Friday, April 30, 2010
குடிமகனின் அனுபவம்
Tuesday, September 01, 2009
குடிகார தந்தையும் குடிகார மகனும்

அப்பாவும் டிரைவர் மகனும் டிரைவர். அப்பாவும் குடிகாரர் மகனும் குடிகாரர். காசு இருக்கும் போது சிகெரெட் பிடிப்பார்கள் காசு வரத்து குறைந்தால் பீடி தான் இருவருமே..
அப்பா மகனிடம் அவ்வப்போது செலவுக்கு காசு இல்லாவிடில் பத்து இருபது என காசு வாங்கி கொள்வார்.
இதனாலயே பையன் தன் குடும்பத்திற்கு என செலவுக்கு பணம் கொடுக்க மாட்டான். அப்பாரையும் மதிப்பது கிடையாது.
ஒரு நாள் இரவு வீட்டினுடைய செலவிற்கு பணம் கொடுக்க மகனிடம் அப்பா சொல்ல..
முறைத்து பார்த்தான்மகன். என்னி்டம் பணம் இல்ல…
அப்புறம் நீ சம்பாதிக்கிறது எல்லாம் என்னாச்சு? அப்பா
அதான் அப்பப்ப நீ வாங்குறியே.. மகன்.
அவன் சொல்றது கரெக்ட்தான் இது அம்மா.
எடி.. பு..மவளே நீ என்னடி வக்காளத்து மூனு வேள சாப்பாடு நான் போடுறேன் . இவன் கிட்டபத்துருவா வாங்கினா கேள்வி கேட்க கூடாதா..
எல…… கோ… உங்கிட்ட மகன் அப்படின்ன தான் பத்துருவா வாங்குனா நீ என்னடா ரொம்ப ஓவரா பேசுற..
நானும் கஷ்டபடுறேன்டா நாய..
நீ போய்யா இங்கிருந்து என்று கணவனை விரட்டினாள் மனைவி.
போடி..போ..உம் மகனோட சேந்துகிட்டு நீ எக்கேடாவது கெட்டு போ என்று தள்ளாடிய படியே சைக்கிளை மிதித்தான் அந்த கணவன்.
இரவு பதினோரு மணி லேசாய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.
Monday, August 10, 2009
கடன் வந்து மேலாட

இன்னைக்கு மதிய நேரம் திடீரென்றுஒரு வாய்ப்பு ஏற்பட்டது நண்பர் ஒருவர் மூலமாக பாருக்கு செல்வதற்காகதான்.
எல்லோரும் குடிப்பாங்கல்ல அந்த பாருக்கு தாங்க.. நண்பருக்கு நான் கம்பெனி கொடுக்க சென்றேன் குடிக்க
அல்ல பேச..
கூட்டம் குறைவாகதான் இருந்தது. உள்ளே நுழைந்தவுடனேயே இரு வாசகங்கள் கண்களில் படும்படி எழுதி வைத்திருந்தார்கள்.
“ கான மயிலாட கடன் வந்து மேலாட
கடன் வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட…”
வாடிக்கையாளர்களே நீங்கள் நாணாயமானவர்கள் தான் எங்களால் தான் கடன் கொடுக்க முடியவில்லை என்று ஒரு வாசகமும் அதற்கு அடுத்த வாசகம்
“ கடன் காரனாக இரவு போய் படுத்தால் காலையில் கடன்காரனாக எழுந்திருக்க வேண்டும். ஆகையால் இருப்பதை கொண்டு செலவு செய்ய கற்றுக்கொள்வோம்”.
என்றும் எழுதி வைத்திருந்தார்கள்.
யோசிக்கதான் வேண்டியிருந்தது. கெட்டதில் நல்லது இது தானா நண்பர்களே..