Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts
Thursday, October 10, 2013
Friday, May 10, 2013
Thursday, December 27, 2012
Thursday, July 28, 2011
மாற்றம் வேண்டி....
இரண்டுநாள் குற்றாலம் போய் வர
வாய்ப்பு கிடைத்தது. வருடம் முழுவதும்
ஒரே இடம் . மாற்றம் வேண்டி மனது
நினைக்கும் ,சூழல்கள் அமையாவிடில் இரண்டுநாட்கள்
அதே இடம் அதே மனிதர்கள்.
| பொம்மை கடையில்... |
| மலையும் மலைச்சார்ந்த இடமும் |
மனிதர்கள் இல்லா மலையும் மலைச்சார்ந்த இடமும் பார்க்கும் பொழுது எண்ணங்கள்
அவ்வளவு இல்லாத மனதில் உட்கார்ந்த அமைதி.
| பறத்தலில் ஓய்வு |
மழையும் மழைசாரலுமாய் பயணம்.
கொட்டும் அருவி மழைமுகட்டில் தங்கியிருந்த மேகங்கள் மழையில் நனைந்த மரங்களின் பசுமைஅழகாய் தான் இருந்தது.
கொட்டும் அருவியில் தலை நனைத்து உடலும் நனை கையில்சிலிர்த்த உடலும் மனமும்,
முண்டியடித்த கூட்டம்
அருவிக்குள் எனை தள்ள மூச்சு முட்டி
எதிர்மனிதர்களை பலம் கொண்டு தள்ளி கொண்டே வெளியில் வந்துமூச்சை
இயல்பாக்கியப்பொழுது எழுந்த நிம்மதி.
நடைமுறை வாழ்க்கைக்கு தினந்தோறும் கடமைகள் வருடம் முழுவதும் தேவை என்றாலும்
வருடத்தில் சிலநாட்கள் அதையெல்லாம் தவிர்த்து செல்லும் மாற்றம் உடலுக்கும்
உள்ளத்துக்கும் தேவையாகவே ப்பட்டது.
Friday, December 24, 2010
மனிதர்கள் தான். விலங்குகள் என்று சொல்லி
மாற்றத்துடன் தொடங்கிய காலை நீலவானம் ஆரஞ்சு நிறம்பூசியிருக்க அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள் கோடைகாலங்களில் இந்த நிகழ்வு இயல்பு.
குளிர் வீசும் காலையை இளம்வெயிலில் சூடேற்றும் மனித உடல்கள் சொந்தகதைப்பேசி , ஊ ர் கதைப்பேசி தன் நியாயங்களை எடுத்துரைக்கும் உரையாடல் களம் என்னவோ அந்த அரசமரத்தடிதான்.
அன்று காலை நீல வானம் முழுதும் வெள்ளைமேகங்கள் சூரியகதிர்களை சிறைவைக்க அரசமரத்தடி ஆ ராவாரம் இல்லாமல் இருந்தது.
குளிர்விலகாத அந்த காலைப்பொழுதில் அரசமரத்தின்காற்றுவீச்சில் உண்டாகும் குளிரில் சிக்கி கொள்ள விரும்பாத மனித உடல்கள் இன்னமும் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை மாறிகள் பகுத்தறிவு விலங்குகள்.
இல்லை, இல்லை பகுத்தறிவு மனிதர்கள் தான். விலங்குகள் என்று சொல்லி விலங்குகளை அசிங்கப்படுத்த விருப்பமில்லை.
அரசமரம் நின்று கொண்டிருந்தது. எட்டுதிக்கிலும் தன் கிளைகளை ப்பரப்பி நடுவே தன் உடலை கீழ்இறக்கி வேர்களால் நிலத்தில் தன் பிணை ப்பை பலப்படுத்தி நின்று கொண் டிருக்க தினமும் கிளை களில்வழக்கமாய் வந்தமரும் பறவைகள் வந்தமர்ந்து அரசமரத்துடன் உறவை ப் வளர்த்துகொண்டிருக்கும் இந்நிகழ்வு காலம் தோறும் நடக்கும் நிகழ்வு.
அரசமரத்தின் ஓரமாய் மனிதர்கள் உருவாக்கிய கோவிலை புண ரமைத்து திருப்பணிகள் நடைப்பெற கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் மீது புனித நீ ர் ஊ ற்றுவார்கள். புனித நீர் ஊற்றுவதை மனிதர்கள் கண்ணை மறைக்குமாம்.
அரசமரத்தின் கைகளை வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தார்கள் எங்கேயோ வலித்தது.
Monday, October 12, 2009
சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள்

கண்முன் விரிதிருந்த இயற்கையின் நீண்ட பரப்பு மறையும் சூரியன் வயலின் மேற்பரப்பில் பறந்த நூற்றுகணக்கான தட்டான்கள் எதிர் எதிர் திசையில் தன் இருப்பிடம் திரும்பும் காக்கையும் கொக்கும் அங்கும் இங்குமாய் வெள்ளைமேகங்கள் வானத்தில் நகர என் மனது மட்டும் வாழ்க்கை நிகழ்வுகளின் பிடியில்சிக்கி வெளிவர மறுத்தது.
தட்டான்களின் சுதந்திரம் பறவைகளின் சுதந்திரம் என் மனதை சிறிது அசைக்க பார்வைகள் நிலை குத்தி மனது அப்படியே இருக்க இயற்கையோட ஒன்றினைந்தேன். கால அளவு தெரியாமிக சிறிய நேரம் இணைந்து வெளிவந்து நான் மனிதன் அது இயற்கை என்று ஆனேன்.
திரும்பவும் மனிதன் வளர்த்த சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள் சிக்கி கொள்ள பயணமானேன்.
Subscribe to:
Posts (Atom)
















