Showing posts with label ரகசியம். Show all posts
Showing posts with label ரகசியம். Show all posts

Sunday, March 13, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையானது வளரவேண்டிய வகையில் வளரமுடிவதில்லை . ஏனென்றால் பெரியவர்கள் அவனை   ஒடு்க்குகின்றனர். ” பெரியவர்கள்” என்பது உருவமற்ற பொ துப் பண்புப்பெயர். குழந்தையானது சமுதாயத்தில் ஓர் தனியன் . பெரியவ ர்கள் குழந்தையை    மாற்றுகின்றனர் என்னும்போது பெரியவர்கள்  என்பது குழந்தையைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களையே குறிக்கும் .

முதல் பெரியவர் தாய். பிறகு தந்தை. பிறகு ஆ சிரியர் ஆ வர். குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து முன்னேறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொ றுப்பைச் சமூகம் பெரியவர்களுக்குக் கொ டுத்திருக்கிறது.

பெரியவர்கள் என்ன  செய்கினறார்கள்?  தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து நல்வழியில் முன்னேற்ற எவ்வளவோ   முயற்சி செய்கின்றனர். இப்படி முயற்சி செய்யும்போது பெரியசிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்? தாங்கள் தமக்குள்ளே அடைத்து வைத்திருக்கின்ற பல குற்றங்களை த் தாமே அறியாததனால் தான். 


குழந்தையிடம் தற்காலம்   நாம் நடந்துகொ ள்ளும் முறையை விட்டுவிட்டு  வேறுவிதமாக நடந்துகொ ள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல்  ஆகும்.

குழந்தையிடம் கூட நமக்குத் தெரியாதது எவ்வளவோ   இருக்கிறது. அதை நாம் அறியவேண்டும்.  குழந்தயை  உள்ளது உள்ள படி காணமுடியாத ஒருகுறை தன்னுள் இதுவரை இருந்து வருவதை  உணரவேண்டும்.

குழந்தையைப் பொறுத்தமட்டில் பெரியவனாவன் தன்னை  வைத்தே பிறரை மதிப்பவன் ஆ கிவிடுகிறான். குழந்தை  உள்ளத்தைப்  பாதிக்கும்  ஒவ்வொ  ன்றையும் தன்னை  அது  எவ்வாறு பாதிக்கிறதென்றே கவனித்து வருகிறான்.  இந்தக் கொ ள்கையால் தான் குழந்தையை ஓர் வெற்றுப்பொருள் என்று கருதி தான் நல்லதுஎன்று கருதுவதை எல்லாம் குழந்தையிடம் நிறைத்து வைக்கமுயல்கிறான்.

பெரியவர்கள் தான்  நன்மை  தீமைக்கு உரைகல். பெரியவர் குற்றமே   செய்யமுடியாதவர். குழந்தை அவரைப்பார்த்துத் தான் தன்னை நல்லவனாக்கிக்கொ ள்ளவேண்டும் என்ற  இத்தகைய  மனப்பான்மையைக் கொ ள்ளும்போது  நம்மை அறியாமலே நாம் குழந்தையின் தன்மையை   அழித்துவிடுகிறோ ம்.  

Wednesday, March 09, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையின் உள்ளமானது தன்பிறப்பிலிருந்து சூழ்நிலை யின் பல முரண்பாடுகளுக்கு இடையில் வள ர்ந்து வருகிறது.


குழந்தைகளின் சுயேச்சைத் தொழில்களின் மீது பெரியவர்கள் தம்அதிகாரத்தைச் செலுத்திவருகின்றனர். இந்த அடக்குமுறைகளின்  காரணமாக குழந்தையின் சுயேச்சை நடத்தை   தடைபட்டு குழந்தை   உள்ளத்தில் மன நோ ய்க்குரிய வித்துகள் தோ ன்றுகின்றன . 

குழந்தையை ச் சுற்றிலும் உள்ள பெரியவர்களில் குழந்தையினிடம் அதிக ஆதிக்கம் செலுத்த உரிமையுடையவர் தாயார்தான்.

குழந்தையின்  ஞாபகங்கள் . அந்த  ஞாபகங்களில் அடங்கியிருப்பவை  என்ன? மனிதனுக்கும் , தற்காலச்சமூகச் சூழ்நிலை க்கும் ஏற்படும் முரண்களா? இல்லை . குழந்தைக்கும் , தாயாருக்கும் - பொதுவாகக் குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்படும் முரண்கள் என்றே கூறவேண்டும். இந்த முரண்கள் தீரா நோயை  உண்டாக்கலாம். உடல் நோ யாகட்டும்,  மன நோயாகட்டும், மழலை  பிராயத்தில்நடந்த விஷ  யங்களின் முக்கியத்தைப் பொறுத்திருக்கிறது.

குழந்தையின் உள்ளத்தைப் பகுத்தறியக் கூடாது. அதை நாம் கவனிக்க வேண்டும். கூர்ந்து நோக்கவேண்டும். உள த்தன்மை  நோக்கோடு கவனித்து , எவ்வாறு குழந்தையானவன் பெரியவர்களிடத்திலும் சூழ்நிலை யிடத்திலும்  நடந்துகொள்கிறான் ,  என்னென்ன இன்பதுன்பங்களை  அனுபவிக்கிறான்  என்றெல்லாம்  யூகிக்க வேண்டும்.


பருவமடைந்த  மக்கள் வாழ்க்கையின் போக்கு குழந்தையின் உளவாழ்வையே  ஒட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினை யில் பிறப்பிலிருந்து இறப்புவரையுள்ள சகல வாழ்க்கை அம்சங்களும் அடங்கும். 

பெரியவ ர்கள் தங்கள் அதிகார தோரணையைக் கொ ண்டுகுழந்தைக்குப் பற்பல இடையூறுகள் விளை விக்கின்றார்கள். இதைக் குழந்தை தன் புலன்களால் அறிந்துகொள்கிறான்.

பெரியவர்களின் செயலால் குழந்தைகளின் கட்டமைப்பு சின்னாபின்னப்பட்டு உருக்குலை கிறது. இதன் காரணமாக குழந்தையின் நடுமனதில் உயர்ந்தவனாக்குவதற்கு பதிலாக தாழ்ந்தவனாக்குவதற்குரிய  இடையூறுகள் தோன்றுகின்றன.


(தொடரும்)


LinkWithin

Related Posts with Thumbnails