Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Wednesday, January 05, 2011

மது மாணவர்களையும் அடிமையாக்கும்.


அவன்    அம்மா  பிள்ளை   . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே  மௌ   ன ம்    தான் அவன் மொ  ழி.  .  விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில  வார்த்தைகளில்  பதில்.

அ ந்த ஊ  ரில் பேர் வாங்கிய  ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.

இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள  நண் பர்கள் தான்.

வீட்டில் அவன் அமைதி பார்த்து  இவன்தான ய்யா பிள்ளை  என்று வியந்தவர்கள் உண்டு.

எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை  தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல   எப்படியோ  வகுப்பாசிரியை  தெரிந்து  பள்ளி முதுல்வருக்கு  விசயம் சொல்லப்பட்டது.

விசாரணை   யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண  வன் கேட்டது  பெற்றோ  ர்களுக்கு தெரிவிக்கப்பட ...

கெஞ்சிய  நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம்  பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய  பையனுக்காக நின்றுகொ  ண்டிருந்தார்கள்.

ஒரு சர்வே  முடிவு

இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.

15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.

என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர் அடிப்பதாக நினைத்தால் 15 சதவீதம் பேர் குடிக்கிறார்களாம். பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற சமயங்களில் மட்டும் மதுபானம் குடிப்பதாக 70 சதவீத இளைஞர்கள் கூறினார்கள்.

Saturday, April 03, 2010

நேர்மை அங்காடி

தமிழ்நாடு  திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு மேல்நிலைபள்ளியின் தலைமைஆசிரியர் திரு.இரா.மணிவண்ணன் அவர்க ள் ஓர் புதுமுயற்சியை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தேவையான  எழுதுபொருட்கள்மற்றும் தின்பண்டங்கள்  சகிதம் விற்பனைக்குபள்ளியின் ஓர் அறை  ஒதுக்கப்பட்டு நேர்மை அங்காடி என்று பெயர் வைக்கபட்டது.

விற்பனை செய்பவர் யாரும் அங்கே கிடையாது. பொருட்கள் இருக்கும் காசு அடங்கிய கல்லாப்பெட்டி ஒன்று இதுதான் நேர்மை அங்காடி.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் அல்லது எழுதுபொருளோ  தாங்களே எடுத்துகொண்டு அதற்குரிய தொகையினை  கல்லாப்பெட்டியில் போட்டுவிடவேண்டியது தான்.

அன்றைக்கு நடந்த காலைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.   முதல்நாள்மிகநேர்மையாக விற்பனைசெய்பவர் யாரும் இல்லாமல் ரூபாய் இருநூற்றி தொன்னூறுக்கு வியாபாரம் ஆனது. இரண்டாவது நாள் இருநூற்றி எண்பது என விற்பனை படு ஜோர்.

மூன்றாவதுநாள்  முன்னூறுக்கு பொருட்கள் விற்பனை ஆகியிருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த காசு ரூபாய் எண்பது மட்டுமே தலைமையாசிரியர் விடாது நான்காவது நாளும் முயற்சித்துபார்க்க  மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்  விற்பனை ஆகியிருந்த பொருட்கள் படு அதிகம் ஆனால் கல்லாப்பெட்டியில் இருப்பு ரூபாய்  ஐம்பது தான்.

ஐந்தாவது நாள் விற்பனை செய்யபொருட்கள் இல்லாததால் நேர்மை அங்காடி நிறுத்தபட்டு தற்காலிமாக மூடப்பட்டது.

தலைமையாசிரியர் அவர்கள் வெப் கேமரா அமைத்து நேர்மை அங்காடி தொடச்சியாக நடத்த  நினைத்திருக்கிறார் போலும் அவருடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி மாணவர்களுடைய  நேர்மைக்கு என்ன சொல்ல யோசியுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails