கம்பெனி யாராவது வருவாங்களான்னு பாத்துகிட்டு இருக்கேன் என்றான். 

என்ன விசேசம்... என்னிக்கும் இல்லாத அதிசயமாய்  நீ  வீட்டுல  இருப்பதே தெரியாது நைட் எட்டு மணிக்கு   வீட்டுக்கு ஓடிப்போயிடுவ...

என்ன   நிகழ்ந்தது? இவன் மாற்றம் கண்டு கேள்வி கேட்டான்.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா   என்று சிரித்தப்படியே  சொன்னான்.

நாலஞ்சு நாளு   அய்யா ப்ரீ...என்றான்.

உன் பொண்டாட்டி ஊருக்கு போ ன துல  உனகென்ன சந்தோசம் அ ப்படின்னு கேட்டா...

அட போங்க சும்மா பொ ழுதுக்கும்  நை...நைன்னுட்டே இருப்பாங்க...

இவரு பொண்டாட்டி போயி அங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியல?

மதியம்  இரண்டு மணி  மேகங்கள் இடையூறு செய்யாத வெயில் சிமென்ட் தரைத்தளம்  முக்காடிட்டு களத்தில் கிடந்த நெல்லை    இருவர் திரட்டி கொ ண்டிருந்தார்கள்.

பாதங்கள் செருப்பு கிடையாது வெயில் சூடு பற்றிய கவலை யெல்லாம் கிடையாது உழைப்பு.

எழுபது வயதிருக்கும்  கூனலாய் உடம்பு   அந்த பெண்மணிக்கு இருகைகளிலும் இரண்டு விளக்கமர்  கூட்டி கொ ண்டே இருந்தது.

வெயிலின் சூடு தெரிந்தாலும் அதைப்பற்றிய   கவலை  இல்லா உழைப்பு என்ன சொ ல்ல...

Thursday, February 24, 2011

கல்யாண காலங்கள்


கல்யாண   காலம் இது. உறவுகள் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில்எதிர் எதிர்பாலின தகுதியுடைவர்கள் சேர்ந்து கொ ள்ளும் விழா.

காசு பார்த்து குடும்பம் பார்த்து மாப்பிள்ளை   பார்த்து பெண்பார்த்து நிச்சயம் செய்து  பெரியோ ர்கள்பேசி முடித்து நல்லநாளில் இணை  ப்பு விழா செய்யும் நாளில் வரவேற்று அழைப்பிதழ் கொ டுத்துவிடுவார்கள்.

சாதரண  மாய் தெரிந்தவர்களுக்கு ஒரு நாளை க்கு  ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திருமண  ங்கள் நடைபெறும் தகவல் தெரிவித்து குறைந்தபட்சம் மூன்று அழைப்பிதழ்கள் வந்துவிடும்.

முக்கியதுவம் பெறும் அழைப்பிதழ்கள் முதல் இடம்பெறும்.
எனக்கு   நீ வந்தால் உனக்கு நான் வ ருவேன் என்று எழுதப்படாத  ஒப்பந்தித்தின் அடிப்படையில் திருமண  ங்கள் வரவேற்பு என்று செல்லவேண்டும்.

உறவின ர்கள் திருமணம் நண்பர்கள்  திருமணம்  என்றால் கட்டாயமாக இரண்டு நாட்கள் செல்லவேண்டும். வேலை  கருதி போவாது இருந்தால் நாங்களும் உங்க நல்லது கெட்டதுக்கு வரணுமா வேண்டமா என்ற கேள்வியை கேட்டு திண  றடிப்பார்கள்.

தனியொ  ரு வாகனம் என்றால் பிரச்சனை  இல்லை . பேரூந்து பயண  ம் என்றால் நசுங்கலும் கசங்கலுமாய்  தான் செல்லவேண்டும்.  திருமண  த்திற்கு செல்லவேண்டிய காலைவேளை களில் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளை   சரியாய் செய்து முடித்து கிள ம்புவதற்கு தனியொ ரு பக்குவம் வேண்டும். இல்லாவிடில் காலை  வேளை களில் ஏற்படும் வார்த்தை வாதங்களை   தவிர்க்க முடியாது.

எது எப்படியாக இருந்தாலும்  நம்கென்று நாலு பேர் வேண்டும் என்ற  எண்ணத்தில் உருவாகும் இத்தகைய  சிரமங்கள் ஒன்றுமே இல்லாது போ ய்விடும். 

Thursday, February 03, 2011

அவர்



தலையில் முண்டாசு காக்கிகால்சட்டை இடுப்பில் பச்சை பெல்ட் மேல் வெள்ளை பனியன் எவரிடமும்  அதிகம் பேசாதுவேகமான  நடை   முழுதும் நரைத்த தலைமுடி தாடி மீசை வெளுத்த மார்ப்புமுடிகள் அவரை சுலபமாய் அடையாளப்படுத்தும் .

வயதுக்கான உடலோ  மனமோ  கொ ஞ் சமும் இ ல்லாதவர் நரைத்த முடியை வைத்து  அ னுமானித்தால் உண்டு.

உடலை  பாதிக்கின்ற எந்தவிதமான  பழக்கவழக்கங்களுக்கும் உட்படாத   இன்றள வும் இளை ஞ னின் சுறுசுறுப்பாய் அ வர்.

இருவர் பெண்பிள்ளை கள் மூவர் ஆ ண்பிள்ளைகள். தன்  ஆ ண்பிள்ளைகளுக்கு தனி தனியாக  வீடு  பெண்பிள்ளை கள் இருவரையும் நல்லமுறையில் திருமண  ம் செய்வித்தார்.

தான் பார்த்த அ ரசாங்க வேலையில்   ஓய்வு பெற்றவுடன் வ ந்த பண த்தில் பிள்ளை களுக்கு கொடுத்தார். பிள்ளைகள்  சிலர் வாங்கி கொள்ள  சிலர் மறுக்க  ..மறுத்த பிள்ளை  களை   பற்றி சிறிதும் கவலை படவில்லை .

உடல்தகுதி மனமும் இளமை  அவரில் தோன்றும் எண்ணங்களுக்கு பதிலாய்  தன்னை   கடுமை யான  விரதங்களுக்கு உட்படுத்தி  மாதம் ஒரு கோவில் போய்விடுவார்.

தன்னள வில் தான் ராஜாவாய் இருந்து தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்து மனிதர்களில் முன்மாதிரியாய் இருப்பவ ர்.

அவர் தான் தோட்டி என்று பொதுசனங்களால் அ ழைக்கப்படும் குப்புசாமி.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்யும்  துப்புரவு பணியாளர் தொம்பன் இனத்தை சார்ந்தவர்.

Saturday, January 08, 2011

நன்கொடையும் பிச்சையும்



கோவில் புண  ரமைக்கும் பணி அந்த கிராமத்தில் தொட ங்கியது. பெரிய தொகை  செலவாகும் நிகழ்வு அது. நிதி வேண்டி கை நீட்டப்பட்டது.  தனிமனிதன் கை நீட்டினால் அது பிச்சை   குழு  கை   நீட்டினால் அது நன்கொ டை.

அரசாங்க அ திகாரி யும் அலுவல ர்களும் கை நீட்டுவது அது கௌ  ரவ பிச்சை.
அதாங்க லஞ்சம். …

பொ துமக்கள் தாராள மாய் நிதி வழங்கும் பொ ருட்டு கவர்ச்சி அறிவிப்பு ஒ ன்றும் வெளியிடப்பட்டது. ரூ 10000   க்கு  மேல் நன்கொ டையாக தருபவர்களின் பெயர்கள் கல்வெட்டில்  பெய ர் பொ றிக்கப்படும் என்பது தான் அ றிவிப்பு.

ஊ  ரில் வாழும்பெரும் பண  க்காரர்கள் பிழை ப்புக்காய் வெளிநாடு சென்றவர்கள் தங்களால் இயன்றவரை   கொ டுத்து தங்களுடைய  பெயர்கள் கல்வெட்டில்வர நிச்சயப்படுத்தி கொ  ண்டார்கள்.

இ ப்படியாக  நிதி கொ டுத்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்குஅருகில் வாழும் சுற்றத்தார்களுடைய   குழந்தைகளின் கல்வி   பொ  ருளாதார இடர்பாட்டினால் கேள்வியாய் நிற்கும்.   ஏழ்மையினால்  மட்டுமே சமுதாயத்தில் விலை   போ  காத முதிர்கன்னிகள் நிறை யவே இருப்பார்கள்.

இதை விடவும் கொ டுமையாக  தன்னை   பெற்றவர்களுக்கும்   தன்னுடன் உடன்பிறந்த வர்களுக்கும் பயன்தராத  இந்தபணம் இது போ ன்ற கோ வில் காரியங்களுக்கு பயன்தரும்

 "கவிக்கோ' அப்துல் ரகுமான் அ வ ர்களின் கவிதை வரிகள் மிகவும்  சிந்தனை க்குரியது.


சகோதரா
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்
நீ நூல் பல கற்றபோது
நூலால் உயரும் பட்டம்போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்து கொண்டேயிருக்கிறாய்
மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கிவிட்டது
பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றுடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா?

Sunday, October 03, 2010

அய்யோ சாமி….



நண்பருடைய  உறவினர் துக்கத்திற்கு  மாயவரம் வரை  சென்று குடந்தை வழியாக  திரும்பி கொண்டிருந்தோம்.
குடந்தையின் உள்ளே சொந்த வேலையின் காரணமாக  நகரின்
பல  வீதிகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை.

ராமசாமி கோவில்  வீதியில் அமைந்து்ள்ள  பஞ்சலோக சிலை தயாரிப்பு கடையில்  சுவாமி சிலைகள்  கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைந்திருந்தார்கள்.

ஒவ்வொரு சிலையாக  பார்வையிட்டு கொண்டே நகர்ந்தேன்.  கடையின் உட்புறம் கண்களை  நகர்த்த   அய்யோ…சுவாமி..
மனசு கத்தியது.

அந்த மனிதன் கால்களுக்கிடையே  நடராஜர்  அல்லாடி கொண்டிருந்தார். ரம்பம் வைத்து  நடராஜரின் தோல்புறம் சரிசெய்து கொண்டிருந்தார்.

வண்டி நகர்ந்தது அடுத்தகடை யையும் உள்நோக்க    அங்கே  பிள்ளையார் சிறு  உளி வைத்து சுத்தியலால் அடிக்கப்பட்டு கொண்டிருந்தார்.

எலுமிச்சை  , தயிர் , பன்னீர், இளநீர் , மஞ்சள் தூள் மேலும் திருநீறு  ஆகியவற்றால் அபிசேகம் செய்யும் திருமேனியா இது.

ஆயிரம் ஆயிரம் ஜோடி கைகள் ஆண்டவனே …ஆண்டவனே..மனமுருகி வணக்கம் செய்யும் திருமேனியா  ஒரு மனிதனின் கால்களுக்குள் அகப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த மனிதன் பிள்ளையாரை   தூர வைத்து கண்களால் அளவிட்டான். ஏதோ முனுகினான்…

திரும்பவும் அவனது கால்களுக்கிடையே   பிள்ளையார் உட்கார்ந்து கொள்ள..

உளியால் செதுக்க ஆரம்பித்தான். அய்யோ   சாமி….

Wednesday, September 22, 2010

இடிந்த வீடு

காலையில்   கண்விழித்தவுடன் சிறுநீர்  கழிக்க  ஒரு வீட்டிற்குரிய  அங்கலட்சணங்களை  இழந்து கொண்டிருந்த கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கினான்.

எழுந்து  நின்று சோம்பல் முறிக்கையில் கட்டிடத்தின் நிலைகுத்திய  கண்களின்  வழியே அந்த   வீட்டில்  வாழ்ந்தவர்களின் நினைவில்  மூழ்கிபோனான்.

கிராமத்தினுடைய    சிவன் கோவில் அர்ச்சகருக்காக  ஒதுக்கப்பட்ட    வீடு  அது.  ஐந்து பையன்கள்  ஒரு பெண்   இவர்கள் இருவரையும் சேர்த்து எட்டு பேர்.

கோவிலில் கொடுக்கும்  சம்பளமாய் நெல்  அவர்களுடைய பசியை  போக்கியும் போக்காமலும். செவ்வாய் வெள்ளியில்
கிராம காளிகோவில் தட்டில் விழும் ஒரு ரூபாய் ஐம்பது காசு நாணாயங்கள் தான் அர்ச்சகருடைய அதிகப்படியான வருமானமாக இருந்தது.


அவ்வப்போது  பெரியகோவிலில்  நாள் நட்சத்திரங்களில் கிராம மிராசுகள் செய்யும் அர்ச்சனைக்காக  அவர்கள்  பத்து  ரூபாயும் ஐந்து ரூபாயும் உபரி சம்பளம்.

இதில் ஆறு பிள்ளைகளின் தேவை  நிறைவேறி  படிக்க வைக்கவேண்டும்.   அந்த       கீற்றின் வீட்டின் வழியே வீட்டினுடைய உட்புறம் மழையோ    வெயிலோ     பஞ்சமில்லாமல் மழை பெய்யும் வெயில் அடிக்கும்.
பிள்ளைகளுடைய  கிளிசல் இல்லா உடைகள்  என்பது அபூர்வம்.

எவ்வளோ  கஷ்டங்களுக்கிடையேயும் அந்த அர்ச்சகர் கோவிலுக்குரிய கடமைகள்  அர்ச்சனைகள்  மிகவும் கர்ம சிரத்தையுடன் செய்து முடித்து விடுவார்.

எப்படியோ பிள்ளைகளையும் வளர்த்தார். பெரிய பிள்ளை   தட்டு தடுமாறி  சென்னைக்கு போய் கோவில் ஒன்றில்  அர்ச்சகராக  அந்த வீட்டின் நிலைமை மாறத் தொடங்கியது.

இன்று எல்லோரும் சென்னை க்கு இடம் மாறி மிகவும் நல்லநிலைமையில் உள்ளார்கள். வருடத்திற்கு ஒரு தடவை  வந்து கோவிலுக்கு அர்ச்சனை  செய்து விட்டு போவார்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில்  இருந்தாலும்  கஷ்டங்களுக்கிடையே இங்கு இருந்த நிம்மதி அங்கு இல்லை என்பது  அவர்களுடைய கருத்தான       இருந்தது.


என்னப்பா ஓரே இடத்துல நின்னுகிட்டு காலையிலே  யோசனை  ...  குரல்  கேட்டு அவனுடைய நினைவுகள் கலைந்தது.

Tuesday, September 14, 2010

ஓனானின் உள்அறிவு




மரங்களில் ஏறி
இலைகளில்  மறைந்து
காகங்களின்  தாக்குதலுக்கு
தப்பித்த ஓனான்கள்

காகங்களின் பறத்தலுக்கு
ஓனான்களின் ஓட்டம்
பலவீனம்

இலைகளில் மறைந்து
தப்பித்த ஓனான்களின்
ஓட்டம் நிற்காமல்
இன்னொரு புதர் நோக்கி

சிறுசமவெளி கடக்க
உயிர் உண்டு சொல்லிய
ஓனானின் உள்அறிவு
ஓட்டமெடுத்த  ஓனான்

நாற்கால்கள் பரப்பி
வேகமெடுக்கையில்
காந்திருந்த காகம்
பறந்து கொத்த...

இன்னும் வேகம்
உயிர் தேவை  ஓட....

ஊமை வெயிலில்
காய்ந்த உடல்கள்.

Thursday, September 09, 2010

அவர்களது நியாயம்

எடுத்த மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி ஓரமாய் சென்று கொண்டிருந்த சிறுவன்  மீது மோதி அவனது  தொடைகளில் ஏறி இறங்கியது.

மோட்டார் சைக்கிளை   மிதித்து  கிளப்பி  கொண்டிருந்தாள் சமான்யமாக கிளம்ப மறுத்தது.  பல முயற்சிகளுக்கு  அப்பால் கிடைத்த வெற்றியி்ல் கிளப்பியவுடன் சிறுவன் மீது மோதியப்படி நின்றது.

அந்த பெண் நிதானப்படுத்தி நின்றுகொள்ள வண்டி மட்டும் கீழே சாய்ந்தது.

சிறுவனை   நோக்கி திட்டி கொண்டே  பெண் முன்னேற  சம்பவத்தை  பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் ஆத்திரம்.
தவறு முழுக்க இவள் பேரில் அவளை  நெருங்கினார்கள் திட்டினார்கள்  சிறுவனை    ஏற்றி கொண்டு  மருத்துவரிடம்  போய் காட்ட சொன்னார்கள்.

