Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Monday, January 07, 2013

தமிழக அரசும் உள்ளாட்சி துறையும்

சமீபத்தில் சிகிச்சை காரணமாக ஆத்தூர் செல்ல நேர்ந்தது பேருந்து பயணத்தில் சில பஸ் நிறுத்தங்கள் இறங்கி செல்லவேண்டிய கட்டாயம்.

நின்று சென்ற பேருந்து நிறுத்தங்களில் பெரம்பலூர்  பேருந்து நிலையம் நன்றாக இருந்தது.

தஞ்சை திருச்சி பேருந்து நிலையங்கள் அனைத்து முகம் சுளிக்கவைக்கும் கழிப்பிட வசதிகள்.

ஏன் அங்கு செல்கிறோம் என்ற நிலைமைதான். ஆனாலும் என்ன செய்ய...

பயணங்கள் அவசியம்  இத்தகைய சூழல்களை தாண்டி என்பது மிகவும் வருந்தவேண்டிய விசயமாக சுகாதாரம் உள்ளது.

செய்யவேண்டியத செய்து சொல்லி கொடுக்குறப்படி சொல்லி கொடுத்த யார் தான் செய்ய மறுப்பாங்க.....

தமிழக தலைமை நிறையதான் நெனைக்க செயல்படும் அமைச்சர்களின் செயல்பாட்டை பொருத்தவிசயமாகதான் உள்ளது.

மக்கள்  இரும்பு பட்டை போல்தான் அடிக்கிறப்படி அடிச்சா தான் சுகாதார விசயங்களில் ஓர் ஒழுங்கை கொண்டுவர முடியும்.

தமிழக அரசும்  உள்ளாட்சி துறையும் கவனிக்குமா...

Friday, May 11, 2012

பாவம் இந்து மதம்…!!!??



இந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.  பாவம் இந்து மதம்…!!!??

கதவை திறந்து வைத்ததில் மதுரை  ஆதீனமாக மாறிவிட்டார்.

கௌ   ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர் நடத்திகொண்டுள்ளார்கள்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால்  இப்பிரச்சனை பேசப்படுவது  எங்கே போய் சொல்ல....



Wednesday, March 21, 2012

ஜனத் தலைவர் யார்?


இது பாரதி சொன்னது... யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ  ,

யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே  என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ

யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ

யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ  ..

அவன் ஒருவனே ஜனத் தலைவன்.



இன்று….

தன் மானத்திற்காக தொண்டனி்ன் உயிரை ப்பறிப்பவன்.

தன் குடும்ப வாரிசுகாக  தன் கட்சியினரையே  கட்சியை விட்டு நீக்குப்பவன்.

சுவிஸ் வங்கியோ இன்னும் வேறு ஏதேனும் வங்கியிலோ கணக்கு வைத்திருப்பவன்.

நிலம் பறி்ப்பவன்

ஆட்கடத்தல் அடித்தடி கொலை  செய்பவன்.

இவர்களே இன்று ஜனத்தலைவர்கள்.

இது இந்தியா…..

Wednesday, June 08, 2011

நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்



நடப்பதும் தானாய் நடக்கும்  என்ற தத்துவார்த்தமனது தைரியம் சொல்ல இயல்பு மனதோ  எப்படி நடக்கும் ?  என்ற கேள்வியை தூக்கி போட  எண்ணகுழப்பம் தான்.

நடக்கும் வழி இருந்தால் அல்லது அதை நடத்தும் சக்தி இருந்தால் இயல்பு மனதிற்கு பதில் சொல்லி அதன் வாயை அடைத்துவிடலாம்.

நடக்ககூடிய சாத்தியங்கள் தெரியாமல் இருக்கும் வரை மனதின் இருதலைபட்சமான எண்ணங்களின் அல்லாடல்கள் தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன.  விளைவாய் செயல்குழப்பங்கள் நம்முடைய நிகழ்வுகளில் தெரியும்.

