Showing posts with label முதியவர்கள். Show all posts
Showing posts with label முதியவர்கள். Show all posts

Sunday, December 05, 2010

காலத்தின் சக்கைகள்



காலசக்கரத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது தன்னை விடுவித்து கொண்டவர்கள். செயல்களின் போக்கு தெரியும். காலத்தின் சக்கைகள் அவர்கள். பின்வருபவர்களின் வேகஓட்டத்தை நிதானப்படுத்தும் சக்கைகள் அவர்கள்.

தான் விதைத்ததை அறுவடை செய்து பலன் அனுபவிப்பவர்கள்.
நல்லதோ கெட்டதோ  அவர்களின்மனகுமுறல்கள் அவர்கடகுள்ளே உணர்ந்து அழிந்துபோனவர்களும் உண்டு
மனகுமுறல்களை   வெளியிட்டு ஆதரவு தேடியவர்களும் உண்டு.

பின்வருபவர்கள் பின்பற்ற நடந்தவர்களும் உண்டு .பின்வருபவர்கள் முகம் சுழிக்க செயல்பட்டவர்களும் உண்டு.

சங்கீதா     சீனிவாசன் கவிதை   ஒன்று

        முதியோர் இல்லத்தில்
        ஒரு தாயின் கண்ணீர்
       
        மகனே
        நீ இருக்க ஒரு
        கருவறை இருந்தது
        என்வயிற்றில்!
        
        ஆனால்
        நானிருக்க ஒரு
        இருட்டறை  கூடவா
        இல்லை
        உனது  வீட்டில்!           

LinkWithin

Related Posts with Thumbnails