அவள் முகம் மாறியது.  பணம் இல்லையே  என்று அவள் சொல்லியும்   அதெல்லாம் தெரியாது  சிறுவனை   மருத்துவரிடம் காட்ட வேண்டும் எண்ண  செய்ய..

 அப்படியே  நின்று கொண்டிருந்தாள். நல்லவேளையாக சிறுவனுக்கு ஒன்றும் பெரிதாக அடியில்லை. பாத்து போம்மா என்று கடுப்புடன்   பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

சிறுவன் கால் தாங்கியப்படியே நடந்தான். இவள் வண்டி தள்ளி கொண்டே நடந்து சென்றாள்.

சாதாரண   மக்களை  நினைக்கையில் மனது கனமானது. சிறுவனை போல் அத்துனை  வலிகளை  தாங்கி கொண்டு  தன்னுடைய  வாழ்க்கையை  ஓட்ட வேண்டிய   ஓட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு ஊ ர் ஒரு குழு  தொடர்வன்முறைக்கு உள்ளாகையில்  தப்பிக்க முடியா   பூனையின் ஆக்ரோசமாய்  வன்முறைக்கு தயாராகுதல் என்பது தவிர்க்க முடியா நிகழ்வு.

ஆனாலும் அவர்களது நியாயம் .....

நினைத்து முடிக்கையில் எட்ட தூரம் வண்டி தள்ளிசெல்லும் பெண் அடிப்பட்ட சிறுவன்   நடந்து செல்வது கண்களுக்கு தெரிந்தது.

Thursday, September 02, 2010

கருத்துகள்


என்  வாழ்வின்
நடக்கா செயல்கள்
என்  பார்வை
ஒன்று
மற்றவர்களின் பார்வை
வெற்றி பெறா
என்  வாழ்வியல்
உள்ளே
எத்தனை கருத்துகள்
இரக்கமாய்
விதியாய்
செயலின் விளைவாய்
மற்றவர்கள்
கருத்து கூறும்
என் வாழ்வு
இயல்பாய்..

Wednesday, September 01, 2010

இக்கரைக்கு அக்கரை



குழப்பங்களுடன் நகரும் வாழ்வு இக்கரைக்கு  அக்கரை பச்சைக்காக அலையும் வாழ்வு வாழ்க்கையின் குறிகோள் இதுவென்று அடைந்தவர் எத்தனை பேர்?

அவன்  சம்பாதிக்கிறான்  இவன்  வீடு கட்டிவிட்டான்  நாள்தோறும் மற்றவர்களை    ஒப்பிட்டு  செல்லும் வாழ்வில் கிடைக்கும் ஒன்றிரண்டு  மகிழ்ச்சிகளை  இழந்து விடும் அவலம்.

எங்கு  புத்தி போயினும்  இல்லாதவை   பற்றியே நினைக்கும் உடும்பு பிடி வாழ்வு. முகமும்  உர்ரென்று…

சமூகத்தின் அவமானங்களை    சந்தித்து  மனம்  கூனி குறுகி நம்முடைய வாழ்விற்காக மற்றவர்களை  குறைகூறும் பண்பு.
வாய்ப்புகள் இன்மையால்  வீணாகும்   திறமை. தேவை   வினை  ஊக்கி  வெந்த   புண்ணில்  ஊசி குத்த பலப்போ்  ஆனால் ஊக்குவிப்பிற்கு….

இதையெல்லாம் தாண்டிதான் வரனும் தன்னம்பிக்கை பேசும். பின்னனியில்   தூக்கி விடும்ஏணிகளுடன்
நிறைய பேரின் பேச்சுதன்னபிக்கை.

ஒவ்வொரு செயலும்   நபரும் வள்ளுவனின்  வாக்கு ப்படி தகுந்த சந்தர்ப்பம்     காலம்  வரும் வரை   செயலின் வெற்றியோ  அல்லது நபரின் வெற்றியோ   பல்வேறு  வலிகளுக்கும் விமர்சனங்களுக்கு  உள்ளாக வேண்டிய ஒன்றே..

அதுவரை இக்கரைக்கு அக்கரை பச்சையே.

LinkWithin

Related Posts with Thumbnails