கோபத்துக்கு கோபம் என்றால் என்னதான் செய்வது? யாரோ
ஒருவர் விட்டுகொடுப்பதில் சச்சரவுகளை கடந்துவிடும்
நிலைமை.
பலம் உள்ளவர்கள் பலவீனமானவர்களின் பலவீனம் அறிந்து
விட்டுகொடுத்தல் பெருதன்மை.
பலவீனமானவர்கள் பலம் உள்ளவர்களுக்கு கீழ்படிதல்
சச்சரவுகளில் இருந்து காப்பாற்றும்.
தன்னால் ஏற்றுகொள்ளமுடியாத நேரத்தில் அந்த செயலையோ அ ல்லது அ
ந்த இடத்தையோ தவிர்த்தல் நலம். நமக்கான காலங்களின் திசைகள்
திரும்பவும் வரையில் அல்லது நாம் பலம்
பெறும் வரையில் காத்திருத்தல் மிகஅவசியம். அதுவரையில் நிறைய கசப்புகளை
நாம் சந்திக்கவேண்டிவரும்.
பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக
பயன்படுத்த தொடங்கினால் எப்பொழுதாவது
கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற
கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.
எடுத்துகாட்டாக தன்பிள்ளைகளின் தவறுகளை பொறுத்து கொண்டேவரும் பெற்றோ ர்கள்
என்றைக்காவது ஒரு நாள் கோபம் கொள்வது.
அதுவும் தவிர்க்க முடியா உறவுகளில் கோபம் கொள்ளாமல்இருக்கமுடியாது.
ஏன்? எதற்கு? என்றுஇரு வினாக்களை உள்நோக்கி
திருப்பினாலே கோபத்திற்கான காரணத்தை
ஆராய்ந்து களைந்துவிடலாம்.
எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில்
தான் கோபம் அடிக்கடி வரும் போல….










