Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

Friday, April 02, 2010

ஆணாதிக்கம்




















கொஞ்சலாய்

வேண்டல்கள்

தட்டமுடியா

எனது செய்கைகள்

மனதில் குழப்பம்

பெண் சொல்ல

நான் கேட்பதா…

ஆணாதிக்கத்தின்

சாயல்-ஆனாலும்

எனக்கு பிடிக்கவில்லை

தட்டமுடியா

எனது செய்கைகளால்.

Monday, July 06, 2009

அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை


அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை . அந்த வீட்டு தொழில் துணி வெளுத்தல். பெண்கள் நான்கு பேர் ஆண்கள்
இரண்டு. வயதான தந்தை தாய்.

இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.

இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.

இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.

கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.

இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.

அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.

LinkWithin

Related Posts with Thumbnails