Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Monday, January 28, 2013

தோற்கும் கணவன்



வேண்டாத சொல்
முகம் தூக்கிவைத்து
கொள்ளும் கொல்லும்
மனைவி
சமாதானங்களில்
தோற்றுபோகும் கணவன்
முயற்சியில்
ஏமாற்றம் கோபமாய்
வந்து விழும்
வார்த்தைகள்
உற்று நோக்கிய
வார்த்தைகளில்
குற்றம் செய்தவன்
கணவன்
தன் நிம்மதி
தொலைத்துவிடும்
பயத்தில்
தொடரும் நிகழ்வாய்
சமாதானங்கள்...

Friday, November 19, 2010

கோபம்.



வராத  வேலைஆள்
வேலை  முடியலையே
ஆற்றாமை கோபம்
நேரில்
திட்ட முடியாத
முதலாளி
 நம்மை  புரியாத
வீட்டு மக்கள்
கோபம் வரும்
மனதில்
பல் கடித்து
தவிர்க்க முடியா
தருண   த்தில்
உயிரற்ற பொருளில்
கோபம் காட்டி
ஒதுங்கி செல்லுதலில்
முடிந்து விடும்
கோபம்.

Saturday, February 20, 2010

உன்கோபம் உன்பார்வை

உன்வேகம் உன்கோபம் உன்பார்வை எல்லாம் என்னுடைய கருத்துகளுடனான எதிர்போராட்டம்விளைவு உன்கோபம் என் மீது இன்றைய எதிரியாய் நான்.

நீ செய்த செயல்களின் விளைவுகள் வரும் காலங்களை எதிர்நோக்கு கட்டாயம் வரும், விளைவுகளை நீ உணரும் சமயம் உன் அருகில் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் வெளிப்படும் உண்மைகள் சொல்லும் என்னுடைய வாதத்தின் இயல்பை ஏனென்றால் என்னில் எழுந்த கருத்துகள் யாவும் உன் நலன் சார்ந்தவையே..

உன்னில் நான் வாழ்ந்த நண்பனாய் வாழும் எதிரியாய்..

நாளை நடப்பதை யாரறிவார்?

Sunday, November 29, 2009

உன்னோடு என் கோபம்





















உன்னோடு கோபம் கொண்ட நாள்முதலாய் என்னுடைய எண்ணங்களை ஆராய்கிறேன். செயல்களில் தடங்கல்கள் இல்லை. ஆனாலும் மகிழ்ச்சியாகசிரிக்க முடியாது தடுக்கும் உனது எண்ணங்கள்.

உனைவிட்டு விலகி நிற்க முற்ப்பட்டு உன்னுடைய நினைவுகளினால் உண்டான தாக்கம் களையமுடியாது தவிப்பது உண்மை.

உனது செயல்கள் உனது விருப்படியே அமைய வேண்டும் என்பதற்காக உனது வாதம் அது தவறாக இருந்தும் அதை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனதை என்னவென்று சொல்வது.

நான் நானாய் இருக்க நல்ல உறவு அவசியம். சீர் கெட்ட உறவுகளில் எங்கே அமைதி?

நீயாய் புரிந்து கொள்ளும் வரை உன்னோடு என் கோபம் நிரந்தரமானது.

LinkWithin

Related Posts with Thumbnails