Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Thursday, June 16, 2011

கோபத்துக்கு கோபம்


கோபத்துக்கு கோபம் என்றால் என்னதான் செய்வது? யாரோ ஒருவர் விட்டுகொடுப்பதில் சச்சரவுகளை  கடந்துவிடும் நிலைமை.


பலம் உள்ளவர்கள் பலவீனமானவர்களின் பலவீனம் அறிந்து விட்டுகொடுத்தல் பெருதன்மை.

பலவீனமானவர்கள் பலம் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் சச்சரவுகளில் இருந்து காப்பாற்றும்.   தன்னால் ஏற்றுகொள்ளமுடியாத நேரத்தில் அந்த  செயலையோ    ல்லது அ  ந்த இடத்தையோ தவிர்த்தல் நலம். நமக்கான காலங்களின் திசைகள் திரும்பவும்  வரையில் அல்லது நாம் பலம் பெறும் வரையில் காத்திருத்தல் மிகஅவசியம். அதுவரையில் நிறைய  கசப்புகளை   நாம் சந்திக்கவேண்டிவரும்.

பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக பயன்படுத்த தொடங்கினால்   எப்பொழுதாவது கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற   கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.

எடுத்துகாட்டாக தன்பிள்ளைகளின் தவறுகளை  பொறுத்து கொண்டேவரும் பெற்றோ ர்கள் என்றைக்காவது ஒரு நாள் கோபம் கொள்வது.

அதுவும் தவிர்க்க முடியா  உறவுகளில் கோபம் கொள்ளாமல்இருக்கமுடியாது.

ஏன்? எதற்கு? என்றுஇரு வினாக்களை உள்நோக்கி திருப்பினாலே  கோபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து களைந்துவிடலாம்.

எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில் தான் கோபம் அடிக்கடி வரும் போல….


Thursday, February 03, 2011

அவர்



தலையில் முண்டாசு காக்கிகால்சட்டை இடுப்பில் பச்சை பெல்ட் மேல் வெள்ளை பனியன் எவரிடமும்  அதிகம் பேசாதுவேகமான  நடை   முழுதும் நரைத்த தலைமுடி தாடி மீசை வெளுத்த மார்ப்புமுடிகள் அவரை சுலபமாய் அடையாளப்படுத்தும் .

வயதுக்கான உடலோ  மனமோ  கொ ஞ் சமும் இ ல்லாதவர் நரைத்த முடியை வைத்து  அ னுமானித்தால் உண்டு.

உடலை  பாதிக்கின்ற எந்தவிதமான  பழக்கவழக்கங்களுக்கும் உட்படாத   இன்றள வும் இளை ஞ னின் சுறுசுறுப்பாய் அ வர்.

இருவர் பெண்பிள்ளை கள் மூவர் ஆ ண்பிள்ளைகள். தன்  ஆ ண்பிள்ளைகளுக்கு தனி தனியாக  வீடு  பெண்பிள்ளை கள் இருவரையும் நல்லமுறையில் திருமண  ம் செய்வித்தார்.

தான் பார்த்த அ ரசாங்க வேலையில்   ஓய்வு பெற்றவுடன் வ ந்த பண த்தில் பிள்ளை களுக்கு கொடுத்தார். பிள்ளைகள்  சிலர் வாங்கி கொள்ள  சிலர் மறுக்க  ..மறுத்த பிள்ளை  களை   பற்றி சிறிதும் கவலை படவில்லை .

உடல்தகுதி மனமும் இளமை  அவரில் தோன்றும் எண்ணங்களுக்கு பதிலாய்  தன்னை   கடுமை யான  விரதங்களுக்கு உட்படுத்தி  மாதம் ஒரு கோவில் போய்விடுவார்.

தன்னள வில் தான் ராஜாவாய் இருந்து தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்து மனிதர்களில் முன்மாதிரியாய் இருப்பவ ர்.

அவர் தான் தோட்டி என்று பொதுசனங்களால் அ ழைக்கப்படும் குப்புசாமி.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்யும்  துப்புரவு பணியாளர் தொம்பன் இனத்தை சார்ந்தவர்.

Wednesday, January 12, 2011

ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்



முகம் கறுத்து போ யிருந்தது. கண்களின் வெண்மை  முகத்தின் கருமையை கூட்டியது.

தூர வருகையில் உருவத்தை அனுமானிக்க முடியாது மன தில் பதியவைத்த  உருவம்   சிதைந்திருக்க அ ருகே வர  அ வனா …இவன்?
என்று  தோ ன்றிய  வினா வினை   புறந்தள்ள  முடிய வில்லை.

அ ப்பா அரசாங்க உத்யோக ம் நல்ல வள ர்ப்பு நல்லகுடும்ப சூழல்.
பையனை   பொறியிற் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க படித்தான்.

பாக்கெட் மணியும் அப்படி இப்படி  வீட்டில் வாங்கிய பணமும் குடியும் புகை யும் ஆயின . பால ப்பருவத்தை கடக்கும் குழந்தையைப் போ ல்  தத்தக்கா…பித்தக்கா… என்று நடந்து  படிப்பு முடித்தான்.

காடாறு மாதம் நாடாறு  மாதமாய்  தான் அவன் வாழ்க்கை . வெளியூர் ஆ றுமாதம் என்றால் உள்ளுரில் ஆ றுமாதம். செலவழிக்க குறை வில்லா த  குடும்பம் ஆகையால் செலவழிக்க கொ டுத்தார்கள்.

கடைசியாய் சொ ந்தத்தின்  ஆ தரவில்  மாதம்  ரூ 32000  சம்பளத்தில் வேலை யில் சேர   தினமும் ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்  கொ சுறு அ யிட்டம் சேர்த்து மாதம் இதற்கு மட்டுமே  ரூ 14000 செலவழித்தான்.

திருமண  ம் ஆ னது சென்னை யில் தனிக்குடித்தன காரனாய் மாற  வரதட்சனையாய் கார் . அதற்குள் தகுதி   தானா ய் வந்து ஒட்டி கொ ள்ள    வீட்டு நிர்வாகம் இவன் செலவு  தட்டு தடுமாறி  ஓடியது அ ப்பாவின் உதவியால்..

வாழ்க்கை  தான் எப்படி வேண்டுமானாலும் மாறுமே அதுபோல் எதிர்பாராது அப்பா  நோ ய்பட  தகுதியாய் வாழ்ந்த குடும்பம் தகுதியாய் வாழவே  கஷ்டப்பட்டது.

இந்த சம்பள ம் போதாது  இருந்த வேலை யை  விட்டு வேறுவேலை  தேட தேடிய  இடமெல்லாம் முன்பு வாங்கிய சம்பளத்தை  விட குறை வாய் சொல்ல  சுவரில் அடித்த பந்தாய் பழைய முகவரியின் கதவை  தட்டினான் .  இவன் விட்ட பணியை  வேறு ஆள் செவ்வனே  செய்ய    வேலை  தேடுகிறான்.

அடிப்படை   தேவைகள்   மனை வியின் நகையால் ஈடுசெய்யப்பட  வேலை தேடுகிறான் .  ஆ னால் வேலை ....

Saturday, January 08, 2011

நன்கொடையும் பிச்சையும்



கோவில் புண  ரமைக்கும் பணி அந்த கிராமத்தில் தொட ங்கியது. பெரிய தொகை  செலவாகும் நிகழ்வு அது. நிதி வேண்டி கை நீட்டப்பட்டது.  தனிமனிதன் கை நீட்டினால் அது பிச்சை   குழு  கை   நீட்டினால் அது நன்கொ டை.

அரசாங்க அ திகாரி யும் அலுவல ர்களும் கை நீட்டுவது அது கௌ  ரவ பிச்சை.
அதாங்க லஞ்சம். …

பொ துமக்கள் தாராள மாய் நிதி வழங்கும் பொ ருட்டு கவர்ச்சி அறிவிப்பு ஒ ன்றும் வெளியிடப்பட்டது. ரூ 10000   க்கு  மேல் நன்கொ டையாக தருபவர்களின் பெயர்கள் கல்வெட்டில்  பெய ர் பொ றிக்கப்படும் என்பது தான் அ றிவிப்பு.

ஊ  ரில் வாழும்பெரும் பண  க்காரர்கள் பிழை ப்புக்காய் வெளிநாடு சென்றவர்கள் தங்களால் இயன்றவரை   கொ டுத்து தங்களுடைய  பெயர்கள் கல்வெட்டில்வர நிச்சயப்படுத்தி கொ  ண்டார்கள்.

இ ப்படியாக  நிதி கொ டுத்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்குஅருகில் வாழும் சுற்றத்தார்களுடைய   குழந்தைகளின் கல்வி   பொ  ருளாதார இடர்பாட்டினால் கேள்வியாய் நிற்கும்.   ஏழ்மையினால்  மட்டுமே சமுதாயத்தில் விலை   போ  காத முதிர்கன்னிகள் நிறை யவே இருப்பார்கள்.

இதை விடவும் கொ டுமையாக  தன்னை   பெற்றவர்களுக்கும்   தன்னுடன் உடன்பிறந்த வர்களுக்கும் பயன்தராத  இந்தபணம் இது போ ன்ற கோ வில் காரியங்களுக்கு பயன்தரும்

 "கவிக்கோ' அப்துல் ரகுமான் அ வ ர்களின் கவிதை வரிகள் மிகவும்  சிந்தனை க்குரியது.


சகோதரா
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்
நீ நூல் பல கற்றபோது
நூலால் உயரும் பட்டம்போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்து கொண்டேயிருக்கிறாய்
மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கிவிட்டது
பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றுடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா?

Sunday, December 26, 2010

தெருவோர மந்திரம்

எல்லோ  ருடைய  கண்களும் தரை நோக்கியே  குவிந்திருந்தன. உடுக்கை    சத்தம் வந்து கொண்டிருக்க தெரு கூத்துதான் நடத்தி கொண் டிருக்கி றார் என்று அ வ்விடம் செல்ல    பாம்பாட்டி   ஒருவன் பாம்புகளை   வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான்.

பேச்சின்      வீச்சில் ஈர்க்கப்பட்டு    கூட்டம் கூட  ஆ ரம்பிக்க பாம்புகளை   பெட்டி கட்டி  விட்டு  தாயத்து மத்திரம் என்று பெட்டிகடைப்பரப்ப அங்கிருந்து  கம்பி   நீட்டினோ  ம் நானும் என் நண்பரும் அப்போது க்ளிக்கியது.

கடைதிறக்கப்படுகிறது

பாம்பு வித்தை

தப்பிக்க நினைக்கும் பாம்பு

எங்க போற....

இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான்

கோபத்தில் சீறல்


Friday, December 24, 2010

மனிதர்கள் தான். விலங்குகள் என்று சொல்லி


மாற்றத்துடன் தொடங்கிய காலை  நீலவானம் ஆரஞ்சு நிறம்பூசியிருக்க அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள் கோடைகாலங்களில் இந்த நிகழ்வு இயல்பு.

குளிர்    வீசும் காலையை  இளம்வெயிலில் சூடேற்றும் மனித உடல்கள்  சொந்தகதைப்பேசி ,    ர் கதைப்பேசி தன் நியாயங்களை  எடுத்துரைக்கும் உரையாடல் களம் என்னவோ   அந்த அரசமரத்தடிதான்.

அன்று  காலை     நீல வானம் முழுதும் வெள்ளைமேகங்கள் சூரியகதிர்களை  சிறைவைக்க  அரசமரத்தடி ஆ  ராவாரம் இல்லாமல் இருந்தது.

குளிர்விலகாத அந்த  காலைப்பொழுதில் அரசமரத்தின்காற்றுவீச்சில் உண்டாகும் குளிரில் சிக்கி கொள்ள விரும்பாத மனித உடல்கள் இன்னமும்  வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை மாறிகள்  பகுத்தறிவு விலங்குகள்.

இல்லை, இல்லை  பகுத்தறிவு மனிதர்கள் தான்.  விலங்குகள் என்று சொல்லி விலங்குகளை   அசிங்கப்படுத்த விருப்பமில்லை.

அரசமரம் நின்று கொண்டிருந்தது. எட்டுதிக்கிலும் தன் கிளைகளை   ப்பரப்பி  நடுவே  தன்  உடலை   கீழ்இறக்கி  வேர்களால்   நிலத்தில்  தன் பிணை   ப்பை பலப்படுத்தி நின்று கொண் டிருக்க  தினமும் கிளை களில்வழக்கமாய் வந்தமரும்  பறவைகள் வந்தமர்ந்து அரசமரத்துடன் உறவை ப் வளர்த்துகொண்டிருக்கும் இந்நிகழ்வு காலம் தோறும் நடக்கும் நிகழ்வு.

அரசமரத்தின் ஓரமாய்    மனிதர்கள் உருவாக்கிய  கோவிலை   புண ரமைத்து திருப்பணிகள்  நடைப்பெற   கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின்    மீது புனித நீ ர் ஊ  ற்றுவார்கள்.  புனித நீர் ஊற்றுவதை  மனிதர்கள் கண்ணை     மறைக்குமாம்.

அரசமரத்தின் கைகளை  வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தார்கள்  எங்கேயோ    வலித்தது.

Sunday, December 05, 2010

காலத்தின் சக்கைகள்



காலசக்கரத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது தன்னை விடுவித்து கொண்டவர்கள். செயல்களின் போக்கு தெரியும். காலத்தின் சக்கைகள் அவர்கள். பின்வருபவர்களின் வேகஓட்டத்தை நிதானப்படுத்தும் சக்கைகள் அவர்கள்.

தான் விதைத்ததை அறுவடை செய்து பலன் அனுபவிப்பவர்கள்.
நல்லதோ கெட்டதோ  அவர்களின்மனகுமுறல்கள் அவர்கடகுள்ளே உணர்ந்து அழிந்துபோனவர்களும் உண்டு
மனகுமுறல்களை   வெளியிட்டு ஆதரவு தேடியவர்களும் உண்டு.

பின்வருபவர்கள் பின்பற்ற நடந்தவர்களும் உண்டு .பின்வருபவர்கள் முகம் சுழிக்க செயல்பட்டவர்களும் உண்டு.

சங்கீதா     சீனிவாசன் கவிதை   ஒன்று

        முதியோர் இல்லத்தில்
        ஒரு தாயின் கண்ணீர்
       
        மகனே
        நீ இருக்க ஒரு
        கருவறை இருந்தது
        என்வயிற்றில்!
        
        ஆனால்
        நானிருக்க ஒரு
        இருட்டறை  கூடவா
        இல்லை
        உனது  வீட்டில்!           

Tuesday, November 23, 2010

குடி மறப்போம் குடி காப்போம்.

எங்கள் ஊருக்கு குடிவந்து பத்துவருடங்கள் இருக்கும். வெள்ளை வெளேரென்ற  தலைமுடியுடன் நல்ல திடகாத்திரமான உடல்வாகு.  எங்கள் ஊரின் உமர் முக்தார் என்று செல்லமாககூப்பிடுவார்கள். கிட்ட தட்ட எண்பதை நெருங்கி கொண்டிருந்தார்.  சோகங்களை  வெளியில் காட்டமாட்டார். எல்லோரிடமும் ஜாலியாக வம்பளத்தப்படி இருப்பார். பழையப் பாடல்கள் அத்துப்படி குரல் இனிமை.



இரு பையன்கள் மூத்தது அரசாங்க கூலி  இளையது சுமைதூக்கும் கூலி.

இளையது அன்றைய கூலியில் குடிப்பது போக  மீதம் தான் வீட்டிற்க்கு.  இளையதுக்கு இருபையன்கள்  கஷ்டம் தான்.

வேலை பார்த்து குடித்தது போக மூன்று வேலையும் குடிப்பதே வேலை ஆகி விட அப்பா (உமர்முக்தார்)கொடுத்த
நிலங்களும் அடமானம் ஆகிவிட்டது.

குடிப்பது குறைந்த பாடில்லை. 

என்ன கஷ்டமோ   தானாகவே பேசி  ரொம்பவும் குழம்பி கடைசியில் வயலுக்கு அடிக்கும்   பூச்சி மருந்தை வாங்கி குடித்து  நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர்துறந்தார்.

இனி அவரை நம்பியவர்களின் நிலைமை. எதிர்கால சந்ததியினர் நிலைமை ?

எனக்கு அவன் கொள்ளி போடுவான்னு நினைச்சேன் அவனுக்கு கொள்ளி போட்டாச்சு...
என்று தெரிந்தவர்களிடம் அவர்கள் கேட்கிறார்களோ    இல்லையோ    இவராக போய் சொல்லி ஆறுதல் தேடுவது தெரிந்தது.

Friday, November 19, 2010

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

கோடாலியை  வைத்து நெஞ்சை பிளந்து போட்டு விடலாம். ஆனால் பேச்சு…

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

ஆம்..அவர் அப்பா  வைத்துவிட்டு போன கடன் . கடன்காரர்களின் நெருக்குதல்  ஒரு நாள் செத்துப்போனார்.

