Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Wednesday, March 23, 2011

பெண்களே நடத்திய இறுதி ஊர்வலம்


இ றந்தவ ர்  உட லை   சுற்றி  அ ழும் பெண்களைப் பார்த்துள்ளே  ன்.  
இ றந்தவர்களை    அடக்கம் செய்த பெண்களை    கண்டு மகிழ்வெ ய்தினேன். செய்தி இ து…..

புதுச்சேரி : வீராம்பட்டினத்தில் இறந்தவர் உடலை பெண்களே கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, அரியாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திருவிழா கலை நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது. இதனால், இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் துப்பாக்கிச் ‹டு நடத்தி கலவரத்தை அடக்கினர். பிரச்னைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், வீராம்பட்டினத்தை சேர்ந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்த செங்கேணி அம்மாள்(62) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று காலை இறந்து விட்டார். தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது மகன் பார்த்தீபன் மட்டுமே வந்திருந்தார். ஆனால், ஊரில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில் உடலை அடக்கம் செய்வது எப்படி என்று தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்தனர். பின், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று கூடி, சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின், மாலை 5.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செங்கேணி அம்மாள் உடலை ஏற்றி, வண்டியை பெண்கள் இழுத்துச் சென்றனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து விட்டு வந்தனர். சுடுகாட்டிற்கு பெண்கள் செல்லக் கூடாது என்ற சம்பிரதாயம் இருந்த போதும், தவிர்க்க முடியாத காரணத்தால், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி உடலை அடக்கம் செய்த சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(நன்றி  தினமல ர்)

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

Friday, July 16, 2010

மாறும் பெண் தலைமுறை

ஊரில் பெரிய மனிதர்பெண்ணுடைய திருமணத்தை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. பெண்ணே  மாப்பிள்ளையை தேடி கொண்டது .

பேசி சரிசெய்து   விடலாம்  அவரின்  நினைவு நினைவாகவே இருக்க எனக்கு அந்த பையனை  திருமணம் செய்து கொடுங்கள் என்று கூற   அதிர்ந்து போய் தன்னுடைய பெயரை இவள்கெடுத்து விடுவாளோ  என்று பயந்து பெண் பார்த்த பையனுக்கு மணம் முடித்த அப்பா.

படிப்பு முடிந்த நாள்  அன்று  எதிர் வீட்டு பையனோடு ஓட்டம் அப்பா சொல்லமுடியாது தவிக்க அவளது அம்மா  வீட்டை வெளியில் வருவதையே தவிர்த்தாள்.

எதிரும் புதிருமாய் எப்படி இருப்பது.  வீடு விற்பனைக்கு என்று போர்டை தொங்க விட்டு ஒரு நாள் ராவோடு ராவாக வீட்டை காலி செய்து வெளியூர் சென்றது.

வீட்டுக்கு வந்து பழகிய பையன்  தன் பெண்ணை   காதலித்தான் என்பது  வீட்டிற்கு தெரியும்.  திடீரென்று  பெண் வீட்டை விட்டு வெளியேறி பையனோடு செல்ல     ஊர் வாய்காக பயந்து கொடி  பிடிக்கும் பெற்றோர்கள்.

 வீட்டின் கதவுகள்   பூட்டியே  கிடக்க வெளிவராத மனிதர்கள்.


தலைமுறைகள் மாறுகிறது. இச்சமுதாயத்தின் போக்குக்கு  தகுந்தாற் போல் இளைய சமுதாயத்தினுடைய  மனபோக்கில் பெரிய மாற்றங்கள்.

பழைமையின் வேர்கள் இன்னமும் கொஞ்சம் இருப்பதால்  பெற்றோர்களி்ன் மனமாறுதல் என்பது இக்காலத்திற்கு தகுந்தாற்போல் என்பது ஏற்று கொள்ளமுடியா நிலையில் அவர்களின் வேதனை இயல்பு தான்.

மன மாற்றம் பெற்ற இளைய தலைமுறைகளின் விளைவுகள் அறிய (குறிப்பாக பெண் தலைமுறை)  இன்னமொரு இருபதைந்து ஆண்டுகள் பொறுத்தால்   தெரியும்.

Monday, April 19, 2010

என்னுடைய பெண் அல்ல அவள்

அன்று காலை வழக்கம் போலவே கல்லுாரி கிளம்பி சென்றாள் அந்த பெண். தன் ஊருக்கு அருகில உள்ள கல்லூரியில் எம். எஸ்சி  இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.

கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன.  அவளது அப்பா அரசாங்க  சம்பளம். தன்னுடைய பெண்களை மேற்படிப்பு வரை படிக்கவைத்து மூத்த பெண்ணுக்குசமீபத்தில் தான் திருமணம் செய்து வைத்தார்.  தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்.

மௌனத்தின்  மதிப்பை யார் அறிதலும் கொஞ்சம் கடினம் . அந்த பெண் கல்லூரி போவதும் தெரியாது வருவதும் தெரியாது. மௌனமாய் அமைதியாய் அவளுடைய நடவடிக்கைகள்.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  வந்துவிடுவாள் அன்று வர தாமதமானது .

வீட்டில் அவளுடன் செல்பவர்களை விசாரிக்க ஆரம்பிக்க பெண் ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.  தகுதியான பையனா  என்றெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு யாரோ  டிரைவர் என்றார்கள்.

சொந்தமும் சுற்றமும் கூடியது.   விசாரித்த வகையில் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர்களின் உறவு கார பையனாம் அவன்   என்று சொல்லப்பட காவல் நிலையத்தில்  புகார் செய்தார்கள்.

இரண்டு நாளில் பிடித்து கொண்டுவரப்பட்டார்கள். இனி என்னபயன்?  எனக்கு பெண் அல்ல  என்று   எழுதி கொடுக்கமாறு காவல் நிலையத்தில் இவர்பணிய பெண்ணை பெற்றவருக்கு  பெண்ணால்  எழுதி கொடுக்கப்பட்டது.

பெண் வீட்டார் இரண்டு நாட்களாய் பட்டபாடு அவர்களுக்கு தெரிந்த ஒன்று. பலவிதமான பேச்சு வெளியில்  பலவிதமான அனுமானங்கள் எழும்பியது.

பெண்ணை பெற்றவர்களுக்கு ஏன் இந்த மனகஷ்டம். தன்னுடைய மூத்த பெண்ணை நல்லஇடத்தில் திருமணம் செய்வித்தார்கள்.  வசதிக்கு குறைவு கிடையாது.  அப்புறம் ஏன் ?

அந்த பெண்  ஏன் இவ்வாறு? கேள்விகள்  எழும்ப விடைகள் எங்கே? அவர் அவர்களின் மனதிற்கு தெரியும். வாழ்க்கை வட்டம் தான் இந்த பெண்ணிற்கு  அமைந்த வாழ்க்கை என்ன சொல்லி தரப்போகிறதோ ?

வாடிய முகமாய்  தாடியுடன் யாருடனும் நின்று பேசவே அச்சப்பட்டவராய் பெண்ணுடைய அப்பா.

Monday, April 12, 2010

பெண் பிடிவாதம்



புரிந்து கொள்ளாத பெண் பிடிவாதம் உண்மையாய் நரகம்.  மகளோ  , மனைவியோ பெண்ணினுடைய எந்த பதவியாகவும் இருக்கலாம் ஆனால்  பெண்.

பெண்  என்று அவளிடம் கோபம் காட்ட முடியா சூழலில் கோபம்  காட்ட முடியாத நம்முடைய பலவீனத்தை அவர்களுடைய பலமாக உபயோகம் செய்ய அவ்வளவுதான் வேகம் வரும் இதயத்தின் அதிகபட்ச துடிப்போடு மௌனமாகிவிடும்.

பெண்ணிடமா நம் கோபம் காட்ட , நினைத்தவர்களின் அமைதி  அவர்களுக்கு எட்டாகனி தான்.  செயல்படுத்த முடிந்தவர்கள் ஆத்திரத்தின் அடுத்தகட்ட பிரயோகம் கன்னத்தில் அறை . இன்னும் கடுமையானவர்கள்  உச்சகட்டமாய்அவர்களுடைய தலைமுடியும்  பிடித்து அடித்தல்உதையும் தான்.

புரிந்து கொண்டவர்கள் நல்லது கெட்டது சொல்லலாம்.  பிரச்சனையின்போக்கு தக்கவாறே அவர் அவர்களுடைய மனது.
பெண்னுடைய மிகப் பெரிய ஆயுதம் பேசி கொல்லுதல் அல்லது பேசாமல் இருந்து கொல்லுதல்.

எது கேட்டாலும் எனக்கு தெரியாது ? என்று ஒற்றைவரி அல்லது நீண்ட மௌனம்.   

மகளாக இருக்கையில் என்னடி பொண்ண பெத்து வைச்சுருக்க? (பெற்றவன் இவன்)

மனைவியாக இருக்கையில் நான் போயியும் போயி உன்ன கட்டி கிட்டேன் பாரு ? என்ற வெறுப்பின் உச்சம் பெண் பிடிவாதம்.

பெண்னுடைய அடுத்தகட்ட ஆயுதம் சாப்பிட மறுத்தல்.
நான் இருக்குறது தானே  உங்களுக்கு தொந்தரவு நான் போயிறேன்(செத்து போயிறேன்) …. அப்புறம் ஒன்னும் உங்களுக்கு தொந்தரவு கெடையாது.

