Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Sunday, April 03, 2016
ஒரு பெண் பார்க்கிறாள் .
பார்க்கிறாள்
கண்கள் மட்டுமே
தெரிகிறது
கண்கள் சந்திக்கிறது
மறுநாள்
மறுநாள்
கண்களோடு
கண்கள் சந்திக்க..
கண்களின்
சந்திப்பிற்காகவே
வினாடிகள்
இயல்பாய் கடந்தும்
காலம் ஓடவில்லை
வழக்கத்திற்கு மீறிய
செய்கைகளாய்
கண்கள் மட்டும்
வரும்
திசை நோக்கிய
அவதானிப்பில்
அடிக்கடி பாயும்
கண்கள்
காலம் கடக்கிறது
கண்கள் தான்
சந்திக்க வரவில்லை..
Monday, March 28, 2016
கோடைவெயில் சில காட்சிகள்
மேகங்களின்
தடை இல்லா
சூரிய வெளிச்சத்தில்
தவித்தபடியே
ஓடும்
செருப்பில்லா சிறுவன்
குட்டையும்
நெட்டையுமாய்
வியர்வையில் நனைந்த
பள்ளி சிறுவர்களும்
சிறுமிகளும்
தோளில்
ஒரு பிள்ளை
கையில் மறுபிள்ளை
கடைத்தெரு
செல்லும் தாய்
வெள்ளை மேகம்
ஒன்று கடந்து போக
வெயில் சூட்டுக்கு
சிறிது இடைவெளி
கண்கள் மட்டும்
தெரிய
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
சிரித்தபடியே
செல்லும்
கல்லூரி பெண்கள்
வெயிலாவது..!!
வெப்பமாவது..!!
உழைத்தால் காசு
வியர்வை வழிகிறது
சுமை இழக்கும்
தட்டு வண்டிக்காரர்
கோடை வெயில்
காய்கிறது.
தடை இல்லா
சூரிய வெளிச்சத்தில்
தவித்தபடியே
ஓடும்
செருப்பில்லா சிறுவன்
குட்டையும்
நெட்டையுமாய்
வியர்வையில் நனைந்த
பள்ளி சிறுவர்களும்
சிறுமிகளும்
தோளில்
ஒரு பிள்ளை
கையில் மறுபிள்ளை
கடைத்தெரு
செல்லும் தாய்
வெள்ளை மேகம்
ஒன்று கடந்து போக
வெயில் சூட்டுக்கு
சிறிது இடைவெளி
கண்கள் மட்டும்
தெரிய
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
சிரித்தபடியே
செல்லும்
கல்லூரி பெண்கள்
வெயிலாவது..!!
வெப்பமாவது..!!
உழைத்தால் காசு
வியர்வை வழிகிறது
சுமை இழக்கும்
தட்டு வண்டிக்காரர்
கோடை வெயில்
காய்கிறது.
Wednesday, January 13, 2016
நாளையும் தொடரும் இந்தப் பரபரப்பு
பொங்கல்
பண்டிகையின்
பரபரப்பு
கடைத்தெருவில்
குருடர்
பிச்சையெடுக்க
சிறுவன் வழிகாட்டி
மகனா
என்று
தெரியவில்லை
காசு விழும்வரை
நிற்காத
டப்பாவின்
குலுக்கல்
குச்சி
ஊனி
கடந்து
செல்லும்
பாட்டி
கரும்பையும்
வாழைத் தாரையும்
சுமந்து
செல்லும்
கிராமத்துத்தலைகளும்
தோள்களும்
துணைக்குப் பிள்ளைகள்
பையில்
மஞ்சள்கொத்தும்
பலசரக்கும்
இடுப்பில்
கைப்பிள்ளை
கையில்
ஒருபிள்ளை
இலக்கு
நோக்கி
நடக்கும்
பெண்மணி
மதிய
பள்ளிக்கு
சிரித்தபடியே
சீருடையில்
செல்லும்
சிறுவர்கள்
தலைவரிசை
வைக்க
கரும்புகட்டு
ஏற்றிசெல்லும்
ஆட்டோகளும்
கார்களும்
நாளையும்
தொடரும்
இந்தப் பரபரப்பு....
Labels:
அனுபவம்,
கவிதை,
கவிதை மாதிரி,
சமூகம்,
பொங்கல்பண்டிகை
Tuesday, December 22, 2015
Wednesday, December 16, 2015
Saturday, December 12, 2015
Thursday, August 27, 2015
அலையடிக்கும்
மொபைல் போனின்
சத்தம்
காதுக்குள் ஒலித்தப்படியே...
ஓடும் வண்டி
ஓரமாய் நிற்க
கைகளால் துழாவி
விரல்களால் தடவி
திரையை உற்றுப்பார்க்கிறேன்
அழைக்கிறேன்
கேட்கப்படும் செய்தி
வண்டி நகர
மனம் செய்தியில்
இருவேறாய்
பிரிந்து போகிறேன்
அலையடிக்கும்
மனது
அனிச்சையாய்
உடலியக்கம்...
சத்தம்
காதுக்குள் ஒலித்தப்படியே...
ஓடும் வண்டி
ஓரமாய் நிற்க
கைகளால் துழாவி
விரல்களால் தடவி
திரையை உற்றுப்பார்க்கிறேன்
அழைக்கிறேன்
கேட்கப்படும் செய்தி
வண்டி நகர
மனம் செய்தியில்
இருவேறாய்
பிரிந்து போகிறேன்
அலையடிக்கும்
மனது
அனிச்சையாய்
உடலியக்கம்...
Wednesday, October 15, 2014
Wednesday, November 06, 2013
பிடி மீறுதலில்
காட்சி பிழையாய்
நகரும் வாழ்வு
முடிந்த இடத்தில்
தொடர்கிறது-நம்பிக்கை
எதிர்பார்ப்புகள்
எத்தனை தூரம்
இழுத்து சென்றாலும்
அலுப்பதில்லை- முயற்சி
நிரந்தரமற்ற
நாளைக்குள்
இன்றைய என்னை
தொலைத்தேன்-கனவு
நகர்கிறது
வாழ்வு நகர்கிறது
பிடிக்குள்
பாசம்
பிடி மீறுதலில்
அன்பாகியது
கட்டு அறுத்தலில்
தொடங்கிய வாழ்வு
காட்சி பிழையாய்
முடிந்து போகிறது.
Friday, July 26, 2013
சுடுமணலில் நடக்கும் வாழ்வு
காரணம்
தெரியா
கோபம்
முகம்
சுளித்து
வேகமாய்
உமிழ்ந்த
வார்த்தைகள்
இளம்
வெயிலின்
காலையில்
எதிராளியின்
மனது
குமுறியது
தன்
குற்றம்
தெரியாது
தடுமாற்றம்
பதில்
பேசா
மௌனமாய்
நகருகையில்
மனது
வலித்தது
தன்பக்க
நியாயங்களை
வேக
வேகமாய்
எடுத்துரைக்க
செய்குற்றம்
புரிந்தது
இருவருக்கும்
அன்றைய பொழுது
உப்பு இல்லா
உணவாய்
சப்பென்றிருக்க
ஆர்வம் இல்லா
பேச்சுகள்
புன்னகையை மறந்த
உதடுகளாய்
சுடு மணலில்
நடக்கும் செயலாய்....
Friday, March 08, 2013
Saturday, February 23, 2013
Monday, January 28, 2013
Tuesday, January 24, 2012
Friday, December 30, 2011
Saturday, December 03, 2011
Saturday, September 10, 2011
Wednesday, August 31, 2011
சுயம்

உள்ளிழுத்து கொள்கிறேன்
என்சுயம் ஒவ்வாத
நடக்கமுடியாசெயல்களில்
மௌனமாய் விலகுகிறேன்
நீ வாழ்
நானும் வாழ்கிறேன்
எதிர்ப்பதில் வாழ்வா..!?
என் சுயம்
உடைக்கப்படுகிறது
உணர்வுகள்சிதைக்க
எனது வாழ்வில்பூக்களா…
முடியாத நேரங்கள்
நாளை கிடைத்துவிடும்
நம்பிக்கையில்
பொறுக்கிறேன்
சுயம் அழிகிறது
நான்
என்குடும்பம்
என்பிள்ளை என்று
காலங்கள்
நீண்டு கொண்டே யிருக்கிறது
சக்கையாய் வாழ்வும்
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.
Saturday, August 06, 2011
தடுக்க முடியவி்ல்லை
Monday, August 01, 2011
கண்டு தெளிய..
மேகங்கள் அற்ற
வானம்
குழம்பல்அற்று
ஓடும் சிறுஓடை
குழப்பம் தான்
இல்லை
கண்டு தெளிய…
மழிக்காத முகம்
அழக்கு ஆடை
தெருவோர பிச்சை
குழப்பம் தான்
இல்லை
கண்டு தெளிய..
தோய்த்தஆடை
விலைஉயர்ந்த
பொருட்கள்
மன கசங்கலாய்
தோய்த்த ஆடையின்
சுருக்கங்கள்
நிறையவே குழப்பம்
செய்ய..
யார் தான் யார்?
Subscribe to:
Posts (Atom)













