Sunday, June 01, 2014

காலை விருந்தும் துவையலும்

உள்ளுரில்  இன்று புதுமணை புகு விழா  .

ஆளுங்கட்சிகாரர்கள் அமைச்ச பெருமக்கள் வரஇருந்ததால் ஊரே கட்சி கொடிகளால் விளம்பர தட்டிகளால்  நிறைந்து இருந்தது.

 மிக்கி மவுஸ் முகமூடி அணிந்தவர்கள் வரவேற்றார்கள்.

வாங்க ...சாப்பிடலாம் என அழைக்கப்பட...

சாப்பிடலாம் என நினைத்து சாப்பாட்டு பந்தலுக்குள்  நுழைந்தேன்.

எனக்கான  சாப்பாட்டு இலையின் முன் அமர   தொட்டு கொள்ளும் துவையாலாக இனிப்பு பாிமாறப்பட்டது.

அதைவிட கொஞ்சம் கூடுதலாக பொங்கல் பாிமாறப்பட்டது.

ஒரு இட்லி...மிகவும் குறைவாய் சட்னி சாம்பார்.

பரிமாற அமர்த்தபட்டவர்கள்  ஏனோ தானோ என்று கவனிக்க விருதோம்பல் வெறும்   தோம்பலாக  அமைந்தது.

வயிறு  நிறைய வாழ்த்து வரும் இங்கே என்னவரும் தெரியவில்லை.

Wednesday, May 28, 2014

வீணாக எறிந்த பொருள்

சில நாட்களுக்கு முன் கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நெடுநாட்களுக்கு முன்  நண்பர் கொடுத்த  ப்ளுடூத்  இர் போன் பயன்படாமல் அட்டைபெட்டியில்  அடைந்து கிடந்தது.

துாக்கி எறிந்து விடலாம் என நினைத்து பழைய  குப்பைகளுடன் ஒன்று கலந்து வைந்திருந்தேன். என்னுடைய முதலாளி எதற்கும்  எடுத்து வை பயன்படும் என்று சொல்லி எடுத்துவைத்தேன்.

எனக்கு கொடுக்கும் அந்த நண்பர் சொன்னார் இதை பயன்படுத்த வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால்  பயன்படுத்த அனுமதிப்பார்கள் எனறு சொல்ல   ... என்னிடம் அத்தகைய வசதியை பெறுவதற்குரிய  கைப்பேசி நாகரீகமானதாக அன்று இல்லை.

இன்று எதார்த்தமாக என்னுடைய நண்பர் ஒருவர் இத்தகைய கருவியை பயன்படுத்த  நான் தெரிந்து வைத்திருப்பை உண்மை படுத்தி கொள்ள அவரிடம் கேட்டேன்.

யார் சொன்னது?

செயல் வழியாகவே அவருடைய கருவியை என்னுடைய கைப்பேசி யில் இணைத்து காட்ட ..

விரைவாக கடை திரும்பிய நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Tuesday, May 27, 2014

நிறைய எதிர்பார்ப்பு

மோடி பிரதமர் .

அவரது சிந்தனை செயல்வடிவம் பெறப்பொறுத்திருக்க வேண்டும்.

ஒரு மாநில அரசியல்வாதி தேசிய அரசியல்வாதியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.

வாத விவாதங்கள்  அவரைப்பற்றி முன்னெடுத்து வைக்கப்பட   பொறுமையாய்   காத்திருப்போம்.

மோடி பிரதமா்.

காங்கிரஸ்  கவிழ்ந்தது.

தி.மு.க. தோற்றது.

பெரும் ஊழல்வாதிகளையே வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைக்கும் தைரியம் தி்.மு.க. விற்கு மட்டுமே உண்டு.

அ.தி.மு.க. சில பல கணக்குகளால் வெற்றியை ரசிக்க முடியாமல் நிறையவே தள்ளாடுகிறது.

தமிழகத்தை இன்னும் இன்னும்  சீர்மைப்படுத்த வேண்டிய செயல்கள் நிறையவே இருக்க  அ.தி.மு.க . தலைமை அவசரப்பட்டதாகவே தெரிகிறது.

தே.மு.தி.க . விற்கு சினிமா பாணி வசனங்களும் செய்கைகளும்  மக்கள் மத்தியில் ஓரளவிற்கு மேல் எடுப்படாது என்பதை இந்தேர்தல் உணர்த்தியிருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails