Showing posts with label பாம்பு. Show all posts
Showing posts with label பாம்பு. Show all posts

Monday, December 07, 2009

காணாமல் போன பாம்பு






குளம் குளத்தின் ஓரமாய் சென்ற வாய்க்கலின் தினமும் இறங்கி கால் அலம்பும்இடம் அருகே பாம்பு ஒன்று காத்திருக்கும் தன்னுடைய இரைக்காக அங்குள்ள கல்லின் மீது தன்னுடைய உடலை சுருட்டியப்படி தலையை தூக்கியவாறு நிற்கும்.

நடக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடி மறைந்துவிடும். தினசரி பார்வையில் படும் அதைப்பற்றிய பயம் இல்லாது வாய்க்காலுக்கு வருவதும் போவதுமாக இருந்தேன்.

ஒருநாள் இன்னொரு பாம்பை பார்த்தேன் தலையை மட்டும் தண்ணீரின் வெளியே நீட்டியப்படி நின்றது. சத்தம் கேட்டவுடன் தலையை உள்ளுக்குள் இழுத்தப்படி மறைந்தது.

மறுநாள் செல்ல அந்தபகுதி வந்தவுடன் மனது மிகுந்த எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்தியது. கண்களை உன்னிப்பாக்கி அந்தபகுதி யை ஆராய்ந்தப்படியேச் செல்ல முதல் நாள் தண்ணீரில் மறைந்து காணாமல் போன பாம்பு இன்றும் இரைக்காக படுந்திருந்தது தன்னுடைய நீண்ட உடலை சுருட்டியப்படி தலையை மேல் நோக்கியே வைத்திருந்தது.

சத்தம் கேட்டவுடன் மெதுவாய் ஊர்ந்து அருகில் இருக்கும் வளைக்குள் தன்னை இருத்தி கொண்டது. இரண்டு அடிகள் முன்னோக்கி ச்செல்ல அடுத்த பாம்பு வரவேற்றது வழக்கம் போலவே அதுவும் நகர்ந்து செல்ல மனது பயப்பட ஆரம்பித்தது.

அன்று முதல் அந்தபகுதி வந்தவுடனே மனதின் பரிதவிப்பு தொடங்கிவிடும். பயமும் எச்சரிக்கை உணர்வும் கலந்த கலவையாக அந்தபகுதிக்கு செல்வது போவதுமாக இருக்கபாம்பு குடும்பம் தொடர்ந்து அந்தபகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது.

Sunday, January 11, 2009

நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

கோயிலுக்கு போவல..

போ மாட்டியா..

எப்பா..அங்க ஒரு சாமி..அங்க ஒரு சாமி..

அந்த சாமி இருக்கலப்பா..கும்புட்டியா..

கும்புடலயா..

கும்புடலேன்னா என்னடா தம்பி பண்ணும்.

யான முட்டும்..

எப்ப..எப்பா யான முட்ட போவுதே..

உன்ன..என்ன யான முட்டாதே..

நா கும்புட்டேன் அந்தசாமி..

கல்லு பாம்பு இருக்குல்ல அது கொத்திபுடும்.

கல்லு பாம்புன்னா ..

கல்லுல இப்படி போவுல்ல அந்த பாம்புதான்.

இரண்டரை வயது பையன் தன்னுடைய அப்பாவிடம் நிகழ்த்திய உரையாடல்.
நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails