Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 06, 2016

சும்மா இரு



சும்மா இரு
நினைவுகள்
தானாய் ஓடியது
திரும்பவும்
சும்மா இரு
இரண்டு நிமிடங்கள்
பார்த்தது
கேட்டது
படர்ந்தது
கிளைத்தது
சுயம்
தொலைந்தது
சும்மா இரு
சுயம் தெரிய
சுகம் தெரிய
எண்ணங்கள்
தொலைவது
எப்போது?

Monday, April 18, 2016

பாதுகாப்பும் அரவணைப்பும்


பாதுகாப்பும்
பந்தமுமாய்
இணைப்பு
இருக்கும் உலகின்
புதிய வரவாய்
வளச்சியை
நோக்கிய
பயணம் ஆரம்பத்தில்
தாயின் அரவணைப்பு
காவலாய்....


Sunday, April 03, 2016

ஒரு பெண் பார்க்கிறாள் .


ஒரு பெண்
பார்க்கிறாள்
கண்கள் மட்டுமே
தெரிகிறது
கண்கள் சந்திக்கிறது
மறுநாள்
மறுநாள்
கண்களோடு
கண்கள் சந்திக்க..
கண்களின் 
சந்திப்பிற்காகவே
வினாடிகள்
இயல்பாய் கடந்தும்
காலம் ஓடவில்லை
வழக்கத்திற்கு மீறிய 
செய்கைகளாய்
கண்கள் மட்டும்
வரும் 
திசை நோக்கிய
அவதானிப்பில்
அடிக்கடி பாயும்
கண்கள்
காலம் கடக்கிறது
கண்கள் தான்
சந்திக்க வரவில்லை..



Monday, March 28, 2016

கோடைவெயில் சில காட்சிகள்

மேகங்களின்
தடை இல்லா
சூரிய வெளிச்சத்தில்
தவித்தபடியே
ஓடும்
செருப்பில்லா சிறுவன்
குட்டையும்
நெட்டையுமாய்
வியர்வையில் நனைந்த
பள்ளி சிறுவர்களும்
சிறுமிகளும்
தோளில்
ஒரு பிள்ளை
கையில் மறுபிள்ளை
கடைத்தெரு
செல்லும் தாய்
வெள்ளை மேகம்
ஒன்று கடந்து போக
வெயில் சூட்டுக்கு
சிறிது இடைவெளி
கண்கள் மட்டும்
தெரிய
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
சிரித்தபடியே
செல்லும்
கல்லூரி பெண்கள்
வெயிலாவது..!!
வெப்பமாவது..!!
உழைத்தால் காசு
வியர்வை வழிகிறது
சுமை இழக்கும்
தட்டு வண்டிக்காரர்
கோடை வெயில்
காய்கிறது.

Wednesday, January 13, 2016

நாளையும் தொடரும் இந்தப் பரபரப்பு



பொங்கல் பண்டிகையின்
பரபரப்பு
கடைத்தெருவில்

குருடர்
பிச்சையெடுக்க
சிறுவன் வழிகாட்டி
மகனா என்று
தெரியவில்லை
காசு விழும்வரை
நிற்காத
டப்பாவின் குலுக்கல்

குச்சி ஊனி
கடந்து செல்லும்
பாட்டி

கரும்பையும்
வாழைத் தாரையும்
சுமந்து செல்லும்
கிராமத்துத்தலைகளும்
தோள்களும்

துணைக்குப் பிள்ளைகள்
பையில் மஞ்சள்கொத்தும்
பலசரக்கும்

இடுப்பில் கைப்பிள்ளை
கையில் ஒருபிள்ளை
இலக்கு நோக்கி
நடக்கும் பெண்மணி

மதிய பள்ளிக்கு
சிரித்தபடியே
சீருடையில் செல்லும்
சிறுவர்கள்

தலைவரிசை
வைக்க கரும்புகட்டு
ஏற்றிசெல்லும்
ஆட்டோகளும்
கார்களும்

நாளையும் தொடரும்

இந்தப் பரபரப்பு....

Tuesday, December 22, 2015

நாட்குறிப்பு கவிதை 22.12.15


அறிவுறத்தலில்
தொடங்கிய நாள்
ரூபாய் ஆயிரம்
தவறவிட்டதில்
தொடர்ந்தது
வாடிய முகம்
எண்ணங்கள்
தாறுமாறாய்
மதியம் வரை
அல்லாடிய மனது
தவறுகள்
இயல்புதான்-பேச்சு
ஆயிரம்
போய்விட்டதே..
மனதின்
எண்ணங்கள்
அடங்காத நாள்.

Wednesday, December 16, 2015

முகமூடிகள்



ச்சே..
தூக்கி எறிகிறேன்
திரும்பவும்
ஒட்டிக்கொள்கிறது.

உண்மையில்
ஓட்ட முடியா
வாழ்வு

ஒட்ட வைப்பதால்
ஓடும் என்றால்

ஒட்டவைப்பது

இயல்பாகிறது.

Saturday, December 12, 2015

புகைப்படமும் ம்மாவும்



கட்டு அறுத்தல்
தெரியும்
கயிற்றுக்குள்
அடங்கிய பலம்
வஞ்சித்த மனிதனின்
வருகை நோக்கி
ம்மா....


Wednesday, December 09, 2015

இன்று காலையும் கண்முன் விரிந்த காட்சிகளும்


மழை முன்னறிவிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை

பத்து நாட்களாய்
கரு மேகங்களுக்கு
சிறைப்பட்ட சூரியனின்
வருகையால்
பரவிய வெளிச்சம்

காற்று வாக்கில்
போகும் மேகம்
தூவும் மழைச்சாரல்

ரசித்து நனைந்தபடியே
செல்லும் மக்கள்

விளையாடும் சிறுவர்கள்
ஆகா...
குரங்களின் வருகை
குதுகலமாய் சிறுவர்கள்

சிவப்பு முண்டாசு
பொண்டாட்டியுடன்
கடைத்தெரு போகிறார்

ஓட்டமும் நடையுமாய்
அம்மா சொன்ன
வேலை முடித்து
வீடு நோக்கி செல்லும்
சிறுமி

சிந்தனை முகமாய்
முஸ்லீம் பெரியவர்
சைக்கிள் ஓட்டுகிறார்

தலைச்சொரியும்
சட்டையில்லா
துப்புரவு தொழிலாளி

யார் வீட்டு
கொட்டடியில் இருந்து
வெளியேறும்
ஆடுகளும் மாடுகளும்

இன்று காலையும்

கண்முன் விரிந்தகாட்சிகளும்.

Thursday, December 03, 2015

பெய் மழையே பெய்




பெய் மழையே பெய்

பெய்து
உருவாக்கினாய்தடம்

மனிதர்களின் ஆசை
அழிந்ததடங்கள்

வீதிகள் ஆறாகின
குடியிருப்பு குளமாகியது

உன் தடத்தில்
அரசியல்
உன்தடம் தடுமாறிப்போனது

மக்கள்
மாக்கள் ஆகி
திரியத்தான்

அரசியலும்
அரசியல் கட்சிகளும்

பெய் மழையே பெய்
நீ இயற்கை

மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன் வழித்தடங்கள்

வீதி ஆறுகளும்
குடியிருப்பு குளங்களும்
இயற்கையே…

Sunday, November 29, 2015

கவிஞர் மு.மேத்தாவின் ஆகாயத்திற்கு அடுத்தவீடு


ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
உன்னிடம்  கொண்டுவந்து
சேர்த்துவிடும் என்னை
இந்தக் கடிதம்!

எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என்கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!

காற்று உன் வீட்டுக்
கதவுளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுப்படுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!

ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

வாரந்தோறும்
வந்துபோகின்றன
ஞாயிற்றுக்கிழமைகள்...
வருவாயா நீ?

பூங்கொத்து வேண்டாம்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...

புகை வண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்.
“இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!”

அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பாிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

Wednesday, November 25, 2015

மழைக்கு ஒதுங்கிய நாய்கள்

மழைக்கு ஒதுங்கிய
நாய்கள்

நனைந்த உடம்பு
நடுக்கிய குளிர்

கதகதப்பிற்கு
காய்ந்த இடம்
தேடுகையில்

கிடைத்த இடம்
கடையின் மிதியடி

தலை மடக்கி
வால் சுருட்டி
உடம்பைச் சூடாக்கியது

கடைக்காரரின்
த்தே..ச்சூ…
காற்றில்
பறந்துப்போக

தலைநிமிர்த்தி
கடைக்காரரின்
முகம்பார்கையில்

பவ்யமாய்
அனுமதி கோரல்

மீண்டும்
தலை மடக்க
உடம்பு சூடாகியது.






Wednesday, November 06, 2013

பிடி மீறுதலில்



காட்சி பிழையாய்
நகரும் வாழ்வு
முடிந்த இடத்தில்
தொடர்கிறது-நம்பிக்கை

எதிர்பார்ப்புகள்
எத்தனை தூரம்
இழுத்து சென்றாலும்
அலுப்பதில்லை- முயற்சி

நிரந்தரமற்ற
நாளைக்குள்
இன்றைய என்னை
தொலைத்தேன்-கனவு

நகர்கிறது
வாழ்வு நகர்கிறது

பிடிக்குள்
பாசம்
பிடி மீறுதலில்
அன்பாகியது

கட்டு அறுத்தலில்
தொடங்கிய வாழ்வு
காட்சி பிழையாய்

முடிந்து போகிறது.

Friday, July 26, 2013

சுடுமணலில் நடக்கும் வாழ்வு

காரணம் தெரியா
கோபம்
முகம் சுளித்து
வேகமாய்
உமிழ்ந்த வார்த்தைகள்
இளம் வெயிலின்
காலையில்
எதிராளியின்
மனது குமுறியது
தன் குற்றம்
தெரியாது தடுமாற்றம்
பதில் பேசா
மௌனமாய் நகருகையில்
மனது வலித்தது
தன்பக்க நியாயங்களை
வேக வேகமாய்
எடுத்துரைக்க
செய்குற்றம்
புரிந்தது

இருவருக்கும்
அன்றைய பொழுது
உப்பு இல்லா
உணவாய்
சப்பென்றிருக்க
ஆர்வம் இல்லா
பேச்சுகள்
புன்னகையை மறந்த
உதடுகளாய்
சுடு மணலில்

நடக்கும் செயலாய்....

Friday, March 08, 2013

கோபம்


கால தாமதமான
சாப்பாட்டு  நேரம்

வேலை 
விடும் நேரம்
படியேறிய  வாடிக்கையாளர்

புறப்படும் நேரம்
சொல்லப்படும் வேலை

விடுமுறையில்
வேலைக்கு வா

வேலைநாளில்
விடுமுறை இல்லை

சிறிய தவறு
பெரிய வசவு

மறுக்கப்படும்
சுதந்திரம்

Saturday, February 23, 2013

இதுவல்ல நேரம்






கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்
தவறுகள்
சரி பார்க்கப்படுகிறது
நிகழ்காலம்
விழிப்புணர்வு
அற்று
நாளைய பொழுதுகளில்
திரும்பவும்
சரிப்பார்க்க
கரைந்த நிமிடங்களில்
தான்
என்னை தேடுகிறேன்.

Tuesday, February 12, 2013

வெறியாட்டு


காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

நன்றி - தினமணி

Monday, January 28, 2013

தோற்கும் கணவன்



வேண்டாத சொல்
முகம் தூக்கிவைத்து
கொள்ளும் கொல்லும்
மனைவி
சமாதானங்களில்
தோற்றுபோகும் கணவன்
முயற்சியில்
ஏமாற்றம் கோபமாய்
வந்து விழும்
வார்த்தைகள்
உற்று நோக்கிய
வார்த்தைகளில்
குற்றம் செய்தவன்
கணவன்
தன் நிம்மதி
தொலைத்துவிடும்
பயத்தில்
தொடரும் நிகழ்வாய்
சமாதானங்கள்...

Saturday, March 31, 2012

பெற்றோரின் கண்ணீரில்




மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில்வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உணக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும்தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவைநீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும் போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும் !

(படித்தது)

LinkWithin

Related Posts with Thumbnails