Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.



சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.



நிறையவே அறிய ஆவலாய்.....

Tuesday, July 05, 2011

வாழ்க்கை ஓடி கொண்டுதான்...



மனதளவில் நொறுங்கி போயிருந்த அவன் மனதை  சரிசெய்யவது என்பது கடினமாகத்தான் இருந்தது. அவனுடைய   பார்வையில் அவன் உலகத்தில் அவன் ராஜாவாய் இருந்ததால்  முழுமையாக
தன்னுடைய வழி சரியென்று பொருந்திப்போனான்.

தன்னம்பிக்கை புத்தகங்களின் மேற்கோள்கள் நண்பர்களின் கவுன்சிலிங் என அவனுடைய  பிரச்சனைக்களுக்கு தீர்வு காண  ப்பட்டாலும் அவன் பிரச்சனை தீர்ந்துபோய் விடவில்லை.

கேட்கும் நேரங்களில் கவனமாய் கேட்பான் . செயல் படும் விதம் என்னவோ அவன் மனஇயல்பு படி தான் செய்துமுடிப்பான்.

வாழ்க்கை ஓடிகொண்டுதான் உள்ளது.

நீ இதை செய்தால் என்னுடைய சக்திக்கு தகுந்த மாதிரி நானும் அதை உனக்கு  செய்வேன்.

அவசியம் கருதி அவர்களிடம் சொல்லாமல்  ஒரு செயல் இவன் நிகழ்த்திவிட்டால் பதிலுக்கு பதில் செயல்களின் திட்டங்கள் போடப்படும். பதில் செயல்கள் செய்யும் காலங்கள் எதிர்நோக்கப்படும்.  பதிலுக்கு செய்து முடித்தால்  தான் நிம்மதி.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

எதிராளி அவர்களுக்கு செய்யவேண்டும் ஆனால் எதிராளிக்கு அவர்களைப்  பற்றி எந்தகவலையும் கிடையாது. தன்னுடைய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாய்…

எதிராளி யின்  பயன் தரும் செயல் பாதிக்கப்பட்
டால் எத்தனைவருடம் பக்கதில் இருந்தும்  தூசி  தான் அவர்கள்.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

செயல்களுக்காய் முகம்  பூத்து கிடக்கும் செயல்கள் முடிந்தவுடன் ரயில் பயணத்து நட்புகளாய் உறவுகளும் நட்புகளும் …

வாழ்க்கை ஓடி கொண்டு தான் உள்ளது.

வாழ்வின் நகருதல்கள்  இதுபோல் பல்வேறு கரைகள் தொட்டே ஓடி  கொண்டு தான் உள்ளது.


Thursday, June 16, 2011

கோபத்துக்கு கோபம்


கோபத்துக்கு கோபம் என்றால் என்னதான் செய்வது? யாரோ ஒருவர் விட்டுகொடுப்பதில் சச்சரவுகளை  கடந்துவிடும் நிலைமை.


பலம் உள்ளவர்கள் பலவீனமானவர்களின் பலவீனம் அறிந்து விட்டுகொடுத்தல் பெருதன்மை.

பலவீனமானவர்கள் பலம் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் சச்சரவுகளில் இருந்து காப்பாற்றும்.   தன்னால் ஏற்றுகொள்ளமுடியாத நேரத்தில் அந்த  செயலையோ    ல்லது அ  ந்த இடத்தையோ தவிர்த்தல் நலம். நமக்கான காலங்களின் திசைகள் திரும்பவும்  வரையில் அல்லது நாம் பலம் பெறும் வரையில் காத்திருத்தல் மிகஅவசியம். அதுவரையில் நிறைய  கசப்புகளை   நாம் சந்திக்கவேண்டிவரும்.

பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக பயன்படுத்த தொடங்கினால்   எப்பொழுதாவது கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற   கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.

எடுத்துகாட்டாக தன்பிள்ளைகளின் தவறுகளை  பொறுத்து கொண்டேவரும் பெற்றோ ர்கள் என்றைக்காவது ஒரு நாள் கோபம் கொள்வது.

அதுவும் தவிர்க்க முடியா  உறவுகளில் கோபம் கொள்ளாமல்இருக்கமுடியாது.

ஏன்? எதற்கு? என்றுஇரு வினாக்களை உள்நோக்கி திருப்பினாலே  கோபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து களைந்துவிடலாம்.

எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில் தான் கோபம் அடிக்கடி வரும் போல….


Wednesday, June 08, 2011

நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்



நடப்பதும் தானாய் நடக்கும்  என்ற தத்துவார்த்தமனது தைரியம் சொல்ல இயல்பு மனதோ  எப்படி நடக்கும் ?  என்ற கேள்வியை தூக்கி போட  எண்ணகுழப்பம் தான்.

நடக்கும் வழி இருந்தால் அல்லது அதை நடத்தும் சக்தி இருந்தால் இயல்பு மனதிற்கு பதில் சொல்லி அதன் வாயை அடைத்துவிடலாம்.

நடக்ககூடிய சாத்தியங்கள் தெரியாமல் இருக்கும் வரை மனதின் இருதலைபட்சமான எண்ணங்களின் அல்லாடல்கள் தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன.  விளைவாய் செயல்குழப்பங்கள் நம்முடைய நிகழ்வுகளில் தெரியும்.

தத்துவார்த்தமான மனதின் போக்கு அதனுடைய போக்கில்வாதங்களை தோற்றுவித்தே கொண்டிருக்க  இயல்பு மனமோ   இன்றைக்கு என்ன என்பதை எடுத்துரைக்கஎண்ணகுழப்பம் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

நிச்சயமற்ற எதிர்காலத்தினை  நினைத்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிகளைதேட  அதற்குண்டான வழிகள் இல்லையென்றால் எல்லாம் தலையெழுத்து என்ற ஒற்றைச்சொல்லோடு விரக்தியான மனப்போக்கில் இன்றையவாழ்வு.

மேற்சொன்ன அத்துனை விளை வுகளையும் மாறத்துடிக்கும் மனதுக்கு நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்  கொண்டுவரும்.

பொருள் வரும்வழி சரியில்லை யென்றால் எந்தவொ ரு தனிமனித  சமுதாயவாழ்க்கை என்பது மிகதுன்பத்திற்கு உட்பட்டதே….



Monday, June 06, 2011

பழசு


சிங்கத்தினுடைய   மாட்டு வண்டி வருகிறதென்றால் மற்ற  மாட்டுவண்டி ஓட்டிகளுக்கு பயம். ஒதுங்கி வழி கொடுத்துவிடுவார்கள். 

பூரணி காளைகள் பூட்டிய வைக்கோல் வண்டிதான் அ வனுடைய ஆயுதம் .  மற்றவர்கள் வைக்கோல் வண்டியை பள்ளம் பார்த்து இறக்கிவிடுவதில் இந்த சிங்கம் என்கிற சின்னைய்யன் மிகசாமர்த்தன்.

எதிர்ப்பவர்களை   உண்டு இல்லை என்று சொல்லக்கூடிய உடல்வாகு  வைக்கோல் வண்டியை  அவ னது காளையை ஓட்டும் அழகே..அய்யோ..இன்னும் கண்ணில் நிற்கிறது என்று அவனுடைய சமகாலத்து பெரியவர்பெருமூச்செறிந்தார்.

இன்றைக்கெல்லாம் அதுமாதிரியான மனுசங்க கெடையாது. வேளைக்கு பெரிய பித்தள  சட்டியில் ஒருபடி அரிசி  வடிச்சசாதம் சாப்பிடுவார்கள்.  கறி எடுத்த ஒரு சப்பை தான்  எவ்வளோ மீனு…எப்பாடி….அவங்க பாத்த வேலையும் அந்தமாதிரி…

கடைசில பயலுக்கு குஷ்டரோகம் வந்திருச்சி…எத்தன  பேரு வயித்தெரிச்சலோ…  ஆமா  இவன் போற வழி ல  எத்தன வைக்கோல் வண்டி போனாலும்  அத்தனையும் குடசாச்சு விட்டுறுவான்.
பொண்டாட்டி வேறு ஆம்படையான் பாத்தாள்…இவனுக்கு தெரிஞ்சு போச்சு வெண்ணாத்துல கொண்டுவந்து ஆள  காலிப்பண்ணி தூக்கிபோட்டுட்டு போயிட்டான்.

நாடு சுதந்திதரத்துக்கு முன்  பிறந்த தற்பொழுது வாழும் பெரியவர் ஒருவரின் கதையாடல் தான் மேற்சொன்னது.

பொம்பள பொறுக்கிய இருந்திருப்பாரு அதனால  குஷ்டரோகம் வந்திருக்கும் என்று கேட்க…

என்னன்னு தெரியல….
கும்பகோணத்துல அப்ப நிறைய தேவடியா வீடுகள் உண்டு பிரியப்பட்டவங்க தெரியாம  போயிட்டு வந்துருவானுங்க…
இன்னொருத்தன் பொண்டாட்டிய  பாக்கறதெல்லாம் அப்பரொம்பகம்மி…சமுதாயத்துல அசிங்கம் சொல்லிட்டு  அத செய்யவே மாட்டானுங்க…

என் கம்மாணாட்டி வீட்டுல இருக்கற பொஞ்சாதி பாக்கமுல்லயாம் …இவருக்கு இன்னொரு வீடாம்.. என்று திட்டுவார்களாம்.

அப்போ எல்லா பொருளும் வெல ரொம்பவும் கம்மி..சுதந்திரம் அடைஞ்சுது ரெண்ட அனா வித்த ஆட்டுகறி இன்னிக்கு கிலோ இருநூற்றி அம்பது ம்ம்ம்….என்ன செய்ய….



Tuesday, April 12, 2011

கிராமங்களில் மனிதர்கள்.


பொழுது சாயும் முன்னே வீட்டை  அடைந்துவிட வேண்டும் என்ற வேகம் தெரிந்தது அவனுடைய வண்டி ஓட்டுதலில்சமமான பாதை  யிலும் குண்டு குழியுமான  பாதையில் வண்டி பயணித்தது.

பெண்ணுடன் பயண  ம் என்பதால் சீரான வேகத்தில் தான் வண்டி சென்றது.  காலை யிலிருந்து  கல்யாண ம் ,  கோவில் என்று செல்ல இருட்டு முன்னே ஊ ர் திரும்பிவிடவேண்டும் என்ற அவசரம்.


கிராமங்களின் இடையே செல்லும் பாதை   அ வசர தேவை என்றால் நான்கு கிலோ மீட்டருக்கு  அ ப்பால் ஏதாவது கிடைக்கலாம்.
பெண்ணுடன் பேசியப்படியே  வண்டி ஊ ர் நோக்கி பயணித்தது.

புதிததாக  தார் சாலைப் போடுவதற்காக  கருங்கல் சாலை அமைந்திருந்த சாலை யில் வண்டி அ லை ந்தது.

என்னடா ..இது அலைகிறது என்று வண்டியை  நிப்பாட்டினான். வண்டி பின்சக்கரம் காற்று இறங்கி  தாரையோ டு ஒட்டியிருக்க …இங்கேயும் அ ல்லாது அங்கேயும் அ ல்லாது நடுவில் மாட்டிக்கொ ள்ள….

வ ண்டியை தள்ளினால் குத்தியிருக்கும் ஆ னியினால் டியூப் பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும்.  அப்படியே வண்டியை   நிப்பாட்டினான்.

அ வனும் பெ ண்ணும் இறங்கி நின்றார்கள். பெண்ணை    உற்றுபார்த்தார்கள் அவனை   உற்றுபார்த்தார்கள் தன்வழியே சென்றார்கள். 

மோ ட்டார் சைக்கிளில் வந்த நடுவய துகாரர்கள் தன்னுடைய வண்டியை  நிப்பாட்டி  ஏன்?  என்ன விசாரிக்க…

அவனுக்கு நிம்மதி வந்தது. வண்டி பஞ்சர்என்று சொல்ல..

இருங்க தம்பி ஒன்னும் கவல படாதீங்க இதோ  நான் பையன வர சொல்றேன் என்று அ ங்கிருந்தப்படியே  கைப்பேசியில் தொடர்பு கொ ண்டு  மெக்கானிக் பையனை  அழைத்தார்.

எப்பா…அவங்க லேடீஸ்  கூட நிக்கிறாங்க சீக்கிரம் வாப்பா என்று சொல்லி…

ஒட்டிட்டு பாத்து போங்கப்பா  என்று தன் வழியே சென்றார்.

சிறு நன்றியை  கூட  எதிர்பார்க்கவில்லை .

அவர் சொ ல்லிய பையன் விரைவாய் தன் செயல் முடித்துகொ டுக்க…. இவன் நிம்மதியடைந்தான்.

பத்துக்கு  ஆ றுபேர் பார்த்தப்படியே  செல்ல இருவர் கேட்டால் செய்யலாம் என்ற  ரீதியில் பார்க்க இருவர் மட்டுமே தனாய் உதவ முன்வந்தார்கள்.

பொழுது சாயும் முன்னே  அவன் ஊ ர்போய் சேர்ந்திருப்பான்.





Sunday, March 13, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையானது வளரவேண்டிய வகையில் வளரமுடிவதில்லை . ஏனென்றால் பெரியவர்கள் அவனை   ஒடு்க்குகின்றனர். ” பெரியவர்கள்” என்பது உருவமற்ற பொ துப் பண்புப்பெயர். குழந்தையானது சமுதாயத்தில் ஓர் தனியன் . பெரியவ ர்கள் குழந்தையை    மாற்றுகின்றனர் என்னும்போது பெரியவர்கள்  என்பது குழந்தையைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களையே குறிக்கும் .

முதல் பெரியவர் தாய். பிறகு தந்தை. பிறகு ஆ சிரியர் ஆ வர். குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து முன்னேறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொ றுப்பைச் சமூகம் பெரியவர்களுக்குக் கொ டுத்திருக்கிறது.

பெரியவர்கள் என்ன  செய்கினறார்கள்?  தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து நல்வழியில் முன்னேற்ற எவ்வளவோ   முயற்சி செய்கின்றனர். இப்படி முயற்சி செய்யும்போது பெரியசிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்? தாங்கள் தமக்குள்ளே அடைத்து வைத்திருக்கின்ற பல குற்றங்களை த் தாமே அறியாததனால் தான். 


குழந்தையிடம் தற்காலம்   நாம் நடந்துகொ ள்ளும் முறையை விட்டுவிட்டு  வேறுவிதமாக நடந்துகொ ள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல்  ஆகும்.

குழந்தையிடம் கூட நமக்குத் தெரியாதது எவ்வளவோ   இருக்கிறது. அதை நாம் அறியவேண்டும்.  குழந்தயை  உள்ளது உள்ள படி காணமுடியாத ஒருகுறை தன்னுள் இதுவரை இருந்து வருவதை  உணரவேண்டும்.

குழந்தையைப் பொறுத்தமட்டில் பெரியவனாவன் தன்னை  வைத்தே பிறரை மதிப்பவன் ஆ கிவிடுகிறான். குழந்தை  உள்ளத்தைப்  பாதிக்கும்  ஒவ்வொ  ன்றையும் தன்னை  அது  எவ்வாறு பாதிக்கிறதென்றே கவனித்து வருகிறான்.  இந்தக் கொ ள்கையால் தான் குழந்தையை ஓர் வெற்றுப்பொருள் என்று கருதி தான் நல்லதுஎன்று கருதுவதை எல்லாம் குழந்தையிடம் நிறைத்து வைக்கமுயல்கிறான்.