வாடிக்கையாய்  கடன்காரர்களின் நெருக்குதல்   வீட்டில் பிரச்சனை  ஏற்படகூடா என்று நினைத்த கடைக்குட்டி பையன்.

நான் தர்றேங்க...

தந்தை இறந்தவுடன் குடி மாறி சென்றார்கள்.
பல வருடங்கள் ஆனது.

மூன்று பையன்கள் அதில்  இரு பையன்களிடம் அப்பாவின் கடனை  அடைக்க கூடிய முழு தகுதி இருந்தும்  யார் பட்ட கடனோ  என்கிற பாணி.

அன்று அவர் அப்பாவிடம்  பணம் கொடுத்து ஏமாந்த டீக்கடைக்காரர் பார்த்துவிட …

தண்ணி போட்டிருந்தார்.

யோவ்…என் பணத்த  ஏமாத்திட்டு போயிட்டீங்கிளா..
நீங்க நல்லா இருப்பீங்களா…என்று கேட்க ஆரம்பித்து.

யோவ்..முழுசா அய்யாயிரம் கொடுத்தேன்.

நான் போலீசுக்கு போறேன் சொன்னப்ப   நீ தர்றேன்னு சொன்னில்ல..

நாங்க என்ன வீட்டுல கூட்டி கொடுத்த சம்பாதிச்சும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது…

என்றார் கடைக்குட்டி பையனிடம். தலைகுனிந்த வாறே  நின்றிருந்தார் அந்த பையன்.

அவர் பக்கத்து நின்றிருந்த நண்பர்களாலும் எதுவும் பேச இயலாது நின்றிருக்க.

அவரால் கத்த முடிந்த மட்டும்   கத்தி விட்டு சென்றார்.

அவர் பேச்சு  முள்ளாய் தைத்தது.

Friday, November 12, 2010

காசு சிரித்தது.

பூப்பெய்தினாள் அந்தப்பெண். அவளுடைய அப்பா வெளிநாட்டில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டோடு  மாப்பிள்ளை அவர்.

ஆரம்பகாலங்களில்   காசுக்காய்  பட்ட கஷ்டம் அதிகம். அந்த பெண்  குடும்பம். சகோதரர்களால் நல்லமுன்னேற்றம் ஏற்பட காசு பத்திய கவலை  இல்லாமல் போனது.

காசு தான் உலகம் என்று ஆனது அந்த குடும்பத்தினுடைய பெண்களுக்கு….

சகோதரனின்  நிதிபலத்தால்  புகுந்தகம் செல்லாமல்  பிறந்த ஊரிலியே  வீடு கட்டி கொண்டு தங்கிவிட்டார்கள்.
கணவன்மார்களும்பொண்டாட்டி  சொல் தட்டாது பிறந்தகத்தை விட்டு புகுந்தகம் வந்தார்கள்.

பொண்டாட்டிகளிடம் மதிப்பு கம்மி தான். என்ன செய்வது ? பிரச்சனை இல்லா குடும்ப நிர்வாகத்திற்கு ஆம்பிள்ளை சகித்து போகவேண்டும் என்கிற பாணி அவர்கள்.  கிழித்த கோட்டை தாண்டமாட்டார்கள்.

காசு கண்ணை மறைக்க தன் பெண்ணின் சடங்கு போது  கணவன் வீட்டிற்கோ  கணவருடைய உறவினர் வீட்டுக்கோ சொல்லாமல் சடங்கு செய்தார்கள்.

கணவன் அப்பொழுது வெளிநாட்டில் இருந்தார். கோபம் அடைந்த கணவன் புகுந்த வீட்டிற்கு வராமல் பிறந்த   வீட்டிற்கு சென்று பெட்டியை இறக்கி அங்கேயே தங்கிவிட்டார்.

காசு போகுதே காசு.

பொண்டாட்டி கூப்பிட்டாள்  பதில் இல்லை.  சகோதரர்கள் முயற்சிக்க பலன் இல்லை.

அந்த ஊர் பெரியமனிதர்களை வைத்து பேச  அவர்களிடமும் பிடிவாதமாய் என் பெண்ணுடைய  தேவைக்கு என் வீட்டாரை  அழைக்கவில்லை யென்றால் நான் அவளுக்கு கணவனாக இருந்து என்ன பயன் ? என்று வாதம் செய்து  விவாகரத்து செய்யவும் தயார் என்று பிடிவாதம் பிடிக்க    காசு சிரித்தது.

பஞ்சாயத்தார்கள்  ஒருவழியாக பேசி அவரை சமாதானப்படுத்தி  புகுந்தவீட்டிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

அவர் கொண்டு வந்த  பெட்டி காசு சிரித்தது.

இரண்டு நாட்கள் கழித்து தன்னுடைய பிறந்த வீடு சென்று பெட்டிகளை எடுந்துவந்து புகுந்த  வீட்டில் வைத்தார்.
அங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை   முகம் சரியில்லை.

பெட்டிகளை  இறக்கி வைத்து டீ குடித்தார். ஏதோ பலகாரம் சாப்பிட்டார்.

அய்யோ   வலிக்குதே…. சாய்ந்தார்... சாய்ந்தே   விட்டார்.

காசு சிரித்தது.

Sunday, October 17, 2010

மணக்கால் ஜோஸ்யன்.

வெற்றிலை காவி ஏறியபல் , ஒட்டிய குழி விழுந்த முகம்   கையில் போட்டிருந்த கடிகாரம் எப்பொழுது வேண்டுமானாலும்   கீழே விழுந்து விடலாம் அவருடைய  கை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கத்தால் தப்பித்து கொண்டிருந்து.