தத்துவார்த்தமான மனதின் போக்கு அதனுடைய போக்கில்வாதங்களை தோற்றுவித்தே கொண்டிருக்க  இயல்பு மனமோ   இன்றைக்கு என்ன என்பதை எடுத்துரைக்கஎண்ணகுழப்பம் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

நிச்சயமற்ற எதிர்காலத்தினை  நினைத்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிகளைதேட  அதற்குண்டான வழிகள் இல்லையென்றால் எல்லாம் தலையெழுத்து என்ற ஒற்றைச்சொல்லோடு விரக்தியான மனப்போக்கில் இன்றையவாழ்வு.

மேற்சொன்ன அத்துனை விளை வுகளையும் மாறத்துடிக்கும் மனதுக்கு நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்  கொண்டுவரும்.

பொருள் வரும்வழி சரியில்லை யென்றால் எந்தவொ ரு தனிமனித  சமுதாயவாழ்க்கை என்பது மிகதுன்பத்திற்கு உட்பட்டதே….



Saturday, May 21, 2011

நடுத்தர வர்க்கம்


நடுத்தரவர்க்கத்தினனாய்  ஓடும் வாழ்வு. சமுதாயகட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு வாழும்போது பெரிதும் குறுக்கீடாய் அமை வது அவர் அவர்களது சுயமரியாதை.


எதைப்பற்றியும் அலட்டி கொள்ளாத கீழ்தட்டு மக்களாய் இருக்கவேண்டும் அல்லது காசைக்காட்டி வாயைமூடும் பெரும்தனக்காரர்களாய் இருக்கவேண்டும் என்ற நடுத்தரவர்கத்தின் முனுமுனுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

தன்னுடைய   வழி என்பதைவிடவும் தன்சுதந்திரம்  என்றெல்லாம் பார்க்காது  அருகில் உள்ளவர்கள் என்னசொல்வார்களோ  என்ற மற்றவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பதில் நடுத்தரவர்க்கம் என்றும் நடுத்தரவர்க்கமே…

நட்டத்திலும் துன்பத்திலும் யாரும் பங்கெடுக்கமுன்வரமாட்டார்கள். அவர்கள் வார்த்தை தான் வேதாந்தமாய்  வாதமாய் முன்வை க்கப்படும்  .

எவ்வளவு புரிதல்களோ டு எடுத்து சொ ன்னாலும் அவர்களுக்கு உரிமையுடைகளின் வார்த்தைகள் குப்பை தான்.
இன்றளவிலும் நடுத்தரவர்க்கங்களில்  நடக்கும் குடும்ப சண்டைக்கு மற்றவர்களின் வார்த்தையும் ஒரு காரணம்.

நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனை  க்கு மிகமுக்கியபங்கு பொருளாதாரம். வரும் வரவு அறிந்து செலவு செய்யதெடங்கினால் இன்றைய சமுதாயத்தின் கவர்ச்சியான அம்சங்களை பாதிக்கு மேல் இழக்கதொடங்கினால் ஏதோ  குடும்ப வண்டியை ஓட்டலாம்.

குடும்பநபர்களின் அவசியங்களும் ஆசைகளும் எவ்வளவு தான் தடைபோடமுடியும் என்றகோண  த்தில் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக ஆ ரம்பித்தால் நடுத்தரவர்க்கத்தின் கடன் இல்லாத வாழ்வு என்பது ஆச்சர்யம் தான்.

நடுத்தரவர்க்கம் என்பது எப்பொழுதும் ஆச்சர்யமும் அவல மும் நிறைந்த வர்க்கம் தான்.

இன்பங்களும் துன்பங்களும் முழுவதுமாய் அனுபவிக்க கூடிய பக்குவம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம்.

Tuesday, April 19, 2011

குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும்


கட்டங்களுக்குள் நகரும் வாழ்வு. பரந்து விரியும் யோ சிப்புகளுக்கு நடுவே  சில  எல்லைகளை   தாண்டமுடியாத வாழ்வு.

யாரும் எவரும் அவரவர்களின் மன விரிவாக்கத்திற்கு தகுந்த மாதிரி தான் யோ சிப்பும் வெளிப்பாடுகளும்எல்லாமும் வாழ்வில் நடந்தவை  சிலவாகவும் நடக்காதவை  பலவாகவும் இருப்பது உண்மை.


நம்குடும்பத்தில் நமக்கு சரியாக தெரியும் ஒன்றை   நடைமுறை படுத்திவிடலாம் என்று யோ சிக்கையில்  ஒரு குடும்ப நபரின்  முரண்பாடு மொ  த்தகாரியத்தையும் சிதைத்துவிடும்.

சமுதாயம் என்று வரும்போது  அதிகாரத்தில் உள்ளதனிமனித   விருப்புகளும் வெறுப்புகளும் முக்கிய பங்காற்றும் அது ஆதரவோ   அ ல்லது உயிர்பழிவாங்கலோ   எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்.

எத்தனை விதமான  பார்வை களை    அ வர்கள் தெரிந்து வைத்திருந்தாலும்  அ த்தனையும் சரியாய் சமுதாயத்திலும்கையாளப்படுகிறதா என்பது சந்தேகம் தான்.

கோடிகளை  அமுக்கும் அரசியல்வாதிகளாகட்டும் இனவதை  செய்யும் அதிபராகட்டும் அவனுடைய   முதல்தகுதி தனி மனிதன்  இதில்  தன்னுடைய   குழுமம் தான் பிரதானம்அதற்கு பிறகு தன்னை  சார்ந்தவர்கள் என்றே விரிவடைகிறது. மற்றவையெல்லாம் சாதாரணம் தான்.

இதன் அடிப்படையிலேயே  குழிதோண்டல்களும் உயிர்பழிவாங்கல்களும் சொத்து சேர்ப்புகளும் மற்றஎல்லாவிதமான  நல்ல கெட்ட செயல்களை  யும் வரலாறு பதிவு செய்கிறது. 

ஏதோ   நம்மால் இயன்றவரை நம்மளவில் நாம்.....

நமக்காக
நம்மை  சேர்ந்தவருக்காக முடிந்தால் செய்து முடித்து நம்மை  சேராதவருக்காகவும் நாம் விரிவடைய  வேண்டியது தான்.  


Wednesday, January 05, 2011

மது மாணவர்களையும் அடிமையாக்கும்.


அவன்    அம்மா  பிள்ளை   . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே  மௌ   ன ம்    தான் அவன் மொ  ழி.  .  விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில  வார்த்தைகளில்  பதில்.

அ ந்த ஊ  ரில் பேர் வாங்கிய  ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.

இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள  நண் பர்கள் தான்.

வீட்டில் அவன் அமைதி பார்த்து  இவன்தான ய்யா பிள்ளை  என்று வியந்தவர்கள் உண்டு.

எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை  தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல   எப்படியோ  வகுப்பாசிரியை  தெரிந்து  பள்ளி முதுல்வருக்கு  விசயம் சொல்லப்பட்டது.

விசாரணை   யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண  வன் கேட்டது  பெற்றோ  ர்களுக்கு தெரிவிக்கப்பட ...

கெஞ்சிய  நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம்  பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய  பையனுக்காக நின்றுகொ  ண்டிருந்தார்கள்.

ஒரு சர்வே  முடிவு

இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.

15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.

என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர் அடிப்பதாக நினைத்தால் 15 சதவீதம் பேர் குடிக்கிறார்களாம். பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற சமயங்களில் மட்டும் மதுபானம் குடிப்பதாக 70 சதவீத இளைஞர்கள் கூறினார்கள்.

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

Thursday, October 28, 2010

இது எப்பொழுது?



சமுதாய மாற்றத்தின் முதல் தொடக்கம் தனிமனித  மாற்றத்தில் தான்.

தன்னளவில் தனக்கு  போதுமான அளவிற்கு பொருள்  இடம் என்று வந்தவுடன்  தன்னுடைய பார்வை யை  அடுத்து சிரமப்படும் சக உயிர்ப்பின்  மீது தொடங்கினால் அவர்களால்பயன்பெறுபவர்கள் பல போ்.

