Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Friday, November 12, 2010

காசு சிரித்தது.

பூப்பெய்தினாள் அந்தப்பெண். அவளுடைய அப்பா வெளிநாட்டில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டோடு  மாப்பிள்ளை அவர்.

ஆரம்பகாலங்களில்   காசுக்காய்  பட்ட கஷ்டம் அதிகம். அந்த பெண்  குடும்பம். சகோதரர்களால் நல்லமுன்னேற்றம் ஏற்பட காசு பத்திய கவலை  இல்லாமல் போனது.

காசு தான் உலகம் என்று ஆனது அந்த குடும்பத்தினுடைய பெண்களுக்கு….

சகோதரனின்  நிதிபலத்தால்  புகுந்தகம் செல்லாமல்  பிறந்த ஊரிலியே  வீடு கட்டி கொண்டு தங்கிவிட்டார்கள்.
கணவன்மார்களும்பொண்டாட்டி  சொல் தட்டாது பிறந்தகத்தை விட்டு புகுந்தகம் வந்தார்கள்.

பொண்டாட்டிகளிடம் மதிப்பு கம்மி தான். என்ன செய்வது ? பிரச்சனை இல்லா குடும்ப நிர்வாகத்திற்கு ஆம்பிள்ளை சகித்து போகவேண்டும் என்கிற பாணி அவர்கள்.  கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.

காசு கண்ணை மறைக்க தன் பெண்ணின் சடங்கு போது  கணவன் வீட்டிற்கோ  கணவருடைய உறவினர் வீட்டுக்கோ சொல்லாமல் சடங்கு செய்தார்கள்.

கணவன் அப்பொழுது வெளிநாட்டில் இருந்தார். கோபம் அடைந்த கணவன் புகுந்த வீட்டிற்கு வராமல் பிறந்த   வீட்டிற்கு சென்று பெட்டியை இறக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

காசு போகுதே காசு.

பொண்டாட்டி கூப்பிட்டாள்  பதில் இல்லை.  சகோதரர்கள் முயற்சிக்க பலன் இல்லை.

அந்த ஊர் பெரியமனிதர்களை வைத்து பேச  அவர்களிடமும் பிடிவாதமாய் என் பெண்ணுடைய  தேவைக்கு என் வீட்டாரை  அழைக்கவில்லை யென்றால் நான் அவளுக்கு கணவனாக இருந்து என்ன பயன் ? என்று வாதம் செய்து  விவாகரத்து செய்யவும் தயார் என்று பிடிவாதம் பிடிக்க    காசு சிரித்தது.

பஞ்சாயத்தார்கள்  ஒருவழியாக பேசி அவரை சமாதானப்படுத்தி  புகுந்தவீட்டிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

அவர் கொண்டு வந்த  பெட்டி காசு சிரித்தது.

இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்த வீடு சென்று பெட்டிகளை எடுந்துவந்து புகுந்த  வீட்டில் வைத்தார்.
அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை   முகம் சரியில்லை.

பெட்டிகளை  இறக்கி வைத்து டீ குடித்தார். ஏதோ பலகாரம் சாப்பிட்டார்.

அய்யோ   வலிக்குதே…. சாய்ந்தார்... சாய்ந்தே   விட்டார்.

காசு சிரித்தது.

Wednesday, August 25, 2010

அத்தனையும் பணமா?

நாலு மடிப்பாய்  வெள்ளை  சிகப்பு தாள் ஒன்று மடித்து  கிடந்தது.   என்ன அது என்ற வினாவுடனே கீழே குனிந்து அதை எடுத்தான்.

எடுத்தவுடனே   முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யை மறைக்கமுடியாது தடுமாறினான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  பையில் தினித்தவாறு நடந்தான்.

அப்பா…… இன்னய செலவுக்கு ஆண்டவன் கொடுத்துட்டுடான். நினைத்தவாறு மேற்கொண்டு முன்னேறினான்   ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து  கண்களால்  அங்குல அங்குலமாய்  மிகக் கவனமாக    தேடியப்படி யே நடந்தான் இன்னும் ஏதாவது   பணம்  கிடைக்குமா  என்ற தேடுதலுடன் நடந் தான் .

நடக்கும் போதே கற்பனை  வேறு ..இந்த  ஐம்பதுக்கு பதிலா  ஆயிரம் பத்தாயிரன்னு கிடைக்க கூடாதா இறைவா.

நடந்தான்….

முகம் தெரிந்தவர்களை கூட  அவன் கண்டுகொள்ளவில்லை   கண்கள் தரைப்பார்க்க  கிடக்கும்  வண்ண  காகிதங்கள்  அத்தனையும் பணமாக இருக்க மா  என்ற  எதிர்பார்ப்பில்    ஒவ்வொரு  காகிதத்தின் அருகில்   நின்று உற்றுபார்த்தவாறு நடந்தான்.

அவனுடைய  தேவையா  அல்லது அவனுடைய  ஆசையாக இருக்கலாம். அந்த   நிமிடம் முதல்  அவனுடைய  நடவடிக்கைகள்  மாறுபட்டு  இயல்பை தொலைத்த முகமாய்  நடந்தான்.


Saturday, September 19, 2009

தான் வாழ காசு தேவை



வாழ்க்கைக்கு காசு தேவை . காசுக்கான போராட்டத்தில் அவன் அவனையே இழந்தான். சமுதாயத்தில் வாழ்க்கையை வசதிகளோடு தன்னிடம் காசு இருந்தும் காசு சேர்த்து கொண்டே இருப்பவர்கள் உண்டு.

தான் வாழ தன்னை உயிர்ப்பித்து கொள்ள வே காசு அவசியமானது. தனது முன்னோர்களால் ஒன்றும் ஆகாதபட்சத்தில் தன்னை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள காசு தேவை. அதைப் பெற்று தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல.

தன்னையே இழந்து நிறைய வேதனைப்பட்டு நிறைய உழைத்து தான் ஆக வேண்டும். அதற்கிடையே வாழ்க்கையில் ஏற்படும் அவமானங்களையும் அவமதிப்புகளையு ம் தன் உணர்வு எந்த மனிதானலும் ஏற்று கொள்வது மிகக்கடினமே. ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும். மனதுக்குள்ளே அழ வேண்டியது தான்.

அடிக்கடி விரக்தியின் எல்லைகளை தொட்டு விட்டு திரும்ப இருப்பவனை பார்த்து பார்த்து இருக்கும் நிலைமையும் கொடுத்துகொண்டு அவன் இன்னமும் காசுக்காய் அலைந்தப்படி..


Saturday, July 04, 2009

உங்களுக்கு என்ன காரணம்?

அவன் சம்பாதிக்க ஓடி கிட்டே இருப்பான். என்ன எல்லாருக்கும் ஒரே விதமா வாழ்க்கை அமையறது இல்ல அது போல இவனுக்கு அமைஞ்ச வாழ்க்க அந்த மாதிரி ஓடுவான் ஓடுவான் ஓடி கிட்டே இருக்கிறான்.

இன்னொருத்தர் இருக்கார் அவர் வாய் தொறந்து பேசுனாரு நீங்க காசு எடுத்துட வேண்டியதான் உங்க பாக்கெட்லேந்து.. அட ..ஏங்க இப்படின்னு கேட்டா..நீ வேற..
நான் அவசரத்துக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் கிட்ட காசு கேட்டேன் அவன் யாரோ மாதிரி பேசுறான்.

நடுத்தர குடும்பம் அந்த பையன் வயசுல ஓடி சம்பாதிக்கல எப்படியோ குடும்பத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணிவக்க பொண்ணு போட்டு வந்த நகை ஆறு மாதம் ஜேரா
ஓடிச்சி அப்புறம் பாக்கணும் இவன் சம்பாதிக்கணும்
சம்பாதிக்கணும் எல்லோருரிடம் ஐடியா கேக்கிறான் என்ன செய்ய..

பெரிய குடும்பம் வருமானம் பத்தல வயசு ஆர்வம் ஆசை எல்லாம் இருக்கும் அத்தனையும் விட்டாதான் நாள காலை அடுப்பு எரியும். அவனுக்குள்ள வாய்ப்பு எங்கிருந்தாலும் ஓடுவான்.

அத வாங்கி கொடுடா ..நான் வாங்கி தர்றேன் நீ எவ்வளோ கமிசன் தர்ற சொல்லு ..பத்து தர்றேன்..பத்தாது ..ஏதாச்சும் சேத்து போட்டு கொடு முடிச்சிடுறேன். எனக்கு தேவை கமிசன் வேல கச்சிதமா முடியும். நான் சம்பாதிச்ச தான் நாலு பய மதிக்கிறான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் ஓடி சம்பாதிக்க.. ஆமா உங்களுக்கு என்ன காரணம்?

LinkWithin

Related Posts with Thumbnails