பெரியவர்கள் தான்  நன்மை  தீமைக்கு உரைகல். பெரியவர் குற்றமே   செய்யமுடியாதவர். குழந்தை அவரைப்பார்த்துத் தான் தன்னை நல்லவனாக்கிக்கொ ள்ளவேண்டும் என்ற  இத்தகைய  மனப்பான்மையைக் கொ ள்ளும்போது  நம்மை அறியாமலே நாம் குழந்தையின் தன்மையை   அழித்துவிடுகிறோ ம்.  

Wednesday, March 09, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையின் உள்ளமானது தன்பிறப்பிலிருந்து சூழ்நிலை யின் பல முரண்பாடுகளுக்கு இடையில் வள ர்ந்து வருகிறது.


குழந்தைகளின் சுயேச்சைத் தொழில்களின் மீது பெரியவர்கள் தம்அதிகாரத்தைச் செலுத்திவருகின்றனர். இந்த அடக்குமுறைகளின்  காரணமாக குழந்தையின் சுயேச்சை நடத்தை   தடைபட்டு குழந்தை   உள்ளத்தில் மன நோ ய்க்குரிய வித்துகள் தோ ன்றுகின்றன . 

குழந்தையை ச் சுற்றிலும் உள்ள பெரியவர்களில் குழந்தையினிடம் அதிக ஆதிக்கம் செலுத்த உரிமையுடையவர் தாயார்தான்.

குழந்தையின்  ஞாபகங்கள் . அந்த  ஞாபகங்களில் அடங்கியிருப்பவை  என்ன? மனிதனுக்கும் , தற்காலச்சமூகச் சூழ்நிலை க்கும் ஏற்படும் முரண்களா? இல்லை . குழந்தைக்கும் , தாயாருக்கும் - பொதுவாகக் குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்படும் முரண்கள் என்றே கூறவேண்டும். இந்த முரண்கள் தீரா நோயை  உண்டாக்கலாம். உடல் நோ யாகட்டும்,  மன நோயாகட்டும், மழலை  பிராயத்தில்நடந்த விஷ  யங்களின் முக்கியத்தைப் பொறுத்திருக்கிறது.

குழந்தையின் உள்ளத்தைப் பகுத்தறியக் கூடாது. அதை நாம் கவனிக்க வேண்டும். கூர்ந்து நோக்கவேண்டும். உள த்தன்மை  நோக்கோடு கவனித்து , எவ்வாறு குழந்தையானவன் பெரியவர்களிடத்திலும் சூழ்நிலை யிடத்திலும்  நடந்துகொள்கிறான் ,  என்னென்ன இன்பதுன்பங்களை  அனுபவிக்கிறான்  என்றெல்லாம்  யூகிக்க வேண்டும்.


பருவமடைந்த  மக்கள் வாழ்க்கையின் போக்கு குழந்தையின் உளவாழ்வையே  ஒட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினை யில் பிறப்பிலிருந்து இறப்புவரையுள்ள சகல வாழ்க்கை அம்சங்களும் அடங்கும். 

பெரியவ ர்கள் தங்கள் அதிகார தோரணையைக் கொ ண்டுகுழந்தைக்குப் பற்பல இடையூறுகள் விளை விக்கின்றார்கள். இதைக் குழந்தை தன் புலன்களால் அறிந்துகொள்கிறான்.

பெரியவர்களின் செயலால் குழந்தைகளின் கட்டமைப்பு சின்னாபின்னப்பட்டு உருக்குலை கிறது. இதன் காரணமாக குழந்தையின் நடுமனதில் உயர்ந்தவனாக்குவதற்கு பதிலாக தாழ்ந்தவனாக்குவதற்குரிய  இடையூறுகள் தோன்றுகின்றன.


(தொடரும்)


Friday, February 18, 2011

வானம் பார்த்தவன்.


ஒரு மாதம் முன்பு வரை  கண்கள் பார்க்கும் எல்லை வரை பசுமை போ ர்த்தியிருந்த வயல்கள் நிறம் மாற த்தொடங்கி அ டர்ந்த பச்சையில் அங்கு அ ங்கு பொ ன்நிறம் கொ டுக்க காலை  மாலை  சூரியகதிர்களின் எதிரொலிப்பில் மெல்லிய காற்று நெற்பயிர்களின் அ சைவு  தினமும் ரசிக்க தக்கதாய் இ.ருந்தது.


பொ ன்நிறமே  கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை  வியாபித்து கொள்ள ஏதோ   ஒரு அ றிவிப்பை  விவவசாயிக்கு கொ டுத்தப்படி இருந்தது.

விவசாயி வானம்  பார்த்தான் நீலவானம் தென்படுகையில் நிம்மதியும் கருமேகங்கள் காண்கையில் கவலை யும் சூழ்ந்து கொ ண்டது.

சீக்கரமாய் உன்னை   நீ பொன்நிறமாய் உருமாற்றம் செய்துகொள்ளகூடாதோ ? என்று மனதின் வழி நெற்பயிர்களுடன் பேசினான்.

இவ்வள  வு நாள் பெய்தாய் இப்பொழுது ஏன் பெய்கிறாய்? என்று வானம் பார்த்து கேட்டான்.

நெற்பயிரும் சும்மாயிருந்தது.

வானமும் சும்மாயிருந்தது.

” கைக்கு எட்டியது , வாய்க்கு எட்டாதோ ” என்று மனதுகுள் பேசினான்.


நெற்கதிர்கள் முற்றி வெயிலில் காய்ந்தது காலை  மௌ   னமும்  மாலை யில் சலசலத்து  காற்றோ டு பேசியதுபார்க்க மகிழ்வெய்தினான் விவசாயி.

நிமிடங்களில் மாறும் நிலைமையாய் மறுநாள் பெய்த மழை நெடுசாண்  கிடையாய் நனை ந்த நெற்கதிர்கள் காற்று இல்லை சத்தம்   இல்லை    நீண்டிருந்த அமைதியில்   இடையே பறவை களின் சத்தம்.

விவசாயியை  வெறுமை  சூழ்திருந்தது. 

Thursday, January 20, 2011

நடுத்தர வர்க்கம் திருநங்கைகள் நிலை மை


மண்டையை  அ ரித்தது பண   ச்சிந்தனை . நடுத்தர வர்க்கத்தின் விதியை   நொ ந்து கொண்டே  நடமாடும் வாழ்க்கை.

முன்னேற முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல்  தொ ங்கியப்படியே   அ வ சியம் வாழ வேண்டிய  வாழ்க்கை.
சமூகத்தில்  அ ருகில் உள்ளவர் அ க்கம் பக்கத்தில் உள்ளவர்களின் சொ ல்லுக்கு மதிப்பு கொ டுப்பவர்கள் நடுத்தரவ ர்க்கம்.
இன்றைய  எதார்த்தம்  கண்முன்னே  பண  த்தால் மட்டுமே  ஆ கவேண்டிய   காரியங்கள் வரிசை  கட்டி நிற்க …. பண  மே பிரதானம்…பண மே வாழ்வு  என்று   கூக்குரலிட்டே  ஓடி கொ ண்டிருக்கும் . பிறந்து 16  வருடம் கழித்து படிக்கப் போகும் பையனுக்காக  பிறந்து 25  வருடம் கழித்து வேறு வீடு செல்லும் பிள்ளை க்காக  தன் உடல் நலம் நினையாது பசி இருந்தும் பசி மறந்து காசு …காசு.. என்ற மந்திரமாய் தான் பட்டதை  தன் பிள்ளை கள் படகூடாது என்ற வை ராக்கியமாய் ஓடும்.
இருப்பவன்  இ ல்லாதவன் ஏதோ  ஒரு துருவம் சேர்ந்து விட்டால் பிரச்சனை  இல்லா வாழ்வு. இருப்பவன் என்று காட்டிக் கொ ள்ள முனைவ தும் நீ இ ல்லாதவன் என்று இருப்பவர்களால் உண்டாக்கப்படும் அ வமரியாதைகளும் நடுத்தர வர்க்கம் என்றுமே திருநங்கைகள் நிலை மை தான்.

என்மனவானில் ரதிஅவர்களின்  “பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்”  பதிவில் உண்டான   சில  சிந்தனைக ள்.


Wednesday, January 12, 2011

ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்



முகம் கறுத்து போ யிருந்தது. கண்களின் வெண்மை  முகத்தின் கருமையை கூட்டியது.

தூர வருகையில் உருவத்தை அனுமானிக்க முடியாது மன தில் பதியவைத்த  உருவம்   சிதைந்திருக்க அ ருகே வர  அ வனா …இவன்?
என்று  தோ ன்றிய  வினா வினை   புறந்தள்ள  முடிய வில்லை.

அ ப்பா அரசாங்க உத்யோக ம் நல்ல வள ர்ப்பு நல்லகுடும்ப சூழல்.
பையனை   பொறியிற் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க படித்தான்.

பாக்கெட் மணியும் அப்படி இப்படி  வீட்டில் வாங்கிய பணமும் குடியும் புகை யும் ஆயின . பால ப்பருவத்தை கடக்கும் குழந்தையைப் போ ல்  தத்தக்கா…பித்தக்கா… என்று நடந்து  படிப்பு முடித்தான்.

காடாறு மாதம் நாடாறு  மாதமாய்  தான் அவன் வாழ்க்கை . வெளியூர் ஆ றுமாதம் என்றால் உள்ளுரில் ஆ றுமாதம். செலவழிக்க குறை வில்லா த  குடும்பம் ஆகையால் செலவழிக்க கொ டுத்தார்கள்.

கடைசியாய் சொ ந்தத்தின்  ஆ தரவில்  மாதம்  ரூ 32000  சம்பளத்தில் வேலை யில் சேர   தினமும் ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்  கொ சுறு அ யிட்டம் சேர்த்து மாதம் இதற்கு மட்டுமே  ரூ 14000 செலவழித்தான்.

திருமண  ம் ஆ னது சென்னை யில் தனிக்குடித்தன காரனாய் மாற  வரதட்சனையாய் கார் . அதற்குள் தகுதி   தானா ய் வந்து ஒட்டி கொ ள்ள    வீட்டு நிர்வாகம் இவன் செலவு  தட்டு தடுமாறி  ஓடியது அ ப்பாவின் உதவியால்..

வாழ்க்கை  தான் எப்படி வேண்டுமானாலும் மாறுமே அதுபோல் எதிர்பாராது அப்பா  நோ ய்பட  தகுதியாய் வாழ்ந்த குடும்பம் தகுதியாய் வாழவே  கஷ்டப்பட்டது.

இந்த சம்பள ம் போதாது  இருந்த வேலை யை  விட்டு வேறுவேலை  தேட தேடிய  இடமெல்லாம் முன்பு வாங்கிய சம்பளத்தை  விட குறை வாய் சொல்ல  சுவரில் அடித்த பந்தாய் பழைய முகவரியின் கதவை  தட்டினான் .  இவன் விட்ட பணியை  வேறு ஆள் செவ்வனே  செய்ய    வேலை  தேடுகிறான்.

அடிப்படை   தேவைகள்   மனை வியின் நகையால் ஈடுசெய்யப்பட  வேலை தேடுகிறான் .  ஆ னால் வேலை ....

Sunday, December 26, 2010

தெருவோர மந்திரம்

எல்லோ  ருடைய  கண்களும் தரை நோக்கியே  குவிந்திருந்தன. உடுக்கை    சத்தம் வந்து கொண்டிருக்க தெரு கூத்துதான் நடத்தி கொண் டிருக்கி றார் என்று அ வ்விடம் செல்ல    பாம்பாட்டி   ஒருவன் பாம்புகளை   வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான்.

பேச்சின்      வீச்சில் ஈர்க்கப்பட்டு    கூட்டம் கூட  ஆ ரம்பிக்க பாம்புகளை   பெட்டி கட்டி  விட்டு  தாயத்து மத்திரம் என்று பெட்டிகடைப்பரப்ப அங்கிருந்து  கம்பி   நீட்டினோ  ம் நானும் என் நண்பரும் அப்போது க்ளிக்கியது.

கடைதிறக்கப்படுகிறது

பாம்பு வித்தை

தப்பிக்க நினைக்கும் பாம்பு

எங்க போற....

இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான்

கோபத்தில் சீறல்


Sunday, December 05, 2010

காலத்தின் சக்கைகள்



காலசக்கரத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது தன்னை விடுவித்து கொண்டவர்கள். செயல்களின் போக்கு தெரியும். காலத்தின் சக்கைகள் அவர்கள். பின்வருபவர்களின் வேகஓட்டத்தை நிதானப்படுத்தும் சக்கைகள் அவர்கள்.

தான் விதைத்ததை அறுவடை செய்து பலன் அனுபவிப்பவர்கள்.
நல்லதோ கெட்டதோ  அவர்களின்மனகுமுறல்கள் அவர்கடகுள்ளே உணர்ந்து அழிந்துபோனவர்களும் உண்டு
மனகுமுறல்களை   வெளியிட்டு ஆதரவு தேடியவர்களும் உண்டு.

பின்வருபவர்கள் பின்பற்ற நடந்தவர்களும் உண்டு .பின்வருபவர்கள் முகம் சுழிக்க செயல்பட்டவர்களும் உண்டு.

சங்கீதா     சீனிவாசன் கவிதை   ஒன்று

        முதியோர் இல்லத்தில்
        ஒரு தாயின் கண்ணீர்
       
        மகனே
        நீ இருக்க ஒரு
        கருவறை இருந்தது
        என்வயிற்றில்!
        
        ஆனால்
        நானிருக்க ஒரு
        இருட்டறை  கூடவா
        இல்லை
        உனது  வீட்டில்!           

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

Friday, November 26, 2010

தேடுதலில் தொலையும் வாழ்க்கை

தேடுதலில்
தொலைகிறது
வாழ்க்கை
காலையில்
தொடங்கிய
மழை  விடாது
பெய்தது
பசிக்க தவறாத
உடல்
உணர்த்திய அறிவு
பையில் காசு
உணவு தேடுகையில்
எரிய
மறுந்துப்போன
அடுப்புகள்
கடையில் தூங்கிய
பூனை
மழை பெய்கிறது
விட்டு விட்டு
வந்த மின்சாரம்
வராது நிற்க
இருளில் ழுழ்கிய
வீடு
தீக்குச்சிகள்
எரிந்த ஒலியில்
சிமில் விளக்கின்
தேடல்
வெளிச்சத்தில்
தூங்கிய குழந்தை
இருளில் முழித்து
வீறிட
பசியா…
பயமா…
உண   ர்வு தேடலில்
தாய்பரிதவிக்க
தந்தை
சிமில் விளக்கின்
தேடுதலில்…

Tuesday, November 23, 2010

குடி மறப்போம் குடி காப்போம்.

எங்கள் ஊருக்கு குடிவந்து பத்துவருடங்கள் இருக்கும். வெள்ளை வெளேரென்ற  தலைமுடியுடன் நல்ல திடகாத்திரமான உடல்வாகு.  எங்கள் ஊரின் உமர் முக்தார் என்று செல்லமாககூப்பிடுவார்கள். கிட்ட தட்ட எண்பதை நெருங்கி கொண்டிருந்தார்.  சோகங்களை  வெளியில் காட்டமாட்டார். எல்லோரிடமும் ஜாலியாக வம்பளத்தப்படி இருப்பார். பழையப் பாடல்கள் அத்துப்படி குரல் இனிமை.



இரு பையன்கள் மூத்தது அரசாங்க கூலி  இளையது சுமைதூக்கும் கூலி.

இளையது அன்றைய கூலியில் குடிப்பது போக  மீதம் தான் வீட்டிற்க்கு.  இளையதுக்கு இருபையன்கள்  கஷ்டம் தான்.

வேலை பார்த்து குடித்தது போக மூன்று வேலையும் குடிப்பதே வேலை ஆகி விட அப்பா (உமர்முக்தார்)கொடுத்த
நிலங்களும் அடமானம் ஆகிவிட்டது.

குடிப்பது குறைந்த பாடில்லை. 

என்ன கஷ்டமோ   தானாகவே பேசி  ரொம்பவும் குழம்பி கடைசியில் வயலுக்கு அடிக்கும்   பூச்சி மருந்தை வாங்கி குடித்து  நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர்துறந்தார்.

இனி அவரை நம்பியவர்களின் நிலைமை. எதிர்கால சந்ததியினர் நிலைமை ?

எனக்கு அவன் கொள்ளி போடுவான்னு நினைச்சேன் அவனுக்கு கொள்ளி போட்டாச்சு...
என்று தெரிந்தவர்களிடம் அவர்கள் கேட்கிறார்களோ    இல்லையோ    இவராக போய் சொல்லி ஆறுதல் தேடுவது தெரிந்தது.

Friday, November 12, 2010

காசு சிரித்தது.

பூப்பெய்தினாள் அந்தப்பெண். அவளுடைய அப்பா வெளிநாட்டில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டோடு  மாப்பிள்ளை அவர்.

ஆரம்பகாலங்களில்   காசுக்காய்  பட்ட கஷ்டம் அதிகம். அந்த பெண்  குடும்பம். சகோதரர்களால் நல்லமுன்னேற்றம் ஏற்பட காசு பத்திய கவலை  இல்லாமல் போனது.

காசு தான் உலகம் என்று ஆனது அந்த குடும்பத்தினுடைய பெண்களுக்கு….

சகோதரனின்  நிதிபலத்தால்  புகுந்தகம் செல்லாமல்  பிறந்த ஊரிலியே  வீடு கட்டி கொண்டு தங்கிவிட்டார்கள்.
கணவன்மார்களும்பொண்டாட்டி  சொல் தட்டாது பிறந்தகத்தை விட்டு புகுந்தகம் வந்தார்கள்.

பொண்டாட்டிகளிடம் மதிப்பு கம்மி தான். என்ன செய்வது ? பிரச்சனை இல்லா குடும்ப நிர்வாகத்திற்கு ஆம்பிள்ளை சகித்து போகவேண்டும் என்கிற பாணி அவர்கள்.  கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.

காசு கண்ணை மறைக்க தன் பெண்ணின் சடங்கு போது  கணவன் வீட்டிற்கோ  கணவருடைய உறவினர் வீட்டுக்கோ சொல்லாமல் சடங்கு செய்தார்கள்.

கணவன் அப்பொழுது வெளிநாட்டில் இருந்தார். கோபம் அடைந்த கணவன் புகுந்த வீட்டிற்கு வராமல் பிறந்த   வீட்டிற்கு சென்று பெட்டியை இறக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

காசு போகுதே காசு.

பொண்டாட்டி கூப்பிட்டாள்  பதில் இல்லை.  சகோதரர்கள் முயற்சிக்க பலன் இல்லை.

அந்த ஊர் பெரியமனிதர்களை வைத்து பேச  அவர்களிடமும் பிடிவாதமாய் என் பெண்ணுடைய  தேவைக்கு என் வீட்டாரை  அழைக்கவில்லை யென்றால் நான் அவளுக்கு கணவனாக இருந்து என்ன பயன் ? என்று வாதம் செய்து  விவாகரத்து செய்யவும் தயார் என்று பிடிவாதம் பிடிக்க    காசு சிரித்தது.

பஞ்சாயத்தார்கள்  ஒருவழியாக பேசி அவரை சமாதானப்படுத்தி  புகுந்தவீட்டிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

அவர் கொண்டு வந்த  பெட்டி காசு சிரித்தது.

இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்த வீடு சென்று பெட்டிகளை எடுந்துவந்து புகுந்த  வீட்டில் வைத்தார்.
அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை   முகம் சரியில்லை.

பெட்டிகளை  இறக்கி வைத்து டீ குடித்தார். ஏதோ பலகாரம் சாப்பிட்டார்.

அய்யோ   வலிக்குதே…. சாய்ந்தார்... சாய்ந்தே   விட்டார்.

காசு சிரித்தது.

Thursday, May 13, 2010

முதிர்ந்த இலை

முதிர்ந்த இலைகள் கொட்டி கிடந்தன. அது உட்கார்ந்து வேலை செய்வதற்கான இடத்தை சுத்தம் செய்தது. 

எடத்த கூட்டி போட மாட்டேங்குறாங்க   நாம தான் கூட்டிகனும்?  என்று தனாய் பேசியப்படி கூட்டியது.

வாழ்க்கையில் பேரன் பேத்தி எடுத்து நல்லது கெட்டது வாழ்ந்து அனுபவித்துஇப்பவும் தன் கைஉழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தது.

அந்த மரநிழலில் உட்கார்ந்து கீற்று பின்னுவதுதான் அது வேலை. கீற்று ஒன்றுக்கு கூலி ரூபாய் ஒன்று. நாளைக்கு அறுபது எழுபது கீற்றுகள் பின்னும்.

குத்துகாலிட்டு உட்கார்ந்து பின்ன ஆரம்பிக்கும் யாருடனும்  பேசாது யாரும் பேச இருக்கமாட்டர்கள் அந்தபகல் பொழுதில் அதுக்கு உதவி செய்யும் ஆளும் வேறு வேலை பார்த்து கொண்டிருந்தால் இது தனி தான். 

மனதில் தோன்றியவை சேதியாக வரும் பாட்டாக வரும்சிரிக்கும் அழவும் செய்யும். வேலையுடன் கூடிய தனிமைபொழுதுகள் இப்படிதான் கழியும்.

வேலை இல்லா நாட்களில் சுள்ளி பொறுக்கும் அதுவும் இல்லா நாட்களில் அறுப்புநாட்களில் களத்தில் விவசாயிகள் விட்டு சென்ற ஒன்று இரண்டுநெல்மணிகளை கல் மண் பிரித்து ஒன்று சேர்த்து அன்றைய செலவுக்கு தயார்செய்யும்.

யாரும் கிட்டே நெருங்கி பேசினால் வாய் நிறைய சிரிப்புதான்   பாட்டாக தான் பதில் வரும்.   பேசியவர்கள் சிரித்து மகிழ்வார்கள் பேசி முடிக்கும்வரை சிரித்தப்படியே இருக்குமாறு பேசும்.

வாழ்க்கை மரத்தில் பழுப்பாகி நிற்கும்  அந்த இலை   உதிர காத்துஇருக்கிறது. காற்றின் போக்கில் எந்த திசையிலும் அசைந்தப்படியே அதன் போக்கு.

Monday, April 19, 2010

என்னுடைய பெண் அல்ல அவள்

அன்று காலை வழக்கம் போலவே கல்லுாரி கிளம்பி சென்றாள் அந்த பெண். தன் ஊருக்கு அருகில உள்ள கல்லூரியில் எம். எஸ்சி  இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.

கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன.  அவளது அப்பா அரசாங்க  சம்பளம். தன்னுடைய பெண்களை மேற்படிப்பு வரை படிக்கவைத்து மூத்த பெண்ணுக்குசமீபத்தில் தான் திருமணம் செய்து வைத்தார்.  தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்.

மௌனத்தின்  மதிப்பை யார் அறிதலும் கொஞ்சம் கடினம் . அந்த பெண் கல்லூரி போவதும் தெரியாது வருவதும் தெரியாது. மௌனமாய் அமைதியாய் அவளுடைய நடவடிக்கைகள்.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  வந்துவிடுவாள் அன்று வர தாமதமானது .

வீட்டில் அவளுடன் செல்பவர்களை விசாரிக்க ஆரம்பிக்க பெண் ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.  தகுதியான பையனா  என்றெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு யாரோ  டிரைவர் என்றார்கள்.

சொந்தமும் சுற்றமும் கூடியது.   விசாரித்த வகையில் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர்களின் உறவு கார பையனாம் அவன்   என்று சொல்லப்பட காவல் நிலையத்தில்  புகார் செய்தார்கள்.

இரண்டு நாளில் பிடித்து கொண்டுவரப்பட்டார்கள். இனி என்னபயன்?  எனக்கு பெண் அல்ல  என்று   எழுதி கொடுக்கமாறு காவல் நிலையத்தில் இவர்பணிய பெண்ணை பெற்றவருக்கு  பெண்ணால்  எழுதி கொடுக்கப்பட்டது.

பெண் வீட்டார் இரண்டு நாட்களாய் பட்டபாடு அவர்களுக்கு தெரிந்த ஒன்று. பலவிதமான பேச்சு வெளியில்  பலவிதமான அனுமானங்கள் எழும்பியது.

பெண்ணை பெற்றவர்களுக்கு ஏன் இந்த மனகஷ்டம். தன்னுடைய மூத்த பெண்ணை நல்லஇடத்தில் திருமணம் செய்வித்தார்கள்.  வசதிக்கு குறைவு கிடையாது.  அப்புறம் ஏன் ?

அந்த பெண்  ஏன் இவ்வாறு? கேள்விகள்  எழும்ப விடைகள் எங்கே? அவர் அவர்களின் மனதிற்கு தெரியும். வாழ்க்கை வட்டம் தான் இந்த பெண்ணிற்கு  அமைந்த வாழ்க்கை என்ன சொல்லி தரப்போகிறதோ ?

வாடிய முகமாய்  தாடியுடன் யாருடனும் நின்று பேசவே அச்சப்பட்டவராய் பெண்ணுடைய அப்பா.

Friday, March 26, 2010

என்னது நீங்களுமா?

ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..

திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.

என்னது நீங்களுமா?

திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.

ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க

என்று கேட்க ...

அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று

நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்

ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்

ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....

இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..

சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.

தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.

LinkWithin

Related Posts with Thumbnails