இந்த மனோபாவம் அரிது.  சொல்வது  அதைபற்றி எழுதுவது அல்லது அதைப்பற்றி வாதிடுதல்  மிக எளிது.

நாம் வாழுகிற இடத்தில்  பலவித குறைப்பாடுகள் உண்டு. யாரும் மறுக்கமுடியா உண்மை.

இத்தகைய குறைப்பாடுகளிலிருந்து  மேல் வந்தவர்கள் தான். சமுதாயத்தை ப்பற்றி  அதிகம்  கவலை படுபவர்கள்அல்லது   வாதிடுபவர்கள்.

சமுதாயத்திற்காக செயல்படுபவர்கள் எத்தனைப்பேர் ?   இதுவும் அரிது.

 தன்னளவில் நிறைவடைந்தவர்கள் எல்லை  விஸ்தரிப்பு செய்யாது மேற்கொண்டு  விலை  உ யர்ந்த ஆடம்பரங்களுக்கு காசு தேவை   என்று செல்லாது சமுதாயத்தின்  மீது  அக்கறை கொண்டபவர்களாக   மாறினால் மாற்றம் நிச்சயம்.

இது எப்பொழுது?

Friday, July 16, 2010

மாறும் பெண் தலைமுறை

ஊரில் பெரிய மனிதர்பெண்ணுடைய திருமணத்தை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. பெண்ணே  மாப்பிள்ளையை தேடி கொண்டது .

பேசி சரிசெய்து   விடலாம்  அவரின்  நினைவு நினைவாகவே இருக்க எனக்கு அந்த பையனை  திருமணம் செய்து கொடுங்கள் என்று கூற   அதிர்ந்து போய் தன்னுடைய பெயரை இவள்கெடுத்து விடுவாளோ  என்று பயந்து பெண் பார்த்த பையனுக்கு மணம் முடித்த அப்பா.

படிப்பு முடிந்த நாள்  அன்று  எதிர் வீட்டு பையனோடு ஓட்டம் அப்பா சொல்லமுடியாது தவிக்க அவளது அம்மா  வீட்டை வெளியில் வருவதையே தவிர்த்தாள்.

எதிரும் புதிருமாய் எப்படி இருப்பது.  வீடு விற்பனைக்கு என்று போர்டை தொங்க விட்டு ஒரு நாள் ராவோடு ராவாக வீட்டை காலி செய்து வெளியூர் சென்றது.

வீட்டுக்கு வந்து பழகிய பையன்  தன் பெண்ணை   காதலித்தான் என்பது  வீட்டிற்கு தெரியும்.  திடீரென்று  பெண் வீட்டை விட்டு வெளியேறி பையனோடு செல்ல     ஊர் வாய்காக பயந்து கொடி  பிடிக்கும் பெற்றோர்கள்.

 வீட்டின் கதவுகள்   பூட்டியே  கிடக்க வெளிவராத மனிதர்கள்.


தலைமுறைகள் மாறுகிறது. இச்சமுதாயத்தின் போக்குக்கு  தகுந்தாற் போல் இளைய சமுதாயத்தினுடைய  மனபோக்கில் பெரிய மாற்றங்கள்.

பழைமையின் வேர்கள் இன்னமும் கொஞ்சம் இருப்பதால்  பெற்றோர்களி்ன் மனமாறுதல் என்பது இக்காலத்திற்கு தகுந்தாற்போல் என்பது ஏற்று கொள்ளமுடியா நிலையில் அவர்களின் வேதனை இயல்பு தான்.

மன மாற்றம் பெற்ற இளைய தலைமுறைகளின் விளைவுகள் அறிய (குறிப்பாக பெண் தலைமுறை)  இன்னமொரு இருபதைந்து ஆண்டுகள் பொறுத்தால்   தெரியும்.

Tuesday, June 08, 2010

சண்டை

ஓட்டமும் நடையுமாக ஒரு பெண் ரோட்டு திசைநோக்கி சென்றாள். மிக குறைந்த இடைவெளியில் மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாய் செல்ல…


சென்றவர்கள் ஒரே இனத்தவர்கள். ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று நினைத்த வேளையில் சத்தம் போட்டப்படியே  ஆண்களும் பெண்களும் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

முப்பது வருசமா இங்க இருக்கோம் இது மாதிரி நடக்கல..
நாங்க மனசுங்க கெடையாத… நீதி நியாயம் கெடையாத…என்று
சத்தம் போட்டப்படியே செல்ல..

போய் கொண்டிருந்த ஆண்கள் இருவரை இடைமறிக்க.. நேத்து எங்க பையன்களுக்கு அவங்க பையன்களுக்கு பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளேயும் அடிதடி நடந்துருக்குங்க.

இப்பவந்து யாரோ பத்து பேரு வந்துஆம்பள பொம்பளன்னு பாக்காமா அடிக்கிறாங்க அதான் கேஸ் கொடுக்க போறோம்.

அதுகுள்ளாகவே ஊர் பெரியவர்கள் போலீசுக்கு போன் செய்து கிராம பஞ்சாயத்த பேசிக்கிறோம் எப்.ஜ.ஆர் போடவேண்டாம் என்று சொல்ல போலீஸ் சார்கள் அன்றைக்கு கேஸ் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

மறுநாள் காலை  எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்ததுபஞ்சாயத்தார்கள் சிலபோ் பிரச்சனைக்குரிய இரு இனத்தவர்களும் வந்திருந்தார்கள்.



ஓருஇனத்தவர் மட்டும் அதிகமாய் வந்திருந்தார்கள். பஞ்சாயத்து ஆரம்பித்தது இரு தரப்பாரை கூப்பிட்டு விசாரித்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்பம் முதலே ஒருவரை பார்த்து ஒருவர் வேகமாய் பேசி கொள்ள ஆரம்பிக்க…

நீ ஆம்பளயா இப்ப அடிடா பாப்போம் என்று கத்த..

நீ சும்மா இரு எதிர்தரப்பு பதில் சொல்ல..

திடீரென்று இரு இனத்தவர்களும் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள். யார் யார் எங்கு இருக்கிறார்கள். யாரை காப்பாற்றுவது  ? எப்படி அடிபடாமல் தப்பிப்பது என்றே தெரியாமல் போனது?

துரத்தி துரத்தி ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள்.   அய்யோ…அய்யா….

அவன  புடிடா …அவன புடிடா….

அய்யா அங்க துரத்தி அடிக்கிறாங்கய்யா….

பொதுவில் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.

Monday, May 03, 2010

எந்ததுறையிலமவுசு அதிகம்



கணினி துறையில்வேலைப் பார்த்துவரும் நண்பர் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்தோம்.  இன்னொரு நண்பர்  டியூசன் சென்டர் நடத்திவருகிறார்.

அவரிடம் அந்த நண்பர் கேட்டார் இப்ப எல்லாரும்  சாப்ட்வேர்  ..சாப்ட்வேர் அப்படின்னு சொல்லுறாங்க..  இப்ப அதோட மவுசு கம்மி வருங்காலத்துல எந்ததுறையிலமவுசு அதிகம்  அப்படின்னு கேட்டாரு.

இப்ப நான் படிச்சு தெரிஞ்சிகிட்டவரையிலும் சோலார் எனர்ஜி ,   காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம்போன்ற துறைகளில் நல்லதொரு வாய்ப்பு உள்ளது.

நீங்க தான் உங்க மாணவர்களுக்கு   சொல்லனும்.நாங்கசொல்லறதுக்கும் நீங்க சொல்லற வித்தியாசம் நிறைய உண்டு. இன்னொரு கொடுமையான விசயம் என்ன அப்படின்னா ஆசிரியர் பயிற்சி முடிஞ்சு வாத்தியார் ஆன  பெரும்பாலானவர்கள் உலகில் நடக்கும் எந்த மாற்றங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை.  இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சரியான வழியை காட்டிவிடமுடியும்.

நாம தான் ஏதோ நம்மால் ஆன முயற்சி செய்துபார்க்கவேண்டும்  என்று கூற வேலை  ..வேலை என்று வேலை கிடைப்பதற்குமுன் அதற்கு உள்ள முயற்சி வேலை கிடைத்த பிறகு அதற்குண்டான அர்பணிப்பு உணர்வு மிகவும் கம்மியாக உள்ளது.

போலீஸ்காரர்கள் யாரும் வேலை கிடைத்தபிறகு உடற்பயிற்சி செய்வதே கிடையாது வேலை கிடைப்பதற்கு முன்  எப்படியெல்லாம் தன் உடலை வருத்தி கொண்டிருப்பார்கள் தெரியுமா..

மாற்றங்கள் தேவை.  அந்த மாற்றங்களை உங்களை போன்ற ஆசிரியர்கள் தான்   விதைக்க வேண்டும் என்று கூறினார்.

Monday, April 19, 2010

என்னுடைய பெண் அல்ல அவள்

அன்று காலை வழக்கம் போலவே கல்லுாரி கிளம்பி சென்றாள் அந்த பெண். தன் ஊருக்கு அருகில உள்ள கல்லூரியில் எம். எஸ்சி  இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.

கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன.  அவளது அப்பா அரசாங்க  சம்பளம். தன்னுடைய பெண்களை மேற்படிப்பு வரை படிக்கவைத்து மூத்த பெண்ணுக்குசமீபத்தில் தான் திருமணம் செய்து வைத்தார்.  தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்.

மௌனத்தின்  மதிப்பை யார் அறிதலும் கொஞ்சம் கடினம் . அந்த பெண் கல்லூரி போவதும் தெரியாது வருவதும் தெரியாது. மௌனமாய் அமைதியாய் அவளுடைய நடவடிக்கைகள்.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  வந்துவிடுவாள் அன்று வர தாமதமானது .

வீட்டில் அவளுடன் செல்பவர்களை விசாரிக்க ஆரம்பிக்க பெண் ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.  தகுதியான பையனா  என்றெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு யாரோ  டிரைவர் என்றார்கள்.

சொந்தமும் சுற்றமும் கூடியது.   விசாரித்த வகையில் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர்களின் உறவு கார பையனாம் அவன்   என்று சொல்லப்பட காவல் நிலையத்தில்  புகார் செய்தார்கள்.

இரண்டு நாளில் பிடித்து கொண்டுவரப்பட்டார்கள். இனி என்னபயன்?  எனக்கு பெண் அல்ல  என்று   எழுதி கொடுக்கமாறு காவல் நிலையத்தில் இவர்பணிய பெண்ணை பெற்றவருக்கு  பெண்ணால்  எழுதி கொடுக்கப்பட்டது.

பெண் வீட்டார் இரண்டு நாட்களாய் பட்டபாடு அவர்களுக்கு தெரிந்த ஒன்று. பலவிதமான பேச்சு வெளியில்  பலவிதமான அனுமானங்கள் எழும்பியது.

பெண்ணை பெற்றவர்களுக்கு ஏன் இந்த மனகஷ்டம். தன்னுடைய மூத்த பெண்ணை நல்லஇடத்தில் திருமணம் செய்வித்தார்கள்.  வசதிக்கு குறைவு கிடையாது.  அப்புறம் ஏன் ?

அந்த பெண்  ஏன் இவ்வாறு? கேள்விகள்  எழும்ப விடைகள் எங்கே? அவர் அவர்களின் மனதிற்கு தெரியும். வாழ்க்கை வட்டம் தான் இந்த பெண்ணிற்கு  அமைந்த வாழ்க்கை என்ன சொல்லி தரப்போகிறதோ ?

வாடிய முகமாய்  தாடியுடன் யாருடனும் நின்று பேசவே அச்சப்பட்டவராய் பெண்ணுடைய அப்பா.

Friday, March 26, 2010

என்னது நீங்களுமா?

ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..

திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.

என்னது நீங்களுமா?

திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.

ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க

என்று கேட்க ...

அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று

நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்

ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்

ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....

இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..

சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.

தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.

LinkWithin

Related Posts with Thumbnails