Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, July 14, 2010

குறி பார்க்கும் பிள்ளை



மடித்துப் போன  கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
 உயிர்ப்புகளாய்..

Wednesday, May 19, 2010

பரிதவிப்பு



அடித்து பெய்த
கோடை மழை
சுழன்றடித்த காற்று
கண் எதிரே
வந்து விழுந்த
மரகிளைகள்
தென்னமட்டைகள்
பிய்ந்து போன
விளம்பர பலகைகள்
அய்யோ…
எங்கள் கீற்றுவீடு

Saturday, November 14, 2009

எனை கடந்து















பின்னோக்கி

இழுக்கபட்ட மனது

மழை பெய்த

மாலை

வீடு திரும்பும்

பள்ளி சிறுவர்கள்

மழையில் நனைந்தப்படி

வரும் திசை

நோக்கிய கண்கள்

நான் நிற்கையில்

வாடிக்கையாய்

எனை கடந்து

செல்பவர்களின் நினைவு

வளர்ச்சியை நோக்கிய

மாற்றங்களில்

வேறு இடம் நகர்ந்து

காணாமல் போனவர்கள்

நான் நிற்கிறேன்

புதியவர்கள்

எனை கடந்து செல்கிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails