கல்யாண காலம் இது. உறவுகள் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில்எதிர் எதிர்பாலின தகுதியுடைவர்கள் சேர்ந்து கொ ள்ளும் விழா.
காசு பார்த்து குடும்பம் பார்த்து மாப்பிள்ளை பார்த்து பெண்பார்த்து நிச்சயம் செய்து பெரியோ ர்கள்பேசி முடித்து நல்லநாளில் இணை ப்பு விழா செய்யும் நாளில் வரவேற்று அழைப்பிதழ் கொ டுத்துவிடுவார்கள்.
சாதரண மாய் தெரிந்தவர்களுக்கு ஒரு நாளை க்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திருமண ங்கள் நடைபெறும் தகவல் தெரிவித்து குறைந்தபட்சம் மூன்று அழைப்பிதழ்கள் வந்துவிடும்.
முக்கியதுவம் பெறும் அழைப்பிதழ்கள் முதல் இடம்பெறும்.
எனக்கு நீ வந்தால் உனக்கு நான் வ ருவேன் என்று எழுதப்படாத ஒப்பந்தித்தின் அடிப்படையில் திருமண ங்கள் வரவேற்பு என்று செல்லவேண்டும்.
உறவின ர்கள் திருமணம் நண்பர்கள் திருமணம் என்றால் கட்டாயமாக இரண்டு நாட்கள் செல்லவேண்டும். வேலை கருதி போவாது இருந்தால் நாங்களும் உங்க நல்லது கெட்டதுக்கு வரணுமா வேண்டமா என்ற கேள்வியை கேட்டு திண றடிப்பார்கள்.
தனியொ ரு வாகனம் என்றால் பிரச்சனை இல்லை . பேரூந்து பயண ம் என்றால் நசுங்கலும் கசங்கலுமாய் தான் செல்லவேண்டும். திருமண த்திற்கு செல்லவேண்டிய காலைவேளை களில் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளை சரியாய் செய்து முடித்து கிள ம்புவதற்கு தனியொ ரு பக்குவம் வேண்டும். இல்லாவிடில் காலை வேளை களில் ஏற்படும் வார்த்தை வாதங்களை தவிர்க்க முடியாது.
எது எப்படியாக இருந்தாலும் நம்கென்று நாலு பேர் வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகும் இத்தகைய சிரமங்கள் ஒன்றுமே இல்லாது போ ய்விடும்.




.jpg)