
போர்வை
இழுத்து மூடியப்படியே
படுத்துறங்கிய
அதிகாலை
விழிப்பு தட்டும்
ஒரு முகமாய்
எண்ணங்களால்
ஏதோ ஒரு
மந்திரம்
தியானம் செய்வதாய்
எண்ணங்கள்
தேய்ந்துதூக்கம்
திடீரென்று
விழித்தெழும்மனது
பதற்றமாய்
தன்னையே நொந்து
தொடர் நிகழ்வு
முயற்சியின்மை
தியானமாய்
தூக்கம்.

நடக்க முடியா
சூம்பிய கால்கள்
சுப்பன் போகிறான்
பூங்காவுக்கு
ராமன் போகிறான்
கோவிலுக்கு
ஏக்கமாய் எங்கள்
மனது
யார் துணை
தேடியும் யாரும்
இல்லை எங்களுக்கு
பெற்ற மனம்
பதற
அய்யோ ..
எம் புள்ளங்களா..
நான் இருக்கேனடா
உங்களுக்கு..
தள்ள என்கைகள்
ஊனம் இல்லை
தள்ளி வருகிறேனடா
நான் உங்களுடைய
கைவண்டியை
நான் பெத்த
மவனே...

மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த பயம்
மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த மகிழ்ச்சி
மனம்
போ என்றவுடன்
போக துணிந்த
கால்கள்
கட்டளைகள்
கிடைத்தவுடன்
செயல்களில்
புலன்களின் ஈடுபாடு
நிற்க துணிந்த
மனம்
சாக துணிந்த
மனம்
மனம் மட்டுமே
வாழ்வாய்
மனம் தான் என்ன?