என்னடா வாழ்க்கை மயிறு ..சே..இப்படி இருக்க? என்ற விரக்தியின் உச்சமும் பெண் பிடிவாதம் தான்.

முதல் வரியை  கொஞ்சம் நினைவுப்படுத்துக...

Sunday, November 08, 2009

பெண்-4- அத்தினி


கால்களை உதறி உதறி நடக்கின்ற நடையினையும் மேலுயர்ந்து வளைந்து தடித்த நீண்ட விரல்கள் பொருந்தியுள்ள பாதங்களையும் நடுக்கம் அமைந்த பேச்சினையும் குட்டையான கழுத்தினையும் அடர்த்தியற்று சிதறிய செம்பட்டை மயிரோடு தோன்றும் கூந்தலையும் உடையவள் தீமைபயக்கின்ற இயல்புகளையுடையதான தொழில்களையே எப்போதும் செய்கின்ற வழக்கமும் நாக்குக்கு எரிப்பும் துவர்ப்பும் பெரிதும் விருப்பந்தருவதாயிருக்கின்ற தன்மையும் அவள் உண்பதைகாணும் பிறபாவையர் எல்லாம் அச்சங்கொள்ளுமாறு உண்ணும் இயல்பும் உடையவள். நாணத்தை அறவே கைவிட்ட இயல்பும் உடையவள்.

இது அத்தினி வகை.

Wednesday, November 04, 2009

பெண்-3- சங்கினி


உயரமும் பருமனும் என்றில்லாமல் நடத்தரமாக விளங்குகின்ற அழகுடன் எல்லா உறுப்புகளும் சம நிலையிலே அமைந்து கவர்ச்சி மிகுந்த உடலமைப்பும் நடந்து போகின்ற போது பூமியிலே பதிக்கின்ற காலடிதடங்கள் அகன்று பதியுமாறு செல்லும் நடையும் சிறப்பு மிகுந்த நரம்புகள் புடைத்த மேனியிலே தோன்றுகிற வளமான கட்டுடல் அமைப்பும் கொண்டவள். சமைத்த உணவுகளைக் கூடுதல் குறைதல் இன்றி சம்மாக அருந்தும் தன்மையும் அமைந்தவள்.

சிவந்த மலர்களால் தொடுக்கபட்ட மலர்களையும் சிவந்த நிறம் பொருந்திய ஆடைகளையும்தன் மனத்திலே ஆர்வமுடன் விரும்புகின்ற தன்மையும் கோபப்பட வேண்டாததற்கெல்லாம் அடிக்கடி கோபப்படும் இயல்பும் பொய்ம்மையும் கோட் சொல்லுகையும் கொருந்தியிருக்கின்ற நாவும் உடையவள். வஞ்சகம் பொருந்திய மனத்தினையும் நாளுக்கு நாள் பித்தம் வளர்த்து பெருகும் உடலும் வெஞ்சினகொண்ட கழுதையினைப்போல உரத்துக் கொடூரமாக கத்துகின்ற கடுஞ்சொல்லும் அச்சம் என்பதே சற்றுமில்லாது உள்ளமும் சமூக மரபுகளை மதியாது நடக்கும் தன்மையும் உடையவள்.

இது சங்கினிவகை.

Thursday, October 29, 2009

பெண்-2- சித்தினி

பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.

இது சித்தினி வகை.

Tuesday, October 27, 2009

பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.

செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.

அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.

இது பத்மினி வகை.

Saturday, July 25, 2009

ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே..

பெயர்- நித்யானந்த் கோபாலிகா

தகுதி - கான்பூர் IIT யில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.

வேலை - அமெரிக்கா பென்சில்வேனியா

செய்த குற்றமாக சொல்லபடுவது - 13 வயது பள்ளி சிறுமியைபாலுறவுக்கு அழைத்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்- 20 ஆண்டு சிறைவாசம் 12.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

சார்..அவங்களா வந்தா அவங்க விருப்பம் நீங்க கூப்பிட்டா அது வன்முறை.

படித்தவர்கள் சிலபேர் கழனி பானைக்குள் கையை விடும் சமாச்சாரம் இதுதாங்க.

என்ன பன்னறது ஒவ்வொரு மனிதனோட தலையெழுத்த மூளை நிர்மாணிக்கல காலம் தான் சார் நிர்மாணிக்குது.

Monday, July 06, 2009

அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை


அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை . அந்த வீட்டு தொழில் துணி வெளுத்தல். பெண்கள் நான்கு பேர் ஆண்கள்
இரண்டு. வயதான தந்தை தாய்.

இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.

இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.

இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.

கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.

இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.

அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.

LinkWithin

Related Posts with Thumbnails