கஷ்டங்கள் மனிதனை  சித்ரவதைக்கு உள்ளாக்க  அவன் நாடும் அடுத்த வழிகோவில் ,  ஜாதகம், மது  .

என்னுடைய கஷ்டங்களுக்கு என்ன காரணம்   நேரம் சரியாக  இல்லை போலும் ஜாதகத்தை பார்ப்போம் என்று  நண்பரிடம் விசாரிக்கையில்  அவர் அறிமுகம் செய்து வைத்தவர் தான்
மணக்கால் ஜோஸ்யன்.

வாங்க தம்பி... தம்பி சொன்னாரு..

ஒரு இருபது ரூபா இருக்கமா...கட்டிங் போட்டா கரெக்டா சொல்வேன் தம்பி.

தப்பா நெனைக்கவேணாம். நீங்க கொடுக்கறப்ப கொறைச்சுக்கலாம்.

நாய் வேசம் கட்டியாச்சு குலைச்சுதான் ஆகனும்.

பையிலிருந்து இருபது ரூபாயை  எடுத்து நீட்ட..

அஞ்சு நிமிசம் தம்பி..இதோ வந்துடுறேன்.

இவரு  என்ன கஷ்டத்த கொண்டுவரப்போறாரு தெரியலை யே   என்று நினைத்தவாறு அமர்ந்திருக்க..

கனைப்புடன் உள் நுழைந்தார்.

சுயப்புராணம் ஆரம்பித்தது.

முடியும் தருவாயில் தம்பி நான் பி.ஏ. ஆஙகிலம்..

 நான் உங்களுக்கு சொல்லறது ஆங்கிலமா...தமிழா...

தமிழ்ல  சொல்லுங்க...

சொல்ல ஆரம்பித்தார் ..என்ன புரியுதா….

நான் சொல்லிறேன் அப்புறம் கேளுங்க….

ஏதோ  சொன்னார் .ஏதோ  புரிந்து கொண்டேன்.

அந்த  இருபது கழிச்சி பாக்கி கொடுங்க தம்பி.

கணக்குல கரெக்டா இருக்குனும் தம்பி.

பத்து  நாட்கள் கழித்து வரும் வழியில்  எதிர்பாராமல் சந்திக்க…

தம்பி பரிகாரம் செய்ய சொன்னேன் செஞ் சீங்களா..

இல்லையே…

நான் சொன்னமாதிரி செய்ங்க.. ஒரு இருபது இருக்குமா…. என்றார்.

ஒரு வாரம் கழித்தது.

எதிர்பராத சந்திப்பில் ரொம்பவும் பழக்கப்பட்டவராய்
தம்பி நில்லுங்க என்றார்.

சனிபெயர்ச்சி ...பாத்துங்க  என்றார்.

மனசு சலனமுற்றது. என்ன ஆவும்.

சொல்ல ஆரம்பித்தவுடன் என் தலை  சுத்தியது.

எப்பா ஆள வுடுடா சாமி...அன்றைய கட்டிங்க்கு இருபது செட்டில் செய்து விட்டு நகர...

அவர் சொன்னமாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

இன்றும் சுற்றி கொண்டிருக்கிறான் அந்த ஆள். பார்த்தும் பார்க்காமல் தவிர்த்து  நான்.

Wednesday, September 22, 2010

இடிந்த வீடு

காலையில்   கண்விழித்தவுடன் சிறுநீர்  கழிக்க  ஒரு வீட்டிற்குரிய  அங்கலட்சணங்களை  இழந்து கொண்டிருந்த கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கினான்.

எழுந்து  நின்று சோம்பல் முறிக்கையில் கட்டிடத்தின் நிலைகுத்திய  கண்களின்  வழியே அந்த   வீட்டில்  வாழ்ந்தவர்களின் நினைவில்  மூழ்கிபோனான்.

கிராமத்தினுடைய    சிவன் கோவில் அர்ச்சகருக்காக  ஒதுக்கப்பட்ட    வீடு  அது.  ஐந்து பையன்கள்  ஒரு பெண்   இவர்கள் இருவரையும் சேர்த்து எட்டு பேர்.

கோவிலில் கொடுக்கும்  சம்பளமாய் நெல்  அவர்களுடைய பசியை  போக்கியும் போக்காமலும். செவ்வாய் வெள்ளியில்
கிராம காளிகோவில் தட்டில் விழும் ஒரு ரூபாய் ஐம்பது காசு நாணாயங்கள் தான் அர்ச்சகருடைய அதிகப்படியான வருமானமாக இருந்தது.


அவ்வப்போது  பெரியகோவிலில்  நாள் நட்சத்திரங்களில் கிராம மிராசுகள் செய்யும் அர்ச்சனைக்காக  அவர்கள்  பத்து  ரூபாயும் ஐந்து ரூபாயும் உபரி சம்பளம்.

இதில் ஆறு பிள்ளைகளின் தேவை  நிறைவேறி  படிக்க வைக்கவேண்டும்.   அந்த       கீற்றின் வீட்டின் வழியே வீட்டினுடைய உட்புறம் மழையோ    வெயிலோ     பஞ்சமில்லாமல் மழை பெய்யும் வெயில் அடிக்கும்.
பிள்ளைகளுடைய  கிளிசல் இல்லா உடைகள்  என்பது அபூர்வம்.

எவ்வளோ  கஷ்டங்களுக்கிடையேயும் அந்த அர்ச்சகர் கோவிலுக்குரிய கடமைகள்  அர்ச்சனைகள்  மிகவும் கர்ம சிரத்தையுடன் செய்து முடித்து விடுவார்.

எப்படியோ பிள்ளைகளையும் வளர்த்தார். பெரிய பிள்ளை   தட்டு தடுமாறி  சென்னைக்கு போய் கோவில் ஒன்றில்  அர்ச்சகராக  அந்த வீட்டின் நிலைமை மாறத் தொடங்கியது.

இன்று எல்லோரும் சென்னை க்கு இடம் மாறி மிகவும் நல்லநிலைமையில் உள்ளார்கள். வருடத்திற்கு ஒரு தடவை  வந்து கோவிலுக்கு அர்ச்சனை  செய்து விட்டு போவார்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில்  இருந்தாலும்  கஷ்டங்களுக்கிடையே இங்கு இருந்த நிம்மதி அங்கு இல்லை என்பது  அவர்களுடைய கருத்தான       இருந்தது.


என்னப்பா ஓரே இடத்துல நின்னுகிட்டு காலையிலே  யோசனை  ...  குரல்  கேட்டு அவனுடைய நினைவுகள் கலைந்தது.

Monday, September 20, 2010

சகோதரன்.

மருத்துவரிடம் செல்லவேண்டும்.  கடை  வாடகை   வீட்டு வாடகை  பாக்கி தரவேண்டும்.  வீட்டுல  அரிசி வேற தீரப்போவுது. மளிகை  சாமான்   வேற ஒரு லிஸ்ட் போட்டு வைக்சுருக்கா என் பொண்டாட்டி.

இன்சூரன்ஸ் கட்டியாகனும் வண்டி இன்சூரன்ஸ் முடிஞ்சு போச்சு வண்டி பேக் வீல் டயர் எப்ப  வெடிக்கபோவுதுன்னு தெரியல…

புள்ளக்கு பால்டின் வாங்கியாவுனும்   நெற்றியில்  நகங்களால் கீறியப்படி  ஆழ்ந்து   யோசித்து கொண்டிருந்தான்.

அவனால் முடிந்தவரை போராடி சம்பாதித்தாலும் பற்றாகுறையே வாழ்வாக இருந்தது.  தன் காலி்ல் நிற்கவும் அப்பாவின் சம்பாத்தியம்  அண்ணன்களுக்கு உதவிய அளவுக்கு இவனுக்கு உதவில்லை.

குடும்பத்தின் கடைசிபிள்ளையாக மாட்டியதால் மூத்தவர்கள் தேவை முடிந்து இவன் முறை  வருவதற்குள்  அப்பார் மேல் உலகம்  போய்விட தன்னுடைய அம்மாவை  கவனிக்கும் பொறுப்பும் இவன் தலையில் விழ    சொந்தவளர்ச்சிக்கு  தன்னை உட்படுத்தி கொள்ளாமல் இருந்தான்.

அப்பாருடைய   இறுதி சடங்கு தேவைகள்  முடிந்தவுடன்  தான் உண்டு தன் குடும்பம் என ஒதுங்க இவன்  இவன் அம்மாவும் தனியே...

சில வருடங்கள் அம்மாவும்   இவனை  தனியே விட்டு இறந்து விட  சகோதரிகளால் இவனுக்கு திருமணம் செய்விக்கபட்டது. அண்ணன்கள்  திருமணத்தில் கலந்து க
ொண்டார்கள்.


இவனால் முடிந்தவரை கஷ்டப்பட்டு உழைத்தும் பற்றாகுறை  வாழ்வு தான் நிச்சயம். கொடுத்து உதவ கூட ஆள்கள் கிடையாது.

யோசனையான முகம் நிரந்தரமானது.

யோசனை யாய் தன்னுடைய  கடையில் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய  கைப்பேசி ஒலிக்க...

 உம் சொல்லுகண்ணா   .....என்றான்.

என்னய்யா.. என்று விசாரிக்க

அண்ணன் பேசுனாரு...

அவரோட குடும்பத்தோடு கோவிலுக்கு போறாராம்  ஏ.சி.வசதி உள்ள சுமோ   ஒன்று வேண்டுமாம்  டிராவல்ஸ்ல   விசாரிக்க சொல்லுறார் என்றான்.

Thursday, September 16, 2010

குல தெய்வ பூசை



நாளைக்கு குலதெய்வத்துக்கு  கடா வெட்டி    பூச போடுறாங்க கோயிலுக்கு வந்துருப்பா..

ஆகா …இன்னும் ரெண்டு நாள்ல புரட்டாசி வரப்போவுது கிடைக்கிற வாய்ப்ப பயன்படுத்தி கிட்டாதான். இன்னும்  ஒரு மாசத்துக்கு ஒன்னும் சாப்பிட முடியாது நாளைக்கு போய்  சாப்பிட  வேண்டியது தான்  என்று நினைத்தவாறே…

சரி வர்றேண்ண   என்றான்.

மறுநாள்  காலை   சாப்பாட்டு நேரத்துக்கு  போனா  எதாவது நினைத்து கொள்வார்களே  … ஒரு மணி நேரம் முன்னே போய் சேர்ந்தான்.

அவன்போன  சமயம்  பூசை ஆரம்பமாகும் நேரம். தாள வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பித்தது.

கிராம  தேவதைகளுக்கு  உரித்தான    வாத்திய கருவிகள் உருமி மேளம், உடுக்கை ,  மணி சப்தம்  எல்லாம் ஒன்று சேர்ந்து  அந்த இடத்திலுள்ளவர்களை     பூசையில் கட்டி போட்டிருந்தது.

ஆடு வெட்டியவுடன்  சமைப்பதற்காக  சமையல்காரர்கள் முன்னேற்பாட்டில் மசாலா வாசனை   மூக்கை துளைக்க அவன்  புத்தி பேதலித்து  பூசாரியின் பாடலை கவனித்தான்.

நமச்சிவாய  வாழ்க… என்று பாடினார்   பூசாரி.

உள் இருப்பது அம்மன்.

துணுக்குற்று நமக்கு அம்மானா தெரியற தெய்வம் அவருக்கு  சிவனா   தெரியும் போல  நினைத்தவாறு   மீண்டும்  அவர்பாடலை   கவனிக்க…

ஏறு மயில் ஏறி  விளையாடும் முகம் ஒன்று..  என்று ஏற்ற இறக்கங்களுடன்  முருகன் பாடலை   பாட ஆரம்பிக்க…

சத்தியமா  அவனக்கு அம்மனாத்தான் தெரிஞ்சுது.
ஆனா    பூசாரிக்கு..

பலமான   பின்னனி இசையால் இவருடைய  இத்தகைய பாடல்கள்  மத்திரமாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது.

டேய் ..அம்மனுக்கு நேரா  ஆட்ட கட்டாத  வீரன்  சாமி கிட்ட கொண்டு போடா  என்ற சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

Wednesday, September 01, 2010

இக்கரைக்கு அக்கரை



குழப்பங்களுடன் நகரும் வாழ்வு இக்கரைக்கு  அக்கரை பச்சைக்காக அலையும் வாழ்வு வாழ்க்கையின் குறிகோள் இதுவென்று அடைந்தவர் எத்தனை பேர்?

அவன்  சம்பாதிக்கிறான்  இவன்  வீடு கட்டிவிட்டான்  நாள்தோறும் மற்றவர்களை    ஒப்பிட்டு  செல்லும் வாழ்வில் கிடைக்கும் ஒன்றிரண்டு  மகிழ்ச்சிகளை  இழந்து விடும் அவலம்.

எங்கு  புத்தி போயினும்  இல்லாதவை   பற்றியே நினைக்கும் உடும்பு பிடி வாழ்வு. முகமும்  உர்ரென்று…

சமூகத்தின் அவமானங்களை    சந்தித்து  மனம்  கூனி குறுகி நம்முடைய வாழ்விற்காக மற்றவர்களை  குறைகூறும் பண்பு.
வாய்ப்புகள் இன்மையால்  வீணாகும்   திறமை. தேவை   வினை  ஊக்கி  வெந்த   புண்ணில்  ஊசி குத்த பலப்போ்  ஆனால் ஊக்குவிப்பிற்கு….

இதையெல்லாம் தாண்டிதான் வரனும் தன்னம்பிக்கை பேசும். பின்னனியில்   தூக்கி விடும்ஏணிகளுடன்
நிறைய பேரின் பேச்சுதன்னபிக்கை.

ஒவ்வொரு செயலும்   நபரும் வள்ளுவனின்  வாக்கு ப்படி தகுந்த சந்தர்ப்பம்     காலம்  வரும் வரை   செயலின் வெற்றியோ  அல்லது நபரின் வெற்றியோ   பல்வேறு  வலிகளுக்கும் விமர்சனங்களுக்கு  உள்ளாக வேண்டிய ஒன்றே..

அதுவரை இக்கரைக்கு அக்கரை பச்சையே.

Wednesday, August 25, 2010

அத்தனையும் பணமா?

நாலு மடிப்பாய்  வெள்ளை  சிகப்பு தாள் ஒன்று மடித்து  கிடந்தது.   என்ன அது என்ற வினாவுடனே கீழே குனிந்து அதை எடுத்தான்.

எடுத்தவுடனே   முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யை மறைக்கமுடியாது தடுமாறினான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  பையில் தினித்தவாறு நடந்தான்.

அப்பா…… இன்னய செலவுக்கு ஆண்டவன் கொடுத்துட்டுடான். நினைத்தவாறு மேற்கொண்டு முன்னேறினான்   ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து  கண்களால்  அங்குல அங்குலமாய்  மிகக் கவனமாக    தேடியப்படி யே நடந்தான் இன்னும் ஏதாவது   பணம்  கிடைக்குமா  என்ற தேடுதலுடன் நடந் தான் .

நடக்கும் போதே கற்பனை  வேறு ..இந்த  ஐம்பதுக்கு பதிலா  ஆயிரம் பத்தாயிரன்னு கிடைக்க கூடாதா இறைவா.

நடந்தான்….

முகம் தெரிந்தவர்களை கூட  அவன் கண்டுகொள்ளவில்லை   கண்கள் தரைப்பார்க்க  கிடக்கும்  வண்ண  காகிதங்கள்  அத்தனையும் பணமாக இருக்க மா  என்ற  எதிர்பார்ப்பில்    ஒவ்வொரு  காகிதத்தின் அருகில்   நின்று உற்றுபார்த்தவாறு நடந்தான்.

அவனுடைய  தேவையா  அல்லது அவனுடைய  ஆசையாக இருக்கலாம். அந்த   நிமிடம் முதல்  அவனுடைய  நடவடிக்கைகள்  மாறுபட்டு  இயல்பை தொலைத்த முகமாய்  நடந்தான்.


Thursday, August 19, 2010

சாதாரணன்

திட்டமிட்ட செயல்களில்
தொலைந்து போன
நினைவுகள் எல்லாம்
இன்றைய கனவுகளாய்
எதிர்பார்ப்புகளில்
தோற்றுபோனவன்
செய்கை  கடமையாய்
நம்பிக்கையாய்
செயல் தொடங்கி
முடிவுகள் வேதனையாய்
திரும்பவும்
திட்டமிடுதல் பயமாய்
உருண்டோடும் சக்கரமாய்
தோற்றவனின்  வாழ்வு.

Wednesday, August 04, 2010

எந்த வேசி மவனோ ?



ஏன் சார்லஸ் கடைக்கு போவலையா?

இல்லீங்க சாமான் வாங்க வந்தேன்…சைக்கிள வச்சிட்டு சாமான் வாங்கிட்டு வெளில வந்து பாத்தா சைக்கிள காணோம்?

பூட்டு ன சைக்கிள ஒண்ணு  நிக்கது?

எந்த வேசி மவனே ா     எடுத்துட்டு போயிட்டாங்க அதான்  நின்னுகிட்டே  இருக்கேன்.

வாய் முனுகியது. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது.

வைத்த கடைக்கும் மறு கடைக்கும் நடந்தார். கோபம் பொங்க வாய் வார்த்தைகள் அள்ளி வீசி கொண்டிருந்தது.

பூட்டின சைக்கிள் அருகில் நின்று கொண்டு

ராஜா இது உங்க சைக்கிளா...

எங்க இது உங்க சைக்கிளா....

எண்ண    இது உங்க சைக்கிளா...

அருகில் நின்றவர்களிடம் விசாரித்தார். எல்லோரும் இல்லைஎன்று தலையாட்டினார்கள்.

சைக்கிள்  பூட்டியிருந்தது. மாத்தி எடுத்து சென்று விட்டார்கள் போல  பூட்டை உடைத்து எடுக்க வேண்டியது தான் என்று சொல்ல....

அரக்க பரக்க சிறுவன் பல் மருத்துவமனையிலிருந்து ஓடிவந்தான்.

ஏங்க என் சைக்கிள் பூட்ட உடைக்கினும் சொல்றீங்க என்று கேட்டபடியே வந்தான்.

இது உன் சைக்கிளா.... என்றப்படி இன்னும் வேகமாய் திட்ட ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்ய முடியும் நாள் ஒன்றுக்கு ரூ. 120  சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

ஏமாற்றமான முகத்துடன் கோபமாய்   திட்டி கொண்டே சென்றார் எல்லோருடைய பார்வையும் அவர்மேல் குவிந்திருந்ததை தவிர்க்கதான் முடியவில்லை.


Monday, July 26, 2010

சேரிடம் அறிந்து சோ்

பழகி முடித்தவர்களின்  எண்ணங்கள் எப்பொழுதாவது மனதில் உதிக்கும்.  வேலை யின் காரணமாக பிரிந்தவர்கள்
அல்லது தன்னுடைய  நடத்தையின் மூலம் தன்னுடைய பழக்கத்தை  பாதியில் முறித்து கொண்டவர்கள்.

வேலையின் காரணமாகபிரிந்தவர்கள் பற்றிய நினைவுகள் வரும் அவர்களை   பற்றி அறியும் செவி வழி செய்திகளில்
அவர்களுடைய நினைவுகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

தன்னுடைய நடத்தையின் மூலம் பிரிந்தவர்கள் அவர்களோடு பழகியவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணி விடுவார்கள்.  அவர்கள்  பிரிந்ததற்கு  அவர்களால் ஒரு நூறு சதவீத காரணத்தை சரியாய் சொல்லி விடமுடியும்.

நோக்கத்துக்காக மட்டும் பழகுபவர்களை அடையாளம் காண்பது அரிது.  அனுபவம் தான்  மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள செய்யும்.

எல்லோரும் ஒன்று சேர்வது அவர் அவர்களுடைய  சுயநலத்திற்காக இருந்தாலும் எப்பொழுது தனக்குரிய லாபம் கிடைக்கவில்லையோ அப்பொழுதே விலகிவிடும் பண்பு அதுவரையில் நல்லது கெட்டது பேசி  தனக்கான  நல்லத்திற்கு மட்டுமே நைச்சியம் பேசி அழைத்து போகும் பண்பாளர்கள்  இவர்கள்.

இவர்களால் மனவலி மிகும்.

எச்சரிக்கையாய் கையாள வேண்டியவர்களும் இவர்களே.  பேசுவதில் அவர்களுடைய காரியம் இருக்கும். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும்  எதிரொலிக்கும். கொஞ்சம் உற்றுபார்த்தால்  அவர்களைப்பற்றி புரியலாம்.

Saturday, June 12, 2010

வேதனை

அவனுடைய நடுமனது அரித்து என்னமோ செய்தது.  நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் அவனுடைய மனது செல்லவில்லை.

நம்ம வீட்டிலும் எப்பொழுது இம்மாதிரியான திருமணவிழா நடைபெறும்? இன்னும் நடவாமல் இருப்பது எதனால் ஏன் ? என்ற எண்ணமே தலைதூக்கி நிற்க. கண்களில் கண்ணீர் வராத குறைதான் .

அவனால் முடிந்த அவனது பங்களிப்பை தன்வீட்டில் கொடுத்துநிறைவேற்றிவிட்டான்.  அவனது வீடும் விழாவினை சீரும் சிறப்புமாய் நடத்தகாத்திருந்தது.

அவர்களும் பார்க்காத ஜாதகங்கள் இல்லை  நாடாத புரோக்கர்கள் இல்லை. பார்த்தஇடங்கள்ஒன்று , இரண்டு , மூன்று ......என நீண்டு செல்ல அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் நெடிய பயணத்தின் களைப்பு காணப்பட்டது.

நண்பர்கள்  பேசினார்கள் ஏதோ பேசினான் உள்ளுக்குள் இனம்புரியாத குமுறல் நிகழ்ந்தது. நடுத்தரகுடும்பம் ஆடி ஓடி எறும்பாய் ஒன்று சேர்த்து இந்த திருமணத்தை செய்துவிடலாம் என்ற தகுதி வந்தவுடன் தங்களுடைய வீட்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். 


நிகழ்வு வேறாக இருக்க இவனின் உள்வேதனையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. திருமணவிழாவில் பாதியில் வெளி கிளம்பினான். நெருங்கியவர்களுக்கு மட்டும் அர்த்தம் புரிதிருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails