Tuesday, June 08, 2010
சண்டை
Tuesday, October 06, 2009
ஆளக்கொரு பக்கம்

மிகுந்த சிரமமத்திற்கு இடையே குடும்பத்தை வழி நடத்தினான். ஆகா..ஓஹே..என்று இல்லாவிட்டாலும் பிற மனிதர்கள் குறை சொல்லாத அளவிற்கு குடும்ப நிர்வாகம் செய்தான்.
ஆளக்கொரு பக்கம் வசை பாடவே செய்தார்கள் இவன்பொறுத்துகொள்வான். ஆனால் வந்தவள் உள்ளுக்குள் கோபபட்டாள் இரவானதும் இவர்கள் திட்டினார்கள் உங்களை எப்படி திட்டலாம் என்று கேட்க அவன் படும் சிரமங்கள் அவனுக்கு தெரியும். அதனாலயே இவனுக்கு உள்ளுக்குள் கோபம் கிளம்பும்.
மனைவி மீது எரிந்து விழுவான் ஆமா..நான் எத சொல்ல வந்தாலும் ஏன் என்னகிட்ட பாய்றீங்க..எனக்கு நேரா உங்கள சொல்லறது பொறுத்து கொள்ள முடியல அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்.
நீ சொல்வது சரிதான் அந்தமாதிரி சொல்லாத புள்ள. நீ சொல்ல சொல்ல அவங்க மேல கோபதான் அதிகம் வரும். குடும்ப உறவுல இதெல்லாம் சகஜம் என்பான். நீ ஊமையா இருந்துக்க வேண்டியது தான் என்று அவள் வாயை மூடினான்.
Monday, September 28, 2009
குடும்ப போர்

அவனிடமிருந்து அவனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்ததாய் நினைக்க போர்கொடி தூக்கினார்கள். வெள்ளைகொடி இவன் தூக்க இல்லை போர்தான் என்று சங்கு ஊதினார்கள்.
மிரட்டல்கள் உருட்டல்கள் துவங்கின ஆனாலும் வெள்ளைகொடியை தாங்கி பிடித்தே நின்றான். இவன் போரி்ல் ஈடுபடுவதற்கான எந்த ஆயுத்தம் செய்யவில்லை சங்கும் ஊதவில்லை.
போரின் முடிவு யார் ஒருவருக்கோ வெற்றியாக முடியும். குடும்ப போரில் பாதிக்கப்போவது இருதரப்பாருடைய மன நிம்மதி தான்.
எதிர்தரப்பிடமிருந்து மிரட்டல் உருட்டல்களும் நின்றபாடில்லை ஆனாலும் இவன் வெள்ளைகொடியை பிடித்தவாறே ஒற்றைஆளாய்..
Thursday, February 12, 2009
அவளுடைய வாழ்க்கை சூன்யமே..
சொந்த பந்தங்கள் அவளுக்கு அருகில் வசிப்பவர்களே எதையோ இழந்த முகத்துடன் பெரும்பாலும் தனியாக உட்கார்ந்திருந்து நேரம் கழிப்பாள். பொழுது போகவில்லையென்றால் எங்கயாவது நடந்து போய் வருவாள்.
அவளுடைய வாழ்க்கை அவளுக்கு எவ்வாறு இருந்ததோ தெரியவில்லை அவளைப்பற்றி தெரிந்தவர்களுக்கு அவளுடைய வாழ்க்கை சூன்யமே..
கணவனுடன் ஒத்துபோக வாழ்க்கை கணவனுக்கு பிடிக்காமல் போய் கோர்ட் படிக்கட்டுகள் ஏறி விவகாரத்து பெற்று ஜீவானாம்ச தொகை ப்பெற்று அதில் மேற்கண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட கணவனுடைய வீட்டில் வசித்து வந்தாள்.
சில வருடங்கள் சென்றது இவளுடைய கணவனுக்கு பணதேவை
இவள் வசிந்து வந்த வீட்டை விற்க முடிவு செய்து இவளை காலி செய்ய சொல்ல இவள் மறுக்க பிரச்சனை தொடர்ந்து நடைப்பெற்றது.
எந்தவொரு முடிவுக்கு ஒத்துவராது சண்டை போடுவதுமாக காலம் கழிந்து கொண்டிருந்தது.
