Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Wednesday, January 05, 2011

மது மாணவர்களையும் அடிமையாக்கும்.


அவன்    அம்மா  பிள்ளை   . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே  மௌ   ன ம்    தான் அவன் மொ  ழி.  .  விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில  வார்த்தைகளில்  பதில்.

அ ந்த ஊ  ரில் பேர் வாங்கிய  ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.

இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள  நண் பர்கள் தான்.

வீட்டில் அவன் அமைதி பார்த்து  இவன்தான ய்யா பிள்ளை  என்று வியந்தவர்கள் உண்டு.

எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை  தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல   எப்படியோ  வகுப்பாசிரியை  தெரிந்து  பள்ளி முதுல்வருக்கு  விசயம் சொல்லப்பட்டது.

விசாரணை   யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண  வன் கேட்டது  பெற்றோ  ர்களுக்கு தெரிவிக்கப்பட ...

கெஞ்சிய  நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம்  பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய  பையனுக்காக நின்றுகொ  ண்டிருந்தார்கள்.

ஒரு சர்வே  முடிவு

இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.

15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.

என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர் அடிப்பதாக நினைத்தால் 15 சதவீதம் பேர் குடிக்கிறார்களாம். பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற சமயங்களில் மட்டும் மதுபானம் குடிப்பதாக 70 சதவீத இளைஞர்கள் கூறினார்கள்.

Friday, April 30, 2010

குடிமகனின் அனுபவம்

மாடிப்படிகளில் ஏறிதான் அவன் வீட்டிற்கு செல்லவேண்டும்.

குளத்தோரம் சிறுநீர் கழிக்கப்போனவன் அந்த இடத்தில்தூங்கிவிடலாம் போல் உள்ளது என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்தவர்களும் அவனைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்க முடியவில்லை. அவன் குடித்த மது வேலை செய்ய
எல்லோரும் சிரிக்க அவனும் சிரித்தான்.

ஏங்க ..உட்கார்ந்தா தூங்கிடுவேன் வாங்க வீட்டுக்கு போவோம் என்று சொல்ல..

வாடா ..போவோம் என்று கிளம்பினார்கள்.

அவன் வீட்டின் அருகில் கோவில் ஒன்று இருக்க அதனுடைய படிக்கட்டில் அமர்ந்தான்.

சரி நீங்க போங்க..

நீ வீட்டுக்கு போடா..

நான் போயிறேன் நீங்க போங்க...

மாடிபடி ஏறமுடியுமாடா.. எங்க ரொம்ப மோசமா எடை போடாதீங்க என்ன ...

நான் போறேன் பாருங்க என்று கிளம்பினான்.

மாடிப்படியில் ஏறிவீட்டின் வாயிலை அடைந்தவுடன் அவனை இறக்கிவிட்டவர்கள் அந்தஇடத்தை விட்டு அகன்றார்கள்.

மறுநாள் அவன்

ஏங்க மாடிப்படி ஏற முடியுமான்னு சந்தேகம் வந்துட்டுங்க..

அப்புறம் என்னடா செஞ்ச ..

நாலு மூச்சு இழுத்துவிட்டு மூச்ச தம்மகட்டி ஏறுனங்க
போனது தான் தெரியும் சாப்பாடு பத்தியெல்லாம் நெனைப்பே இல்ல படுத்தது தான் தெரியும் பாதி ராவுல வயிறு கப..கப.. இருக்குங்க..

தண்ணிசாதம் இருந்திச்சு அவசரத்துக்கு ...

LinkWithin

Related Posts with Thumbnails