Showing posts with label வியாபாரம். Show all posts
Showing posts with label வியாபாரம். Show all posts

Friday, December 31, 2010

வீழ்வது பல விழிப்பது சில.



பரபரப்புக்கு   பஞ்சமில்லாத  நகரத்தின்  வீதிகள். பயண  த்தின்  இடை இடையே ஏற்பட்ட  வாகன நெரிசல்.  மக்களால் நிரம்பி வழிந்த  சூப்பர் மார்கெட்கள்.

 10 சதவீத தள்ளுப்படி 20 சத வீத தள்ளுப்படி  தேவை யில்லாதவற்றையும் தேவையாய்   வாங்கி குவித்த மக்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவச ப்பகுதியில்  முண்டியடித்த  கூட்டம்.

வாங்கிய  பொருளை  சுமந்து வருகையில்  கிடைத்த சந்தோ சம் எதுவரை  ?   கடை வரையிலா? வீடு  வரையிலா ?  அல்லது சுற்றத்தாரிடம் சொல்லும் வரையிலா?

கலர் கலராய் வண்ணவிள க்குகள் வெளிசத்தில்  வேண்டாம் என்கிற  மனோ  பாவத்தை   கூட   நமக்கு தேவை யோ   என்கிற மன ஆட்டத்தை  உண்டுபண்ணிய   பொ ருள்களின் அணிவகுப்பில் நடுத்தர  வர்க்கம் வீழ்வது நிச்சயம்.

புத்தாண்டு  சிறப்பு தள்ளுப்படியே  நடுத்தர வர்க்கத்தின் சில்லரை சேமிப்புகள்  பொ ருட்களாய் மாறி   புதிய வருசத்தின் முதல் நாளில் வீட்டினுள்கலராய் பல் இளிக்கும்.

வியாபார உல கின் கவர்ச்சியில்     வீழ்வது பல  விழிப்பது சில.

Saturday, April 03, 2010

நேர்மை அங்காடி

தமிழ்நாடு  திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு மேல்நிலைபள்ளியின் தலைமைஆசிரியர் திரு.இரா.மணிவண்ணன் அவர்க ள் ஓர் புதுமுயற்சியை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தேவையான  எழுதுபொருட்கள்மற்றும் தின்பண்டங்கள்  சகிதம் விற்பனைக்குபள்ளியின் ஓர் அறை  ஒதுக்கப்பட்டு நேர்மை அங்காடி என்று பெயர் வைக்கபட்டது.

விற்பனை செய்பவர் யாரும் அங்கே கிடையாது. பொருட்கள் இருக்கும் காசு அடங்கிய கல்லாப்பெட்டி ஒன்று இதுதான் நேர்மை அங்காடி.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் அல்லது எழுதுபொருளோ  தாங்களே எடுத்துகொண்டு அதற்குரிய தொகையினை  கல்லாப்பெட்டியில் போட்டுவிடவேண்டியது தான்.

அன்றைக்கு நடந்த காலைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.   முதல்நாள்மிகநேர்மையாக விற்பனைசெய்பவர் யாரும் இல்லாமல் ரூபாய் இருநூற்றி தொன்னூறுக்கு வியாபாரம் ஆனது. இரண்டாவது நாள் இருநூற்றி எண்பது என விற்பனை படு ஜோர்.

மூன்றாவதுநாள்  முன்னூறுக்கு பொருட்கள் விற்பனை ஆகியிருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த காசு ரூபாய் எண்பது மட்டுமே தலைமையாசிரியர் விடாது நான்காவது நாளும் முயற்சித்துபார்க்க  மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்  விற்பனை ஆகியிருந்த பொருட்கள் படு அதிகம் ஆனால் கல்லாப்பெட்டியில் இருப்பு ரூபாய்  ஐம்பது தான்.

ஐந்தாவது நாள் விற்பனை செய்யபொருட்கள் இல்லாததால் நேர்மை அங்காடி நிறுத்தபட்டு தற்காலிமாக மூடப்பட்டது.

தலைமையாசிரியர் அவர்கள் வெப் கேமரா அமைத்து நேர்மை அங்காடி தொடச்சியாக நடத்த  நினைத்திருக்கிறார் போலும் அவருடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி மாணவர்களுடைய  நேர்மைக்கு என்ன சொல்ல யோசியுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails